விபத்து.
தவர்க்க முடிந்தால் தவிப்பு இல்லை.
ஆனால் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து நம்மைத் துயரில் ஆழ்த்துவது தான் விபத்து.
அதிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பெரும் விபத்து என்றால் நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்து விடவோ அல்லது ஜீரணிக்கவோ இயலாது.
எத்தனை கனவுகளையோ, எத்தனை பாசங்களையோ, எத்தனை தொழில் ஏற்பாடுகளையோ, உயிர்களின் கூறாக, வெவ்வேறு நாட்டைச் சார்ந்த மக்களை தூக்கிப் பறக்கத் துவங்கிய , பறக்கும் விசை சரியாகக் கிடைக்காத காரணத்தால் பறக்கத் துவங்கிய சில நொடிகளிலேயே பக்கத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து ஒரே ஒரு அதிசயப் பிறவியைத் தவிர்த்து மற்ற அத்தனை உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது.
நெருப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்களை உயிரோடு காப்பாற்றுவது கடினம் என்று தீயணைப்புத் துறையும், அரசும் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்குக் காரணம், விமானத்தின் முதன்மை இயந்திரத்திற்கு பறப்பதற்கான விசை போதுமான அளவு கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது பறவை ஏதாவது மோதி செயலிழந்திருக்கலாம், அப்போது அந்த கன நேரத்தில் இரண்டாவது இயந்திரம் செயல்படுவதற்கு முன்பே விபத்து நிகழ்ந்திருக்கலாம், அல்லது அந்த நேரம் இரண்டாவது இயந்திரத்திற்கு அதன் முழு ஆற்றலை அடைய போதிய நேரம் இருந்திருக்காது அல்லது இரண்டாவது இயந்திரமும் பறவை ஏதாவது மோதி செயலிழந்திருக்கலாம் என்பது போன்ற தகவல்களைக் காண இயல்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா நிறுவனம் நிவாரணம் வழங்கியிருக்கிறது.
இப்போதைய சூழலில் இறந்தவர்களின் உடலை நல்லவிதமாக அடக்கம் செய்து, அவர்களின் குடும்பத்தினர் இந்தத் துயரைத் தாங்கும் சக்தி பெற வேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர்த்து நம்மால் என்ன கூற இயலும்.
இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும்.
அவர்களது குடும்பத்தினர் இந்தத் துயரிலிருந்து மீண்டு நல்லதொரு வாழ்க்கை முன்னெடுக்கட்டும்.
இவை இரண்டும் நிகழ, அந்த இயற்கையோ, இறந்தவர்கள் நம்பிய தெய்வங்களோ பரிபூரணமாக ஆசிர்வதிக்கட்டும்.
இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் மனிதன் சில விஷயங்களைத் தவிர்க்க இயலாது என்பதை நமக்கு உணர்த்திய இன்னொரு துயர சம்பவம்.
இந்தத் துயர நிகழ்வில் இதற்கு மேல் விவரிக்கவும் நாம் விளம்பரம் தேடும் தனியார் நிறுவனமோ, வணிகப் பத்திரிக்கையோ அல்ல.
நினைவுகள் மற்றும் நமது வாசகர்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.