Categories
இலக்கியம் தமிழ்

இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரை

புத்தகப் பரிந்துரை.

பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

புத்தக முன் அட்டை

இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நிழல் கீழே விழாதா?
கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது.

மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இராஜ இராஜன் பிராமண ஆதரவாளரா?
தீண்டாமையை ஆதரித்தாரா?

மக்களின் நிலத்தைப் பிடுங்கி கோவிலுக்கும், பிராமணர்களுக்கும் தானமாக அளித்தாரா என்பதெல்லாம் பல கல்வெட்டு ஆதாரங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

இந்தப்புத்தகத்தை பாதி படிக்கும் முன்பே இராஜ இராஜ சோழனை முகப்புப் படமாக வைக்கும் அளவிற்கு நான் அவரின் பெருமை கண்டு வியந்தேன்.

தமிழர்களாகிய நாம் அனைவரும் கட்டாயம் இந்தப்புத்தகத்தைப் படித்து நமது பெருமைக்குரிய முன்னோரின் வரலாறு அறிய வேண்டும்.

ஒருவேளை இராஜ இராஜன் பிராமண அடிவருடி, மக்களின் நிலத்தைப் பிடிங்கினான் என்று தீர்க்கமாக நம்பும் கூட்டத்தைச் சேர்ந்தவராயினும், குறைந்தபட்சம் இதிலுள்ள ஆதாரங்களை வாசித்து அறிந்து, அதற்கு எதிர் வாதத்தை வைக்கலாம்.

அதை விடுத்து நமது பெருமைக்குரிய மாமன்னன் இராஜ இராஜனை இழிவாகப் பேசி ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்குதல் தவறு.

நாம் தொடர்ந்து நமது நினைவுகள் பக்கத்தில் இந்தப் புத்திகத்திலிருந்து சில சில துணுக்குகளை பதிவாகத் தொடர்ந்து தர இருக்கிறோம்.

ஆனாலும் முழுப் புத்தகமாக வாசிப்பது இன்னும் சிறப்பானது.

இது 2021 ஆம் ஆண்டின் சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி விருது பெற்ற புத்தகம் என்பது மேலும் ஒரு சிறப்பு.

அன்புடன் நினைவுகள்

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.