Categories
தற்கால நிகழ்வுகள்

தேவையா சாமி இது?

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்..

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’

இது நமது அதிமுக வின் முன்னாள் ஒப்பற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமாவில் வந்த பாடல் வரிகள்.
இந்தப் பாடல் வரிகளை இப்போது அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்திப் பதவியில் அமர ஆசைப்படும் அவரது விசுவாசிகளுக்குப் பாடிக் காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

ஆமாம் தற்போதைய அதிமுக, அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலையமையில் அதிமுக வின் அனைத்து உரிமைகளையும் வைத்திருக்கும் அதிமுக அணி , பாஜக வுடன் கூட்டணி சேர்ந்திருப்பது தான் இப்போதைய அரசியல் விவாதம்.

அதிமுக அணி முன்னாளில் அம்மையார் இருந்த போது பாஜக வுடன் எலியும் பூனையுமாக இருந்ததை நினைவில் கொள்ளாவிட்டாலும், சில நாட்களுக்கு முன்பு மும்மொழிக்கொள்கை என்ற விஷயத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான ஒரு திட்டத்தை மக்களிடையே புகுத்த நினைத்த அதே கட்சியுடன் தனது சுயலாபத்திற்காக கூட்டணி அமைத்திருப்பது எந்த ரகம்?

இரு மொழிக்கொள்கை தான் எங்கள் கொள்கை என்று தமிழக மக்களிடையே ஒரு உருட்டு, வாங்க ஜீ் நாம சேர்ந்து வெற்றி பெறுவோம் என்று பாஜகவிடம் ஒரு உருட்டு.
இப்படி உருட்டி உருட்டி கட்சியை உருட்டச் செல்ல வேண்டிய கட்டாயம் எடப்பாடி அவர்களுக்கு.

ஏனென்றால் அவர் வைத்திரு்கும் தற்போதைய அணியைக் கொண்டு தனித்து நின்று கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்த முடியும் என்ற எண்ணம் குறைந்திருக்கலாம்.
அல்லது பண மாஃபியா ஆன பாஜக அதிமுக வை மிரட்டி இந்தக் கூட்டணியை அமைத்திருக்கலாம்.

நேற்று கட்சி துவங்கிய விஜய் அண்ணா கூட கொள்கையை விட்டுத்தராத போது அதிமுக விற்கு இப்படி ஒரு கூட்டணி அவசியமா?

சரி அது அவர்கள் உரிமை
ஆனால் ஓட்டு நமது உரிமை..

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.