Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ திரைப்படம் – நூறாவது நாள்

1984 ல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு த்ரில்லர் படமா என்று வியக்க வைக்கும் ஒரு தமிழ் திரைப்பட பொக்கிஷம். மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் சத்யராஜ் அவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம். கிட்டதட்ட ஒரு திகில் படத்தைப்பார்த்த உணர்வும் இந்தப்படம் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும். இத்தாலியில் 1977ல் வெளிவந்த sette note in Nero (Seven Notes in black) என்ற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் நூறாவது […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பம் தரும் திருப்பதியின் திருப்தியான விருந்து

நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு. சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம். நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான். அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் […]

Categories
அறிவியல் கருத்து தமிழ்

விடுபடு திசைவேகம் – தீமையில் இருந்து விடுபட

அறவியல், இயற்பியல் படித்த அனைவரும் கடந்து வந்திருக்கக்கூடிய சொல்தான் இந்த விடுபடு திசைவேகம். ஆங்கிலத்தில் escape velocity என்று சொல்லப்படும். புவியிலிருந்து நாம் எந்தப்பொருளைத் தூக்கி எறிந்தாலும் அது சிறிது உயரத்தை அடைந்து விட்டு திரும்ப புவியை நோக்கி வந்தடையக் காரணம், புவியின் ஈர்ப்பு விசை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி மேலே எறியப்பட்ட பொருள் கீழ்நோக்கித் திரும்ப வராமல் மேலே புவி வட்டத்தை விட்டு சென்று விட வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ்

குறளுடன் குட்டி கதை – சினம் காத்தல்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 305, திருவள்ளுவர் இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில் தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும். இதையே […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

கட்டிட கலை அதிசயம் : சாயா சோமேஸ்வரர்

விஞ்ஞானமும், அறிவியலும் வெண்டைக்காய் தக்காளி போல பழகிப்போன இந்த நாட்களில் கூட நாம் புருவம் உயர்த்தி அதிசயிக்கும் வகையில் முன்னோர்களின் சில கட்டடக் கலைகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட அறிவியலைப்பதிவிட்டு அதிசயித்த நமக்கு இன்னொரு அதிசயமும் பரிட்சையமானது. அது தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நால்கோடா மாவட்டம் பனகல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயம். இது குன்டுரு சோடாஸ் (தெலுங்கு சோழர்கள்) […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

கடன் எனும் பகாசூரன் – அன்றும், இன்றும்

EMI – Equated Monthly Installment, எனும் கொடிய கிருமி உருவெடுக்கும் முன்னரே கைமாத்து, கடன் போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருந்து வந்த ஒன்று தான். அதாவது மாத ஊதியத்தைக்காட்டிலும் அதிகமாக ஏதாவது தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும் போது இவ்வாறான கைமாத்துகள் அல்லது வட்டிக்கு கடன் வாங்குதல் போன்றவை புழக்கத்தில் இருந்த ஒன்று. இப்படி கடன் வாங்கும் போது ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் வட்டி. பெரிய தொகை ஒன்றை தேவைக்கென வாங்கிவிட்டு, அந்தத் தொகைக்கான வட்டியை […]

Categories
அறிவியல் தமிழ்

தானாக வளரும் மருந்து -அதலைக்காய்

முதலை தெரியும் அதென்ன அதலை? ஆம் இதுவும் முதலை போலத்தான்.சத்தமில்லாமல் திடீரென வெளிப்படும், ஆனால் மிக சக்தி வாய்ந்தது. அடேங்கப்பா , பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே என்று வியப்பு வருகிறதா? பில்டப் மிகையல்ல. இந்த அதலைக்காய் ஆனது வருடம் முழுக்க கிடைக்கும் பொருளல்ல.சீசன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைப்பது. மீதி நேரங்களில் இதன் விதைகள் மண்ணுக்குள் உயிரோடு இருந்து மண் ஈரமாகும் மழைப்பருவங்களில் மட்டுமே வயல் வெளிகளிலும் மற்ற செடிகளிலும் கொடியாகப் படர்ந்து […]

Categories
ஆன்மீகம் தமிழ்

கட்டிட கலை அதிசயம்: தஞ்சை பெரிய கோவில்

உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்கள் விரும்பும் பிரியாணியின் கதை

பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது. பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு. பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ […]

Categories
இலக்கியம் தமிழ் பாடல்

பிரிவின் வலியை சொல்லும் பாடல் வரிகள்

காதல் என்பதைக் கடந்திராதோரும் உளரோ? காதல் தோல்விகளும், நமக்குப் பிடித்த பெண், சூழ்நிலை காரணமாக வேறொருவன் கை பிடிப்பதைப் பார்க்கும் அவலநிலையும் இங்கே பலருக்கும் புதிதல்ல. அப்படி ஒரு சூழலுக்கு எழுதப்பட்ட அருமையான பாடல் வரிகளை நினைவுகள் வாசகர்களோடு ஒரு முறை பகிர்ந்து கொண்டு ரசித்து தோல்வியை நினைத்து உருகுவதில் சுகமடைகிறோம். கல்யாணம் முடிந்து மகிழ்ச்சி இல்லாமல் போகும் அந்தப் பெண் ,அவள் காதலை நினைத்து வருந்துகிறாளோ? அல்லது பெற்றவர்களை , ஊரைப்பிரிந்து புது இடம் புகுவதால் […]