Categories
ஆன்மீகம் கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஐயப்பனுக்கே தீட்டா? அபாய மூடநம்பிக்கையின் அடுத்த அடி.

ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]

Categories
கருத்து தமிழ்

சமுதாய சீரழிவும், நாமும், சினிமாவும்.

சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கடவுள் இருக்காரா ? இல்லையா?

கடவுள் நம்பிக்கை. தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது? சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம். இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, […]

Categories
தமிழ் நினைவுகள்

சொர்க்கமே என்றாலும்…

சொர்க்கமே என்றாலும்… இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும். பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று. பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]

Categories
சினிமா தமிழ்

கங்குவா – விமர்சனம்

கங்குவா! காரசாரமாக இணையதளத்தில் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது, ஒரு புறம். சினிமா நல்லாதான் இருக்கு, இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட வதந்தி என்று முட்டுகள் ஒரு புறம் என கங்குவா பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது பிஜேபியின் சதி என்றும் சிலர் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் எனது எதிர்பார்ப்புகளைத் தரை மட்டத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தேன். அப்படியிருந்தும் படம் சுமாராகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்து ஒரு 25 நிமிடம் செம கடுப்பு என்ற ரீதியில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நடத்தைமீறல்.

நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல். இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது. இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்களின் வரிப்பணம் விரயம்.

இடைத்தேர்தல் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது இந்த இடைத்தேர்தல்.சமீபத்தில் கூட திரு.ராகுல் காந்தி அவர்கள் தனது வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழ்ந்தது. இது ராகுல் காந்தி அவர்களின் கதை மட்டுமல்ல. எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதை செய்வது வழக்கம் தான். இந்த இடைத்தேர்தலானது ஒரு உறுப்பினர் உயிரிழந்து, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டாலோ, அல்லது குற்ற வழக்கில் சிறை […]

Categories
தமிழ்

கோபத்தின் விளைவு- மருத்துவருக்குக் கத்திக்குத்து- சரியா?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் , எல்லை மீறிச் செல்பவன் அதே கோபத்தால் அழிவான் என்பதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய பரபரப்பான மருத்துவர் கத்திக்குத்துச் செய்தி. அதேபோல வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற ரீதியில் அந்த மருத்துவரும் கூட ஏதோ ஒரு விதத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். காரணம் நானும் எனது சொந்த அனுபவத்தில் பல மருத்துவர்களை சந்தித்தும் , […]