Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம். அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

உண்மை சுடுமெனில்?

உண்மை சுடுமெனில்? பொய் சொல்வது தவறில்லையே? வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். என்ற வள்ளுவனின் வாக்கைக் கருத்தில் கொள்ளலாமே! சில நேரங்களில் உண்மையை விட பொய் சிறப்பு என்பதை விளக்கும் குறள் தானே இது? திருக்குறளையே எத்தனை முறை தான் உதாரணமாகச் சொல்வது என்றால், வேறு சிலவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே! கண்ணு உனக்கென்னடா ராசா? நீ பாக்க ராசா மாதிரி இருக்க என்று தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்லும் பெற்றோர்களின் கூற்று பல இடங்களில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மூட்டைப்பூச்சியைக் கொல்ல வீட்டைக் கொளுத்தலாமா?

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம். அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல. இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு. அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இது விபத்தல்ல, கொலை!

கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல. ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆமாம் இது விபத்து தான்.ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா? […]

Categories
சினிமா

Retro- திரை விமர்சனம்

சினிமா என்றாலே கதாநாயகனைப் பொறுத்து முதலில் முக்கியத்துவம் பெறுகிறது.அதைத் தாண்டி தான் மற்ற விஷயங்களெல்லாம் பேசப்படும். இந்த வாரமும் அப்படித்தான் ஒரு முக்கியமான கதாநாயகனின் படம் , அதுவும் ஒரு வெற்றிகரமான இயக்குனரின் இயக்கத்தில் வெளியானதால் அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டது. போதாக்குறைக்கு கன்னிமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சிறுசு முதல் பெருசு வரையிலான மக்கள் மனதைக் கவர, இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் வலுத்தது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால், முழுமனதுடன் பதில் சொல்ல இயலாது. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

உச்சகட்ட கடுப்பேற்றிய ரயில் பயணம்.

பயணம் என்றாலே மகிழ்ச்சி தான், அதுவும் ரயில் பயணம் என்பது ஒரு தனி அனுபவம் தான். அப்படியான ரயில் பயணங்கள் நமக்கு சில நேரங்களில் கசப்பான அனுபவத்தையும் தரும். அதை நாம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். அதைப்போலவே கடுப்பேற்றிய இன்னொரு பயணத்தைப் பற்றிய பதிவு தான் இது. பணிநிமர்த்தமாக ஹைதராபாத் பயணம்.தனக்குத் தேவை இருக்கும் வரைக்கும் தான் கடவுளுக்கும் இங்கே அர்ச்சனை என்ற ரீதியாக, எங்களை தங்கள் பணிக்கு அழைத்த தனியார் நிறுவனம், சென்னையிலிருந்து ஹைதராபாத் […]

Categories
சினிமா

டூரிஸ்ட் பேமிலி- திரை விமர்சனம்.

ஒரு நல்ல சினிமா சொல்லாமலே வெல்லும் என்று நிரூபித்திருக்கிறது, இந்த வாரம் சத்தமே இல்லாமல் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழ்நாட்டிற்குள் திருட்டுத்தனமாக எந்த வித அனுமதியும் இன்றி நுழையும் ஒரு குடும்பம் என்ன ஆனது எப்படி ஜீவித்தது என்பதே படத்தின் மையக்கதை. அந்தக் குடும்பம் ராமேஸ்வரத்தில் நுழையவும், அங்கே ஒரு குண்டு வெடிப்பதும் என ஒரு மர்ம முடிச்சு படம் முழுக்க அந்தக் குடும்பத்தைப் […]

Categories
தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாற்றப்படும் நாம்!

2016 ஆம் ஆண்டில் நான் எனது முகப்புத்தகத்தில் எழுதியிருந்த விளம்பர ஆதிக்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் தந்திரம் பற்றிய ஒரு பதிவு.அன்றே நண்பர் சிவப்ரேம் இந்தப்பதிவைப் படித்து வியந்து பாராட்டினார். பதிவின் சாராம்சமான, இளநீர் பெட் பாட்டிலில் அடைத்து விற்கப்படலாம் என்ற விஷயம்,, வெளிநாடுகளில் துவங்கி விட்டதாகச் சொன்னார்.இன்று இங்கேயும் கூட வந்து விட்டது அந்த நிலை. இனியாவது மாறுவோமா? பதிவு கீழே! பிச்சைக்காரன்.. ஒருவனிடம் ஒரு ரூபாய் பெறுகிறான்.. ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 15 பேர்.. 12 […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு. சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது. அதில் ஒரு தாயார், எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக் குறிப்பிட்டு, […]