Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

உலகின் கேடுகெட்ட உயிரினம்- மனிதன்-1.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

ஔவையின் இந்த வாக்கிற்கு ஏற்ப, இந்த உலகில் இன்றும் மழை பெய்யக் காரணமான சில நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இணையத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்த விஷயம் தான்.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் ஒரு நகைக்கடைக்குச் சென்றதும், அந்த முதியவர் தனது அறியாமை காரணமாக வெறும் 1120 ரூபாயோடு மனைவிக்குத் தங்க நகை வாங்க வந்ததையும் அறிந்த கடைக்காரர், அந்த முதியவரிடம் வெறும் 20 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, தன்னை ஆசீர்வதிக்கும் படி கூறி அவர்களை வணங்கி விட்டு கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகையை அவர்களுக்கு அன்புப் பரிசாக அளித்துள்ளார்.

இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டினாலும் கூட, இதையும் சில வக்கிர புத்தி வன்மவாதிகள் விமர்சித்துத் தங்கள் வன்மத்தையும் கக்கி இருப்பது நாம் இவ்வளவு கேவலமான ஜென்மங்களையும் இணைத்து தான் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று மனம் வருத்தத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

அந்தக் கடைக்காரர் நகையைக் கொடுத்தால் அதை ஏன் வீடியோ எடுக்கிறார்?
அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதிலேயே இந்தக் காசை சம்பாதித்து விடுவார் என்றெல்லாம் தங்கள் மனதில் உள்ள வன்மத்தைக் கக்கி இருக்கிறார்கள்.
இவர்கள் எந்த மாதிரி ஆட்கள் என்றால், பிறருக்கு ஒரு சின்ன உதவியும் செய்யாமல் பூமிக்கு பாரமாக வாழும் தண்டப் பிறவிகள். இவர்களுக்கு வியாதி என்னவென்றால், இவர்களைப் போலவே பிறரும் தண்டப்பிறவிகளாக இருந்து விட்டால் இவர்களுக்குக் குற்ற உணர்ச்சி வராதல்லவா.

அப்படி இவர்களைப் போல அல்லாமல் பிறருக்கு உதவும் சிலர் உயிர் வாழ்ந்தால், இவர்களுக்கு அது எரிச்சலைத் தரும்.

ஒரு பத்து ரூபாய் கொடுத்து தேநீர் அருந்தும் சாதாரண ஒருவர் கூட, A Tea after a heavy work is like heaven என்றவாறு ஏதாவது வசனம் எழுதிக் கொண்டு தன்னை சினிமா கதாநாயகன் போல பாவித்துக் கொண்டு கலர் கலராக புகைப்படம் பதிவிடும் இன்றைய சமூகத்தில், ஒரு 93 வயது முதியவர், அறியாமை காரணமாக 1120 ரூபாயோடு தங்க நகை வாங்க வந்திருப்பதும், அதைப்புரிந்து கொண்ட அந்த முதலாளி அவருக்கு உதவ நினைப்பதையும், அந்தக் கடையில் வேலை செய்யும் ஊழிர்கள், படம் பிடிக்காமலா விடுவார்கள்.

சரி அந்த முதலாளியே கூட படம் பிடிக்கச் சொல்லியிருக்கட்டுமே.
தன் கடைக்கு அது ஒரு விளம்பரம் தானே!

இன்று விளம்பரம் இல்லாமல் வியாபாரங்கள் இல்லையே?

எப்படிப்பார்த்தாலும் 30000 ரூபாயை இனாமாக எவனும் தூக்கித் தர இயலுமா இந்தக் காலத்தில்?

என்னைப் போன்ற பலருக்கு அது மாதச் சம்பளம் அல்லவா.
இப்படி ஒரு நல்ல சம்பவத்தைக்கூட பல கேடு கெட்ட மனிதப் பிறவிகள் இழிவுபடுத்திப் பேசுவதும், ஒட்டுமொத்த விமானமும் எரிந்த போதும் நீ பிழைத்து விட்டாயே என்று மகிழாமல் , பிழைத்த அந்த நபர் மீது தேவையில்லாத விஷயங்களைப் பொருத்தி தன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்!

இதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழ வேண்டியுள்ளது.

உலகிலேயே கொடிய உயிரினம் என்றால் மனிதன் தான்.

ஏனென்றால் எல்லா சிங்கங்களும் ஒரே மாதிரியாக சமாளித்து விடலாம்.எல்லா ஓநாய்களையும் , எல்லா நரிகளையும் ஒரே மாதிரி யுக்தி கொண்டு சமாளித்து விடலாம்.

ஆனால் மனிதனில் தான் பல விதம்.

எது நரி போன்றது, எது ஓநாய் போன்றது, எது பிணம் தின்னி, எது மலம் தின்னி என்பதையெல்லாம் பார்த்துக் கண்டறிய இயலாது.

பார்ப்பதற்கு எல்லாம் பகுமானமாகத்தான் இருக்கும்.
ஆனால் பழகிப் பார்த்தால் தான் நாறும்.

மூதாட்டியையும் பாலியல் வன் புணர்வு செய்யும் இனம் , சிறு குழந்தைகளையும் வன்புணர்வு செய்யும் மோசமான உயிரினம் இதுவே!

எல்லாவற்றையும் சகித்தும், கடந்தும், தான் ஆக வேண்டும்.

நம்மால் முடிந்தால் மழைக்குக் காரணமாக இருப்போம், அல்லது மழைக்குக் காரணமான நல்லோர்க்குப் பக்க பலமாக இருப்போம்.

இந்தப் பதிவு, இந்தக் குமுறல் வெறும் சிறு பகுதி தான்.இனியும் தொடரும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.