மங்களம் மங்களம் நித்ய சுப மங்களம் மங்களம் என்றொரு பாடல் உண்டு. மார்கழி மாத பஜனையின் போது கார்த்திகை மாத சோமாவார பஜனை துவங்கி, மார்கழி முழுக்க விடியற்காலை பஜனை பாடி, தை 1 ஆம் தேதி அதையும் முடித்து, பிறகு அந்த பஜனை காலத்தல் வசூலான பணத்தில் பிரசாதம் தயாரித்து படையலிட்டு பஜனை பாடி பொதுமக்கள் அனைவருக்கும் பரிமாறி கணக்கு முடிக்கும் ஒரு நாள்.அந்நாளில் இறுதிப் பாடலாக இந்த மங்களம் என்ற பாடலைப் பாடுவோம். நாம் […]
Month: January 2026
விசில்- வெற்றியின் ஆயுதம்?
விசில். உலகத்திலேயே உன்னதமானது விசில். ஆரவாரத்தில் அடிப்பது விசில். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விசில். யாரையாவது கூப்பிடுவதற்கு அடிப்பது விசில். உடற்கல்வி ஆசிரியர் அடிப்பது விசில். வாட்ச்மேன் அடிப்பது விசில்.யாராவது வழிதவற நடந்தால் அவர்களை வழிநடத்த காவல்துறையினர் அடிப்பது விசில். தமிழனின் பாரம்பரியம் விசில். இரண்டாம் நூற்றாண்டிலேயே விசில் புழக்கத்தில் இருந்துள்ளது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியது விசில். கம்பரும் கூட கம்ப இராமாயணத்தில் விசிலின் பெருமை பற்றி பேசியிருக்கிறார். முதலில் தூது சென்ற அனுமன் […]
தமிழ்நாட்டின் பெருமிதம்.
குடிமைப் பொறுப்புகளை சரியாகச் செய்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். குடிமைப் பொறுப்புகள் என்பது என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சமூகத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்காகவும் தாமாக முன்வந்து செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். சட்டம் மற்றும் விதிகளை மதித்தல், வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவை இதில் முக்கியமானவை இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பது நமது […]
90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு. இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை. பாக்கெட்டில் […]
திரௌபதி-2- திரை விமர்சனம்
திரௌபதி-2 . திரௌபதி படம் உருவாக்கிய சர்ச்சை போல இந்தப்படம் பெரிய சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும், எல்லோரும் மனதார இதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஏனென்றால் இது சுல்தானியர்கள் அதாவது இஸ்லாமிய மன்னர்கள் இந்திய நாட்டில் குடியேறி ஆட்சி செய்த போது இங்குள்ள மக்களிடம் எப்படி வரி வசூல் செய்தார்கள், பெரும்பாலானவர்களை எப்படி தனது மார்க்கத்திற்கு மாற்றினார்கள் என்பதை விளக்கி , அதை எதிர்த்துப் போராடிய ஒரு தமிழ்நாட்டு் மன்னரின் வரலாற்றைத் தழுவி எடுத்த படம். […]
மகர ஜோதி மர்ம ஜோதியா?
படித்துப் பகிர்வது! நக்கீரன் இதழில் வந்த கதை. சபரிமலை மகர ஜோதி மர்மம்…. 🟢🔴🟢 சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது? மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக […]
சமூக வலைதளங்களின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலைபேசி மற்றும் சமூக வலைதள உபயோகங்கள் இல்லாத நபர்களாக இருப்பது அரிதாகி விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு அநியாயமான உயிரிழப்பு இந்த சமூக வலைதள காணொளி காரணமாக நிகழ்ந்ததை அறிந்து வருந்தி முடிப்பதற்குள் நேற்று இன்னொரு செய்தி நெஞ்சை உலுக்கியது. உடம்பைக் குறைக்க வேண்டுமெனக் கருதி வெண்காரம் என்ற பொருளை அளவு தெரியாமல் உட்கொண்டு ஒரு […]
பகிர்வு! தமிழ்நாட்டு நாட்டுப்புறக்கலைகளின் பட்டியல்.
பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்தவனும் இருக்கிறான். பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கிப் படம் எடுத்தவன் நீதிமன்ற வளாகத்தில் சிரித்தவாறு கையசைத்து விட்டு வாய்தாவுக்கு வருகிறான். இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்களின் மத்தியில், பல வக்கிர எண்ணங்களைச் சுமந்து கொண்டு வெளியே நல்லவன் போல, நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நாமும் கெட்டவன் தான் என்ற ரீதியில் வாழும் பலரும் நிறைந்த இந்த உலகில், ஒரு மனிதன் தன் […]
தலைவர் தம்பி தலைமையில் – திரை விமர்சனம்.
2026 பொங்கலுக்கு என்னனவோ எதிர்பார்ப்புகள் இருந்த சினிமா ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி படங்கள் வெளியாகாமல், ஒரு பெரிய படத்தின் வெளியீடு பிரச்சினை காரணமாக எதிர்பாராமல் இரண்டு படங்கள் வெளியானது. வெளியான பராசக்தி படமும் கூட மிகப்பெரிய அளவில் வெற்றி என்ற பெருமையை அடைந்ததா என்றால் முழுமையாக என்று சொல்லிவிட இயலாது.அந்தப்படம் விஜய் அவர்களின் படத்திற்குப் போட்டி என்று விஜய் ரசிகர்கள் கோபம் கொண்டு சிலர் படத்தைப் புறக்கணிக்கிறேன் என்று கிளம்பியதாலும், அரசியல் காரணங்களாலும் அந்தப்படம் சிறிய பின்னடைவைச் […]