Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மக்களிடம் ஒரு வேண்டுகோள்!

ஒரு ஆசிரியர், ஒரு இராணுவ வீரர் ,ஒரு காவலாளி, ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் என இந்த சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்யும் மனிதர்களுக்கு இல்லாத மரியாதையும் அன்பும் இங்கே சினிமாக் கூத்தாடிகளுக்கு இருப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய விஷயம். இன்று இத்தனை உயிர்கள் போனதற்குக் காரணம் ஒரு போரட்டமோ, கோரிக்கை ஆர்ப்பாட்டமோ அல்லது கலவரமோ வன்முறையோ அல்ல. ஒரு உச்சகட்ட சினிமா நடிகரைக் காண வந்த கட்டுக்கடங்காத கூட்டம். அவர் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

அளவைக் கடந்த தற்குறித்தனம்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இதை நாம் அன்றாடம் உபயோகித்திருந்தாலும் பெரும்பாலும் உணவின் அளவைக் குறிப்பிடவே உபயோகித்திருப்போம் அல்லது உண்மையிலேயே அது உணவின் அளவைக் குறிப்பதற்கு மட்டும் என்றே நினைத்திருப்போம். அது தவறு.உண்மையிலேயே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுப் பழக்கத்தில் மட்டுமல்ல. அன்றாடம் நாம் செய்யும் அனைத்திலும் தான். இன்று ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது.தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் இட்லி கடை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.அந்த […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி!

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி நேற்றைய இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி. நடந்து வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோற்கவில்லை என்ற பெருமையுடன் வீறு நடை போடுகிறது. வரப்போகும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் பாகிஸ்தானி அணிக்கு எதிரான போட்டியையும் வெற்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என்பநில் ஐயமில்லை. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது.இப்போதைய இந்திய அணி என்பது வீழ்த்தப்படவே முடியாத ஜாம்பவான் கிடையாது.நாம் செய்யும் ஓரிரு […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தகர்க்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் , நினைவுகளும்!

அங்கே இடிக்கப்பட்டது கட்டிடமல்ல, பலரது நினைவகளின் கோட்டை. தரைமட்டமாக்கப்பட்டது தளமல்ல. பலரின் எதிர்பார்ப்புகள். நொறுக்கப்பட்டது செங்கற்கள் மட்டுமல்ல.பலரது இதயங்கள். என்னாங்க இது இவ்வளவு பில்டப்பு என்று யோசிக்கிறீர்களா? சென்னை வடபழனியில் இரண்டு பேமஸ் என்று வடிவேலு சொல்லுவார்.ஆனால் வடபழனி என்றால் இதையும் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது. ஏழைகளின் தோழி, சினிமா ரசிகர்களின் அன்புத்தாய், நடுத்தர மக்களை அன்போடு அரவணைக்கும் தங்கத் தாரகை, ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டிடமே இடித்துத் […]

Categories
கருத்து சினிமா தகவல் நினைவுகள்

மலை மனிதனின் கதை

மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை. அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.மலையைப் புரட்டவில்லை.நொறுக்கியே விட்டார். தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம். இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி. யார் இவர்? எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழிக்கும் சினம்!

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். திருக்குறளில் அறத்துப்பால் பகுதியில் துறவறவியலில் 31 ஆவது அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளின் பொருளை அறியாதோர் எவருமிலர். ஆனால் நமது அன்றாட வாழ்வில் இதைப் பின்பற்றுகிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்பதே 90 சதவீத மக்களின் பதில். ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட சிலர் கோப்பப்படுவதும், அற்ப காரணங்களுக்காக கோபம் கொள்வதும், வந்த கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் செய்வதறியாது சில தவறுகளைச் செய்வதும் பலருக்கு அன்றாட […]

Categories
சினிமா

சக்தித் திருமகன்- விமர்சனம்.

சக்தித் திருமகன் என்ன சொல்கிறார் பார்க்கலாம். சமீபத்தில் வெளியான விஜய் ஆன்டணி அவர்களின் 25 ஆவது படமான சக்தித் திருமகன் பெருவாரியான ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான். என்ன பழசு?என்ன புதுசு? பழசு என்றால், அதே ஊழல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பித்தலாட்டம், ஏமாற்றப்படும் சுரண்டப்படும் வஞ்சிக்கப்படும் பொதுமக்கள் , இவர்களைக் காப்பது கதாநாயகனின் கடமை.அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாவும் நிலையே வந்தாலும் பொதுமகக்ளைக் காப்பாற்றுவதே தனது தலையாய […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஏமாறுவது இன்னும் எத்தனை காலம்?

ஒவ்வொரு அமாவாசையும் நமக்கு ஏதாவது ஒரு புது சங்கதியைத் தந்து கொண்டே இருக்கிறது. சென்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் வாளியில் கொடுக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தோம்.அதாவது தர்ப்பணம் என்பது மனநிறைவுடன் , மரியாதைக்காக பெரியவர்களை நினைத்துக் கொடுக்கப்படாமல், ஒரு பெயரளவிற்கு, நானும் கொடுக்கவில்லையே என்று பிறரைப் பார்த்து குற்ற உணர்ச்சியுடன், பத்தோடு பதினொன்றாக கொடுக்கப்படுவதை உணர்த்தியிருந்தோம். கிட்டத்தட்ட எனது நிலையும் அதுதான்.இந்த தர்ப்பண சமாச்சாரம் எல்லாம் சும்மா , நான் அதை செய்ய முடியாது என்று சொன்னால் […]

Categories
அறிவியல் ஆன்மீகம் கருத்து தகவல்

புரட்டாசி ஸ்பெஷல்!

கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.இது.இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும். லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே? ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

முயலுக்கு மூன்று கால்தானா?

2026 தேர்தலுக்காக பல கட்சிகளும் பலவிதமான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வெற்றிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ எந்தவித கூட்டணியும் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்ற அதே நிலையில் இருப்பதால் இந்தக் கூட்டணிக் கணக்கு குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனநிலையில், கூட்டணி அமைக்காமல் வெல்வது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட, நாங்கள் எங்கள் நிலைப்பாடில் இருந்து மாறுவதில்லை, ஆனால் வெற்றியும் வேண்டும் என்றால், அது […]