ஒரு கதை ஒன்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஒரு படகில், ஆற்றைக் கடக்க மூன்று மனிதர்கள் படகில் அமர்ந்தனர்.
மூவரும் நன்கு படித்த அளிவாளிகள்.ஒருவர் பேராசிரியர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் விஞ்ஞானி.
படகோட்டி துடுப்புப் போட்டு படகை ஓட்ட, மூவரும் அமைதியாய் ஏன் வருவானென்று உரையாடத் துவங்கினார்கள்.
உலகின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள்.
அவர்கள் மூவரும் பேசிக் கொண்டதை வேடிக்கை பார்த்தவனாகப் படகோட்டி துடுப்பைப் போட அவர்கள் இவனிடம் மெல்லப்பேச்சுக் கொடுக்கிறரார்கள்.
“ஏம்ப்பா நாங்க இவ்வளவு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுறோமே, நீ இதில் கலந்து கிட்டா என்ன?“ என்று கேட்க,
“சாமி நீங்க 3 பேரும் பெரிய படிப்பு படிச்ச மாதிரி தெரியுது, என்னென்னவோ பேசுறீக, நமக்கு அதுலாம் ஒன்னும் வெளங்கல“ என்று வெள்ளந்தியாகச் சொல்கிறான்.
இதைக் கேட்ட மூவரும் சிரித்து, அவனை கேலி செய்கிறார்கள்.
“படிக்காமல் இப்படி தற்குரியாகிவிட்டாய்.
சிறு வயதில் ஒழுங்காகப் படித்திருந்தால் இப்படி இன்று மூக்குடையும் வண்ணம் கேலிப் பேச்சுக்கு ஆளாகி இருக்க வேண்டாமல்லவா?“ என்று கடுமையாக கேலியும் பேச்சும் பேசினார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவன் மிகவும் மனம் நொந்து போனான்.
உலகில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது நான் எதையும் கல்லாமல் இப்படி வீணானகப்போனேனே என்று சொல்லி நொந்து போய் ஆற்றில் குதித்து விட்டான்.
மூவருக்கும் தங்கள் உயிர் கையில் இல்லை.
“வாடா, வந்து படகுல ஏறுடா, எங்களுக்கு யாருக்கும் படகு ஓட்டத் தெரியாது” என்று கெஞ்சினர்.
“இல்ல சாமி, உங்க முன்னாடி உட்கார்ந்து வரது எனக்கு அசிங்கமா இருக்கு, படகு கவிழ்ந்தாலும் பரவால , நீங்க நீச்சலடிச்சு வாங்க” என்றான்.
அவர்கள் மீண்டும், “யப்பா டேய், எங்கள மன்னிச்சிடு, எங்க யாருக்கும் நீச்சல் தெரியாது, தயவு செய்து வந்து படகுல ஏறு” என்று கெஞ்சினார்கள்.
அதற்கு அவன், “என்ன சாமி, ஏதேதோ உலக சுவாரஸ்யம்லாம் பேசுறீங்க, ஆத்துல போறப்ப நீச்சல் அவசியம்னு தெரியலியே?” அப்படின்னு கேட்க.
மூவரும் தாங்கள் கேலி பேசியது எவ்வளவு தவறு என்பதையும், ஒருவனுக்கு ஏதோ ஒரு விஷயம் தெரிந்திருப்பதால் அவன் கெட்டிக்காரன் என்பதோ, ஏதோ ஒரு விஷயம் தெரியாமல் இருப்பதால் முட்டாள் என்றோ முடிவு செய்வது தவறு என்பதை உணர்ந்தார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் தனித்துவத்தில் கெட்டிக்காரர்கள் தான்.