Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில்.

தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம்.

அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள்.

நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்…

அடேயப்பா, இதுவல்லவா நட்பு?

சாப்பிட்டு முடியும் சூழ்நிலையில்தான் ஞாபகம் வந்த்து.

இன்னும் தண்ணிக்காரன் கேன் தண்ணீர் போடவில்லை. ஒரே ஒரு பாட்டிலில் கிட்டதட்ட அரை லிட்டர் தண்ணீர் மட்டுமே மிச்சம்.

இருவருக்குமே பயங்கர தாகம்.

ஒருவன் தாகத்தில் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க, தாகமடங்காமல், கவனிக்காமல் கிட்டதட்ட கால் லிட்டரை தாண்டி குடிக்க முயன்ற போது.

மற்றொருவன் அவன் குரல்வளையைப்பிடித்து பாட்டிலைப் பிடுங்கி மீதி தண்ணீரைக்குடித்தான்.

அவ்வளவுதான்.

???#@@₹@@##??#&;;%%::

தண்ணீர்!!!!!!

சேமிப்போம் தண்ணீரை…

நாளைய தலைமுறையின் நல்வாழ்வுக்காக!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.