Categories
சிறுகதை தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சிலர்!

உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம். நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன. ஆனாலும் அதையும் தாண்டி,நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம். நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல. நமது தினசரி பணத்தேடலில் , […]

Categories
அரசியல் சிறுகதை தற்கால நிகழ்வுகள்

அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!

ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார். அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன. அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

பத்தாயிரம் பத்தாதேடா?

வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா! அப்படின்னு ஒரு பாடல் உண்டு. வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது. வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் விளையாட்டு

விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!

நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள்

விசில்- வெற்றியின் ஆயுதம்?

விசில். உலகத்திலேயே உன்னதமானது விசில். ஆரவாரத்தில் அடிப்பது விசில். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விசில். யாரையாவது கூப்பிடுவதற்கு அடிப்பது விசில். உடற்கல்வி ஆசிரியர் அடிப்பது விசில். வாட்ச்மேன் அடிப்பது விசில்.யாராவது வழிதவற நடந்தால் அவர்களை வழிநடத்த காவல்துறையினர் அடிப்பது விசில். தமிழனின் பாரம்பரியம் விசில். இரண்டாம் நூற்றாண்டிலேயே விசில் புழக்கத்தில் இருந்துள்ளது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியது விசில். கம்பரும் கூட கம்ப இராமாயணத்தில் விசிலின் பெருமை பற்றி பேசியிருக்கிறார். முதலில் தூது சென்ற அனுமன் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் பெருமிதம்.

குடிமைப் பொறுப்புகளை சரியாகச் செய்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். குடிமைப் பொறுப்புகள் என்பது என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சமூகத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்காகவும் தாமாக முன்வந்து செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். சட்டம் மற்றும் விதிகளை மதித்தல், வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவை இதில் முக்கியமானவை இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பது நமது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இளம் தலைமுறையின் சீரழிவைத் தடுக்க!

90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு. இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை. பாக்கெட்டில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

மகர ஜோதி மர்ம ஜோதியா?

படித்துப் பகிர்வது! நக்கீரன் இதழில் வந்த கதை. சபரிமலை மகர ஜோதி மர்மம்…. 🟢🔴🟢 சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது? மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திந்துச் செய்திருக்கலாமே? ( வெண்காரம் சம்பவம்)

சமூக வலைதளங்களின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலைபேசி மற்றும் சமூக வலைதள உபயோகங்கள் இல்லாத நபர்களாக இருப்பது அரிதாகி விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு அநியாயமான உயிரிழப்பு இந்த சமூக வலைதள காணொளி காரணமாக நிகழ்ந்ததை அறிந்து வருந்தி முடிப்பதற்குள் நேற்று இன்னொரு செய்தி நெஞ்சை உலுக்கியது. உடம்பைக் குறைக்க வேண்டுமெனக் கருதி வெண்காரம் என்ற பொருளை அளவு தெரியாமல் உட்கொண்டு ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இந்த உயிர்த்தியாகம் நமக்கான பாடம்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்தவனும் இருக்கிறான். பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கிப் படம் எடுத்தவன் நீதிமன்ற வளாகத்தில் சிரித்தவாறு கையசைத்து விட்டு வாய்தாவுக்கு வருகிறான். இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்களின் மத்தியில், பல வக்கிர எண்ணங்களைச் சுமந்து கொண்டு வெளியே நல்லவன் போல, நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நாமும் கெட்டவன் தான் என்ற ரீதியில் வாழும் பலரும் நிறைந்த இந்த உலகில், ஒரு மனிதன் தன் […]