Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

மனிதர்கள் மிருகமாகலாம், ஆனால் ஒருபோதும் மிருகங்கள் மனிதனாக முடியவே முடியாது.ஏனென்றால் அவற்றிற்கு ஆறாம் அறிவு கிடையாது.அவைகளுக்கு நாகரீகம் தெரியாது. விஞ்ஞான வளர்ச்சி புரியாது. அதை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் தெரியாது. மிருகங்கள் தனது சுபாவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது கடினம். ஒரு அழகான மானைப் பார்த்தால் சிங்கம் ரசிக்குமா? அல்லது புசிக்குமா? இயற்கையின் படைப்பு மான்களைப் புசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை சிங்கங்கள் . அப்படியே தான் இன்றளவிலும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவை- அடிப்படை ஒழுக்கம்!

தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும். தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட […]

Categories
சினிமா

சிறை- திரை விமர்சனம்.

சினிமா- சிலரது பேராவல், கனவு, லட்சியம்.அப்படி ஒருவரின் முயற்சியில் உருவாகும் சினிமாக்கள் என்றுமே மனதிற்கு நெகிழ்ச்சி தான். அப்படியொரு நெகிழ்ச்சியான மறக்க முடியாத சினிமாவாக அமைந்திருக்கிறது இந்த வாரம் வெளியான சிறை திரைப்படம். காவல்துறையில் பணிபுரிந்தாலும் தனது கனவான சினிமாவை நோக்கி வந்த தமிழ் அவர்களின் டாணாக்காரன் படம் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியதோடு அல்லாமல், காவல்துறை பயிற்சியில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக வெளிக்கொணர்ந்தது.அது ஒரு அர்த்தமுள்ள சினிமாவாக அமைந்ததோடு அல்லாமல் நமது நெஞ்சங்களையும் கவர்ந்தது என்பதில் […]

Categories
அரசியல் சினிமா நினைவுகள் மறைவு

கேப்டனுக்கு நினைவஞ்சலி

ஒரு மனுஷனோட புகைப்படம் இன்று இணையமெங்கும் நிறைந்திருக்கிறது. அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி மாற்றுக் கட்சியினரும் ,அவரது மதத்ததைத் தாண்டி மாற்று மதத்தினரும், அவரது ரசிகர்களைத் தாண்டி பிற சினிமா நாயகர்களின் ரசிகர்களும் என்று பாகுபாடுகள் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மாமனிதன். இவர் கைகள் அன்னமிட்டு சிவந்த கைகள்.இவரது பிறப்பு கர்ணனின் மறுபிறப்பு.கலியுகத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன் என்று எல்லோராலும் போற்றப்படும் மனித தெய்வம் மறைந்த நாள் இன்று. இரண்டாடுகள் ஆகியும் […]

Categories
கருத்து சிறுகதை தகவல் தற்கால நிகழ்வுகள்

சம வேலைக்கு சம ஊதியம்.

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார். அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு. ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து […]

Categories
சினிமா

ரெட்ட தல – திரை விமர்சனம்

பொதுவாக ஒரு நடிகரிடம் ஏதாவது விஷயத்தைச் சொல்லி அவரைக் கவர்ந்து விட்டால், அது இயக்குனரின் வெற்றி தான். அந்த நடிகரும் ஒப்புக் கொண்டு, அந்த சினிமாவைத் தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் படத்தை இயக்கி சந்தைப்படுத்தி விடலாம். ஏதாவது விடுமுறை தேதிகளில் படம் வெளியானால் குறைந்தபட்ச லாபத்தோடு படம் வெற்றியடைந்து விடும் என்ற நோக்கத்துடன் சில படங்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது முற்றிலும் வியாபார பாணியில் எடுக்கப்படும் படங்கள். சில படங்கள் கருத்து ரீதியாக வெளியாகும்.அதாவது ஒரு பெரிய […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டம்.இந்த திட்டத்தைப் பற்றி பல நேர்மறை மற்றும் எதிர்மறை பேச்சுகளும் விமர்சனங்களும் இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தினால் எந்தவொரு முழுமையான பயனும் இல்லை, மேலும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் காரணமாக விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகிப் போனது என்ற பல விமர்சனங்களும் இருந்தது. இது விமர்சனம் மட்டுமே அல்ல. உண்மையும் கூட. ஒரு புறம் பாமர ஏழை […]

Categories
சினிமா

அவதார்- திரை விமர்சனம்

ஒரு நல்ல உணவு. மிக அருமையான ருசி . அதை மனம் விட்டுப் பாராட்டிய பிறகு மறுநாளும் அதே ருசியுடன் அதே உணவு பரிமாறப்பட்டால்? நேத்து நல்லா இருந்துச்சு. இன்னைக்கும் அதே மாதிரி நல்லாதான் இருக்கு என்று சிறிய சலிப்புடன் ஏற்றுக் கொள்வோம். மீண்டும் அடுத்த நாள் அதே உணவு பரிமாறப்பட்டால்? ஏங்க நல்லா இருக்குன்னு சொன்னது குத்தமா ? தினமும் அதையே போட்டா மனுஷனுக்கு வெறுத்துப் போயிடாதா? என்ற கேள்வி வரும்தானே? அதே கேள்வி தான் […]