Categories
சினிமா நினைவுகள்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட சினிமா- சொல்லத்துடிக்குது மனசு

வித்தியாசமான கதை அம்சம் கொண்டதும், கநைகளுக்கு முக்கியத்துவம் தருவதுமான படங்கள் சமீபத்தில் தான் வருவதாகவும், பழைய படங்களில் பெரும்பாலானவை, கதாநாயகர்களுக்கு மாஸ் காட்சிகளும், சண்டையும், காதலும் என காட்சிகளைக் கொண்ட படமாகவே அமைந்ததாகவும் சினிமா ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது மட்டுமல்ல, 80,90 களிலும் அதுமாதிரியான படங்கள் வெளிவரத்தான் செய்தன என்பதை நிரூபிக்கும் படம் தான் 1988 ல் வெளிவந்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

எல்லார்க்கும் பெய்யும் மழை -நல்லார் நினைவுகள்

மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

வாகை சூடியவரை வாழ்த்துவோம். வெற்றியாளர்களை வளர்த்தெடுப்போம்.

நேற்றைய பரபரப்பான செய்தி, அனைவருக்கும் பரவசமளித்த செய்தி இந்தியாவின் இளம் வீரர் சதுரங்கப் போட்டியில் உலகளவிலான முதலிடம்பெற்று வாகை சூடிய செய்தி. அதுவும் அதில் மேலும் சிறப்பம்சம் என்பது இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது. உலகளவில் சதுரங்கப்போட்டியில் இளம் வயதில் வாகை சூடி வரலாறு படைத்த குகேஷ் தொம்மராஜூ ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.அவரது தந்தை ரஜினிகாந்த் தனது மருத்துவப் படிப்புக்காக, சென்னை வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவர் காது, மூக்குத் தொண்டை நிபுணர். […]

Categories
தகவல் வரலாறு

இந்தியாவின் மிக நீளமான தொடர்வண்டிப் பயணமும் அதன் வரலாறும்

விவேக் விரைவு வண்டி. விவேக் எக்ஸ்பிரஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொடர்வண்டிகள். தொடர் வண்டிகள் என்று குறிப்பிடவும் காரணம் உள்ளது. நமக்குப் பரீட்சையமான, பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் , வைகை எக்ஸ்பிரஸ், ரிக்போர்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்வண்டியை மட்டுமே குறிக்கும்.அந்தப்பெயரில் அந்த ஒரு வண்டியைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கிட்டதட்ட 4 தொடர்வண்டிகள் உள்ளன. அதாவது நான்கு வேறு வேறு வழித்தடங்களில் பயணிக்கும் வேறு வேறு […]

Categories
நினைவுகள்

மாடி பஸ்- கம்பீரமான இரட்டை அடுக்குப் பேருந்தின் நினைவுகள்

மாடி பஸ். உண்மையிலேயே அந்த வகைப் பேருந்தின் பெயர் இதுதானா என்பது தெரியாது. ஆனால் மாடி பஸ் என்று சொன்னாலே எல்லாருக்கும் கண்டிப்பாகப் புரிந்து விடும். ஆமாம் டபுள் டக்கர் பஸ் என்று ஆங்கிலத்திலும், மாடி பஸ் என்று தமிழிலும் வழக்காடலாக இருந்தது அந்த வகைப் பேருந்து.இதில் பஸ் என்பது தமிழ் வார்த்தை என்றே பலரும் நம்பியிருந்ததும் உண்மை. இதன் உண்மையான தமிழாக்கம் இரட்டை அடுக்குப் பேருந்து என்பதாகும். ஆனால் அதைச் சொன்னால் பலருக்கும் விளங்காது. சரி […]

Categories
தமிழ் நேர்காணல்

நேர்காணல் – சமூக ஆர்வலர் டாக்டர்.தியாகராஜன் அவர்களோடு ஒரு உரையாடல்

நல்லதைப் பாராட்டுவோம், பகிர்வோம் என்ற வார்த்தைகளைப் பின்பற்றி இதைப் பகிர்கிறோம். நமக்கெல்லாம் இயற்கையாகவே ஒரு குணம் உள்ளது.மிகப்பெரிய உயரத்தை அடைந்த ஒருவரின் சாதனையை மனம் விட்டுப் பாராட்டுவோம்.ஆனால் நம்மோடு இயல்பாகப் பழகி உறவாடும் எளியவர்கள் செய்யும் காரியங்களைப் பாராட்ட மனமிருக்காது. ஏனென்றால் அந்தப் பாராட்டு அவரை நம்மை விட ஒரு படி உயர்த்திவிட்டால் அவர் நம்மை விட உயர்ந்தவராகிப் போவார் என்ற காரணத்தால் தான். எப்போதும், எத்தகைய உயரத்தை அடைந்தவரும், கீழிருந்து மேல் வந்தவர் தான் என்பதை […]

Categories
சினிமா தமிழ்

புஷ்பா – 2- ஒரு அலசல்

சென்ற வாரம் வெளியான புஷ்பா படத்தின் பகுதி இரண்டு பற்றிய ஒரு அலசல். புஷ்பா ஃபயரா, ப்ளவரா? ஃபயர் தான். ஆனால் அதிக நேரம் எரிந்து மூச்சுத்திணறல் வரும் அளவுக்குப் புகை கக்கிய ஃபயர் என்பது ஒரு ஏமாற்றம். படத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த குறை என்பது படத்தின் நீளம். இது பெரிய குறை ஆனாலும், படத்தை பாதாளத்தில் தள்ளும் குறை அல்ல. க்ளைமாக்ஸ் காட்சி தவிர மற்ற எந்தக் காட்சிகளிலுமே, இந்தக் காட்சி எப்போது முடியும் என்ற […]

Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
குட்டி கதை தமிழ்

பட்டினத்தாரின் அனுபவம்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார். வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது […]