Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
தொடர்கதை

அப்பா – தொடர்கதை- இறுதி பாகம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அங்கே கவனிக்க இயலாத காரணத்தால் மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ல் ஏற்றி வைத்திருந்தார்கள். எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு பையன் தெளிவாக இருப்பதாகவும், இன்னொருவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள். எவன் தெளிவாக இருக்கிறான்? எவன் ஆபத்தான சூழலில் இருக்கிறான் என்பதே தெரியவில்லை.இன்னொரு விஷயம், அந்த இன்னொரு பையன் யார் என்பதே எனக்குத்தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டல்லவா இருந்தான்? திடீரென ஆம்புலன்ஸ் உள்ளிருந்து […]

Categories
தொடர்கதை

அப்பா  தொடர்கதை – பாகம் 5

ஐசியூவில் அவன் என்னைப் பார்க்க மறுநாள் காலையில் வந்ததும் நான் சைகையில் அவனிடம் கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டியா என்பதே! அவனையும் அவன் அண்ணனையும் (பெரியப்பா பையன்) போய் சாப்பிட்டு வரும்படி சைகையில் சொல்லி அனுப்பினேன். வாய் பேச்சானாலும் சைகை ஆனாலும் பாசம் பாசம் தானே? எனக்கு படுத்த படுக்கையானது வருத்தமல்ல. ஆனால் இவன் பனிரெண்டு முடித்து கல்லூரி சேர, காந்திமதிக்கு மாப்பிள்ளை கிடைத்து கல்யாண ஏற்பாடுகள் நிகழும் தருணத்தில் படுத்து விட்டோம் என்ற வருத்தம் தான். […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம் 4

கடைத்தெருவிற்கு சென்று வண்டிக்கடையில் அவனுக்கு பிடித்த பாதுஷாவை வாங்கி கொடுத்து, முருகன் கோவிலில் சென்று அவன் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வீடு திரும்பினோம். மூன்று வேளைக்கு மூன்று விதமான உணவுப்பழக்கம் எல்லாம் அப்போது இல்லை.மதியம் செய்யும் சாப்பாடு தான் இரவுக்கும்.மதியம் காய்கறியுடன் சாப்பாடு. இரவு வேளைகளில் சேவு, மிக்சர், பக்கோடா போன்ற பண்டங்களை சேர்த்து சாப்பாடு. இன்றைய காலகட்டம் போல, அப்போது சுகர் பெரும்பாலானோர்க்கு இல்லை. அதனால் இரவு சாப்பாடு சாப்பிட தடை இல்லை. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

காற்றில் பறந்த ஆணையரின் ஆணை

காவல் துணையர் ஆணையர் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் கொடுத்த பேட்டி எல்லாம் சும்மா , மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை மேம்போக்காக உருவாக்குவதற்குத் தான் போல. அந்த அறிக்கை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போதே காற்றிலும் பறந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்தப்பக்கம் நல்ல விதமாக அறிக்கையை விட்டு , அந்தப்பக்கம், போக்குவரத்து காவல் அதிகாரிகளை வசூல் வேட்டைக்குத் துரத்தி விட்டார்கள் போல. இன்று எங்கள் பகுதி சந்திப்பில் […]

Categories
சினிமா தமிழ்

ஏஸ் – படம் விமர்சனம்

விஜய் சேதுபதி படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால், கூட்டம் கூட்டமாக சந்தோஷமாக மக்கள் வருகிறார்கள். படமே விஜய் சேதுபதி படம் என்றால் ஆளை விடுறா சாமி என்று கிளாம்பிவிடுவதாக சமீபத்தில் ஒரு கேலிப் புனைவுப் படம் அதிகம் பகிரப்பட்டது. ஆமாம், வரிசையாக அவர் நடித்த பல படங்கள் மக்களின் பொறுமையை சோதிக்கும் ரகமாகத்தான் இருந்தது. அதிலும் DSP படமெல்லாம் மரண அருவை என்று மக்கள் வெறுத்தது. ஆனால் அவரது 50 ஆவது படமான மஹாராஜா முதல் தரவரிசைப் […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம் 3

ஆமாம் நான் அப்பா ஆகிவிட்டேன். சரியாக நான்கு வார்த்தைகளில் சொல்லிவிட்டேன்.ஆனால் எத்தனை ஆயிரம் வார்த்தைகள் கோர்த்து, கண்ணதாசன் போல எத்தனை கவிஞர்களை வைத்து கவிபாடச் செய்தாலும் என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. என் வாழ்நாள் மொத்தத்தையும் இந்த ஒரு நொடியுடன் ஒப்பிட்டால், எனக்கு இந்த ஒரு நொடியே பெரியது.எனக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் இந்த பூமியின் சுழற்சியை இத்தோடு நிறுத்தியிருப்பேன். இந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.செப்டம்பர் 27, 1982. தமிழில் வெறும் 247 […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம்-2

பயணம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. விந்தணுக்கள் அண்டத்தை அடையும் முதல் பயணம் ஒரு மனித வாழ்வை உருவாக்கி வைக்கிறது.அது துவங்கி, நாலு கால், இரண்டு கால், மூன்று கால், இறுதியில் எட்டு காலில் செல்லும் ராஜ பயணத்தில் வாழ்க்கை முடிகிறது. அப்படி எட்டு கால் பயணம் போகும் வரைக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் என்பது இன்றியமையாதது தானே? எங்கள் காலத்தில் பயணம் கிடைக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலும் நாங்கள் சென்றது […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை- பகுதி 1

உன் உயிர்த்துளியில் ஒரு துளி தானே நான்?எனக்கு உயிர் கொடுத்த என் தந்தையே! உனக்காக நான் எழுதும் கதை. அப்பா! அப்பாவாகிய நான் என் அனுபவத்தை பகிரும் கதை! அப்பாவாகும் முன்பு வரை, என்னைப் பொறுத்த வரை அப்பா என்பது வெறும் வார்த்தையாகத்தான் உணரப்பட்டது.ஆனால் நான் அப்பா ஆன பின்பு, அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, அப்பா என்பது ஒரு தலைமுறைக்கான அடையாளம்,அப்பா என்பது அன்பின் வெளிப்பாடு,அப்பா என்பது தூய்மை,அப்பாவிலும் உள்ளது தாய்மை என்று உணரப்பட்டது. […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]