Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒரு மாதிரியான உலகமிது!

ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்..நல்லவர்களும் இருக்கிறார்கள்.
சுழன்றால் என்ன நின்றால் என்ன? நல்லவர்கள் பாதிக்கப்படுவார்களே?

எனது கண்முன்னே நடந்த அநியாயம். பழையது என்றாலும் நினைவிலிருந்து நீங்காத ஒன்று.

ஒரு சுமாரான அளவிலான காய்கறி கடையில், கல்லாவில் இருந்தது ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்…அவரிடம் வந்து ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை ஆசாமி, ஏதோ ஒரு பொருளை வாங்கிவிட்டு 2000 ரூ தாளை நீட்டினார்..

என்னப்பா இது 60 ரூ பொருளை வாங்கிட்டு 2000 தாளை தருகிறாயே என்று அந்த அம்மா கடிந்து கொண்டாலும், அந்த ஆள் வேறு பணம் இல்லை என்று கூறிய காரணத்தால், மீதி 1940 ரூபாயை கொடுத்து விட்டார்கள்..

சில்லறை வாங்கி எண்ணிப்பார்த்த ஆசாமி, ஏமா அது 40 ரூ தானே? நீ என்ன 60 ரூ எடுத்திருக்க? என்று கேள்வி எழுப்பினார்..

ஏற்கனவே கடுப்பிலிருந்த அம்மா, இன்னும் வெறி ஆகி, ஏம்ப்பா, நான் எப்ப 40 ரூவா சொன்னேன், 60 தான் சொன்னேனு சொல்ல, இல்லம்மா, நீ பொய் சொல்ற , இது மற்ற கடைகளில் 40 ரூ தான் என்று அந்த ஆள் விவாதம் செய்ய, அந்தம்மா” இந்தாப்பா உன் 2000 ரூ , என்று பணத்தைக்கொடுத்து விட்டு , பொருளையும், மீதி சில்லறையையும் வாங்கி விட்டு அவரை அனுப்பி விட்டார்கள்.

எங்களிடம் புலம்பிக்கொண்டிருந்தார்கள், பாருங்களேன், நான் பொய் சொல்லுதேனு சொல்லுதாரு..இத எவனாச்சும் 40 ரூவாக்கி தருவானா? என்று புலம்பிக் கொண்டே, அடுத்த ஆளுக்கு சில்லறை தர கல்லாவை திறந்த போது அதிர்ச்சி ஆனார்.

அந்த ஆசாமி, மீதி சில்லறையைத் திரும்பத் தரும்போது 1000 ரூவாயை லவுத்திவிட்டு, 940 ரூபாயை சுருட்டி மடக்கி, கோபமாக அந்தம்மா கையில் திணிப்பது போல, ஏமாற்றி விட்டு ஓடியிருக்கிறான்..

அந்தம்மா பாவம், புலம்பித்தள்ளிவிட்டார்கள்.
நானும் அந்த கடை பையனும் வண்டியில் கூட சிறிது தூரம் சென்று நோட்டமிட்டோம்

அந்த ஆள் சிக்கவில்லை..

ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு 5 நிமிட இடைவெளியில் சுருட்டி விட்டான்..எனக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு நாள் சம்பளம்.அந்த வயித்தெரிச்சல் தாங்காமல் தான் நானும் அவரைப் பிடித்து விடலாமென்று முயன்றேன்.

மனது வெறுத்து தான் போகிறது.இதுமாதிரியான விஷயங்களைப் பார்க்கும் போது.


அப்படியே மனநோவுடன், வண்டியில் வந்தபோது ,எனது வஅண்ட் சைடு ஸ்டாண்ட் ஸ்பிரிங் எங்கோ கழண்டு விழ, ஒரு காலால் சைடு ஸ்டாண்டை முட்டுக்கொடுத்தவாறே ஓட்டி ஒரு மெக்கானிக் கடையை அடைந்தேன்.

அந்த சைடு ஸ்டாண்டை கழட்டியது , பள்ளியில், ஏழாவது வகுப்போ, எட்டாவது வகுப்போ படிக்க வேண்டிய சிறுவன்.
இன்ஜின் சூட்டை பொருட்படுத்தாமல், மல்லுக்கட்டி , 15 நிமிடம் போராடி, இறுகிப்போன அந்த ஸ்டாண்டஐ கழட்டிவிட்டு, 30 ரூ கொடுங்கணா என்றான்.

அந்த ஆயிரம் ரூபாய் ஆசாமியை நினைத்துக்கொண்டேன்.

இப்படியும் சிலர், அப்படியும் சிலர்.

உழைத்து சம்பாதிக்க வழி இல்லை என்றால் கூட, ஏய்த்துப் பிழைக்கலாம் என்ற எண்ணம், எளிதாகப் பரவி வருகிறது.

இன்னொரு முறை கொரோனா வந்தாலும் , பூகம்பம் வந்தாலும்,இந்த ஏமாற்றுக்கார்ர்கள் என்னவோ சந்தோஷமாகத்தான் வாழப்போகிறார்கள்..

30 ரூபாய்க்கு 15-20 நிமிடம் , மல்லுக்கட்டி வேலை செய்பவன் தான் திரும்பவும் பாதிக்கப்படப் போகிறான்

கடவுள் இருக்காரு என்று வரிசையில் நின்று கும்பிடும் மக்களுக்காகவாவது, கடவுள் ஒருமுறை தான் இருப்பதை நிரூபிப்பாரா?
இது மாதிரி ஆட்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்குமா?

ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டு ஓடிய அந்த மனிதன் ஏதாவது வண்டிலதான் அடிபட்டு கிடப்பான் என கதறி அழுத அந்தப்பெண்ணின் கதறல் கடவுளுக்கு கேட்குமா?
அவன் போகும் பாதையில் ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரிகள் வரவே வராதா?

அடுத்த சம்பவம்

சமீபத்தில் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வு.

அரசு வேலை வாங்கித் தருவதாக 4.5 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றிய ஆசாமி.

பணம் கொடுத்து அரசு வேலைக்கு வந்து அவர் சேவை செய்யப் போவதில்லை.

அதுவும் ஏமாற்று வேலை தான் என்றாலும், ஏமாற்றுபவர்களை ஏமாற்ற இங்கே வேறு சில ஆட்கள், அதாவது அரசியல்வாதிகள் இருக்கும் போது, மற்றவர்கள் ஏமாற்றினால் சட்டம் பாயத்தான் செய்யும்.

இதே ஒரு MLA அல்லது மந்திரி பணம் வாங்கியிருந்தால் இந்த சம்பவம் வெளியே வந்திருக்காது.

கொடுமை என்னவென்றால், பணம் கொடுப்பதை காணொளி ஆக்கியிருக்கிறார்கள்.

பணம் வாங்கிய ஆசாமி, ஒரு ஐயப்ப சாமி.
மாலை அணிந்து விரதத்தில் இருக்கிறார்.
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் அவரது செல்போனில் ரிங்டோனாக ஒலிக்கிறது.

பணத்தை வாங்கிவிட்டு, பாத்து பண்ணிடலாம் சாமி, சரிங்க சாமி என்று பேசுகிறார்

இந்த மாதிரி விரதமிருக்கும் போது சக மனிதர்களை ஏமாற்றியவரை ஐயப்பன் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?

பார்க்கலாம், கடவுள் எப்போது தன்னை நிரூபிக்கிறார் என்று!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.