Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

வளர்ச்சி எனும் பேரழிவு – போபால் யூனியன் கார்பைடு பின்விளைவுகள்

நிகழ்ந்த அந்த மறக்க முடியாத பேரழிவும், நிகழும் இப்போதைய விளைவுகளும், வளர்ச்சி என்ற பெயரில் தான் முதலில் துவங்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஏதோ ஒரு பெயரில் தான் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எலிகளின் மீது சோதனை ஓட்டம் போல வளரும், வளராத நாடுகளில் மக்கள் தொகையுள்ள நகரங்களில் செயல்படுத்தப்படுகின்றன. நான் இங்கே பேசுவது போபால் விஷவாயு சம்பவத்தை உருவாக்கிய யுனியன் கார்பைடு நிறுவனத்தைப்பற்றி தான். விவசாய வளர்ச்சி […]

Categories
நினைவுகள்

கடைசிப் பேருந்து.

எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும். அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம். இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான். கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் […]

Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார்? போதுமா இது? – சிறு குற்றங்களின் தண்டனை விகிதம்

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நினைவுகள் – 2024 – ஒரு  பார்வை

நினைவுகள் என்பது சாபமா, வரமா? என்றால் அது அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று. எதைப்பற்றிய அல்லது எப்படியான நினைவுகள் என்பதைப் பொறுத்தே அது சாபமா அல்லது வரமா என்பது அமைகிறது. மகிழ்ச்சி தரும் நல்ல நினைவுகளோ அல்லது வருத்தம் தரும் துயர நினைவுகளோ இரண்டும் இரவு பகல் போல ஒன்றில்லாமல், இன்னொன்றில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டும் அதற்கு மாற்றில்லை. நல்ல சுகமான நினைவுகளும் இருந்தது. சில துக்கமான நிகழ்வுகளும் இருந்தது. அப்படி நாம் கடந்த அந்த […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

புத்தாண்டை வரவேற்போம்

புத்தம் புதிதாக பிரிண்டிங் பிரஸ் வாசனை நுகர்ந்து, சரஸ்வதியா, லட்சுமியா, பிள்ளையாரா, பெருமாளா என்று தேடித்தேடி எடுத்து ஆசை ஆசையாகத் தொங்க விட்ட நாட்காட்டி முழுதையும் கிழித்துத் தள்ளியாயிற்று. இன்று அது கலையிழந்து வெறும் எலும்புக்கூடாகத் தெரிகிறது. நாம் கடந்து வந்தது, ஒரு ஆண்டு என்று எளிதாகச் சொல்லிவிட இயலாது. 365 நாட்கள். 8760 மணி நேரங்கள். இன்னும் நிமிடம் மற்றும் நொடிகளில் கணக்கிட்டால் பெரிய வியப்பாகத்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும், பயனுள்ளதாக […]

Categories
தற்கால நிகழ்வுகள்

நீதி நிலைநாட்டப்பட்டது

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கலியுகக் கர்ணன். நூற்றாண்டில் ஒருவன்

இந்தக் கலியுகத்தில் இப்படியும் ஒருவரா? நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற பாடலின் வரிகள் இவருக்குத் தான் பொருந்துமோ? இவர் பெயர் கல்யாண சுந்தரம். ஆனால் இவர் பாலம் கல்யாண சுந்தரம் என்றே அழைக்கப்படுகிறார். பாலம் என்பது இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயர். ஊரில் ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இவருக்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான விளம்பரம் என்று நினைக்கத் தோன்றலாம். அது ஏன் என்பதை அவரது கதையிலிருந்து அறிந்து […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]