Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம்.

அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது.

கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான்.

அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது.

இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின கதை அப்படின்னு அந்த டோரா கதை சொல்லத் துவங்கியது.

முதல் பன்னி தன் வீட்டை வைக்கோல் வைத்துக் கட்டியிருந்த்து, ஒரு கோவக்கார நாய் அதைத் துரத்தியதும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

ஆனால் அந்த நாய் தன் பலத்தால் அந்த வீட்டை இடித்து விட்டது. அதனால் பன்னி பயந்து அதனோட அக்கா வீட்டுக்கு ஓடுச்சு.

அந்தப் பன்னியோட அக்கா, தன் வீட்டை குச்சிகளை வைத்துக் கட்டியிருந்தது. இரண்டு பன்னிகளும் அந்த நாயைக் கண்டு பயந்து வீட்டிற்குள் ஒளிந்து கொண்டது.

ஆனால் அந்த நாய் தன் பலத்தால் அந்த வீட்டையும் இடிச்சிருச்சு.

எனவே அந்த இரண்டு பன்னிகளும் நாய்க்கு பயந்து அதுகளோட மூத்த அக்கா வீட்டுக்கு ஓடுச்சுக.

அந்த மூத்த அக்கா தன்னோட வீட்ட செங்கல் வச்சு கட்டிருந்தா. அதனால அந்த நாயால அந்த வீட்ட ஒன்னும் செய்ய முடியல.

மூனு பன்னியும் 🐷 🐷 🐷 சந்தோஷமா வாழ்ந்துச்சு.

இவ்வாறாக கதை முடிந்தது. இது சிறுவர்களுக்கான கதை என்பதால் இதில் மிகப்பெரிய அர்த்தங்களோ, நீதியோ சொல்லப்படவில்லை.

ஆனால் நாம் நன்கு ஆராய்ந்தால் இதில் சில நீதிகளை உணரலாம்.

நாமும் அந்தப் பன்னிகளைப் போலத்தான்.

நாம் என்ன முயற்சி எடுத்து எதைச் செய்தாலும் அதை துவம்சம் செய்ய சில நாய்கள் உண்டு. நாம் தான் நம்மை வலுப்படுத்திக் கொண்டு அந்த நாய்களால் தகர்க்க முடியாத அளவிற்கு செங்கல் வீட்டைக் கட்டிக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அந்தப் பன்னிகள் என்ன காரணத்தினாலோ தனித்தனியாகப் பிரிந்திருக்கின்றன.

சுழலுக்கு ஏற்ப பிரிவினை என்பது ஏற்புடையது என்றாலும், ஒரு எதிரியைக் கையாளும் போது நமக்குள் ஒற்றுமை என்பது அவசியம் என்பது உணரப்படுகிறது.

நாம் சிறுவயதில் படித்த புறாக்கள் கதையும், நான்கு மாடுகளின் கதையும் ஒற்றுமையைப் பறைசாற்றும் கதைதானே!

பன்றிகளோ, புறாக்களோ, மாடுகளோ, எதனிடம் கற்றால் என்ன?

நீதியைக் கற்றால் நல்லது தான்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.