Categories
சிறுகதை

துணிந்து செய்!- சிறுகதை

படித்ததில் பிடித்தது தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழிலதிபர் ஒரு காலத்தில் ஒரு பெரிய வைரத்தை வாங்கினார் – ஒரு முட்டையின் மஞ்சள் கரு அளவு. ஆனால் கல்லில் ஒரு விரிசல் ஓடுவதைக் கண்டுபிடித்தபோது அவரது உற்சாகம் விரைவில் ஏமாற்றமாக மாறியது. ஒரு தீர்வை எதிர்பார்த்து, அவர் அதை ஆலோசனைக்காக ஒரு நகைக்கடைக்காரரிடம் சென்றார். நகைக்கடைக்காரர் அந்த வைரத்தை கவனமாகப் ஆராய்ந்து, “இதை இரண்டு சரியான வைரங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றும் அசல் கல்லை விட அதிக மதிப்புள்ளவை. ஆனால் ஒரு […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

S.I.R- நமது உரிமை நிலைநாட்டப்படுமா?

SIR – Special Intensive Revision.சிறப்பு தீவிர திருத்தம் இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது? இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க. சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான். ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு? போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வராமல் காத்திடுவோமா?

வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் […]

Categories
இலக்கியம் தமிழ்

கபிலர் பேசுகிறார்!

என் அருமைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வணக்கங்கள். என் பெயர் கபிலன்.கபிலர் என்று தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவன். தோராயமாக தமிழ் படித்தவர்கள் திடுக்கென குழம்பலாம், கம்பனா? கபிலனா?நமக்குக் கம்பர் தானே தெரியும்?இவர் யார் கபிலர் என்று. என்னை நினைவுபடுத்ததத்தான் இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன். நான் குறிஞ்சித் திணையில் கவி பாடுவதில் பெயர் பெற்றவன்.குறிஞ்சித் திணை என்பது நினைவிருக்கிறது தானே?மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது. அதென்னப்பா ஓரவஞ்சணை?மற்ற நிலங்களான, முல்லை , மருதம் , நெய்தல் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

சாதித்த தங்க மங்கைகள்!

திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்ல!தூக்கிக் கொண்டாடவும் வைத்திருக்கும் இந்திய அணி. சிறிது நட்களுக்கு முன்பு கூட இது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்று தான் நம்மால் குறிப்பிடப்பட்டது.ஏனென்றால் அவ்வளவு பிரபலமாகவில்லை, நம் மனதில் அந்த அளவிற்குப் பதியவில்லை. ஆனால் இன்று ஆண்களுக்குப் பெண்கள் நிகரானவர்கள், ஏன் அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று சாதித்துக் காட்டுவோம் என்று 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் […]

Categories
கருத்து சிறுகதை

ஆறறிவுள்ள மனிதராவோமா?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன கதை .தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள். இடம்: கோவில். நல்ல கூட்டமான கோவில். அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர். ஏங்க க்யூல வரக்கூடாதா , […]

Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

திரும்பிப் பார்க்க வைத்த இந்தியப் பெண்கள் அணி!

தலைநிமிரந்து பார்க்கிறது இந்தியா ! திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப்பெண்கள் கிரிக்கெட் அணி. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்றால் தூக்கிப் பிடிக்கவும் தாங்கி நிற்கவுமர் கோடான கோடி ரசிகர்கள் உண்டு. ஆனால் பெண்கள் கிரிக்கெட் அணி இப்போது தான் ஓரளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்தாலே நாம் இதை விளங்கிக் கொள்ளலாம்பாத்திர சோப்பிலிருந்து துணி துவைக்கும் பவுடர் வரை அனைத்தையும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தான் விற்று வருகிறார்கள். இவ்வளவு பேசுறியே செவ்வாழ நீ […]