Categories
குட்டி கதை தமிழ்

வடிவேலு, பார்த்திபன் வசன உருவகம் – இராமயணம் சஞ்சீவி மூலிகை காட்சி

அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு. ராமர்: டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா! அனுமன்: (முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா? ராமர்:யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் […]

Categories
குட்டி கதை தமிழ்

விருந்தோம்பல் – குறளுடன் குட்டிக்கதைகள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல் குறள் 84 மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள். இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது. இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ்

லக்கி பாஸ்கர்- திரை விமர்சனம்

தீபாவளி படங்களின் வரிசையில் தமிழ் படங்களைத்தாண்டி தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் என்ற படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் வெளியான அமரன் படத்துக்கு இணையாக இந்தப்படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அனைவருக்கும் பரீட்சயமான SCAM 1992, அதாவது ஸ்டாக் மார்க்கெட், ஹர்ஷித் மெஹ்ரா, மகதா வங்கி ஆகிய இந்த மோசடி சுழலில், ஒரு சின்ன எலி தனக்குத் தேவையானத சுருட்டிக் கொண்டு, தனக்குப் பொறி […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள் மறைவு

கலை வணக்கம்- திரு.டெல்லி கணேஷ்.

நடிகர் டெல்லி கணேஷ். நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல். இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி. பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஏமாற்றப்படும் ‘பக்தி’ மான்கள்.

ஔவையே! சுட்டபழம் வேண்டுமா , சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய முருகன் கதை! ஐயா, 30 ரூ தேங்காய் வேணுமா அல்லது 3 லட்ச ரூபாய் தேங்காய் வேணுமா என்பது ட்ரென்டிங் கதை. ஆமாம் ஒரு தேங்காய், 3 லட்சம். அப்படி என்ன விஷேசம் அதில் எத்தனை பேருக்கு சட்னி வைக்கலாம் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். ஆன்மீகம், கடவுள் பக்தி என்பது மனிதனை நல்வழிப்படுத்தினால் சிறப்பு என்று சமீபத்திய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். (நடப்பு அதிசயம்). அதே […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான். தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள். ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது. […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

என் பெயர் கமலஹாசன்

பசுந்தோல் போத்திய புலி அல்ல நான். பசுவும் அல்ல. நான் நல்லவனா? இல்லை கெட்டவவனா?இரண்டுமே அல்ல. அதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடமே உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் சிறப்பானவன் தான். இதுதான் ஒழுக்கம், இதுதான் கலாச்சாரம் என்பதைப் பின்பற்றி எப்போதும் வாழ்ந்தவனில்லை நான். என்னவோ தெரியவில்லை, என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருபோதும் தனிமனித ஒழுக்கத்தை நான் மீறியதில்லை. என் போக்கில் என் வாழ்க்கை. யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. யாரையும் கெடுத்ததும் இல்லை. பிறரின் பேச்சுக்கு […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்வில் முன்னேறுவது எப்படி- பதில் கிடைக்காது.

இந்தக் கட்டுரை ஒரு மனிதனின் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.கோர்வையாக இல்லாமல் போகலாம்.ஆனால் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். இத்தனை நம்பிக்கையோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்தக் கோபம் என்னுடையது தான். அந்த மனிதன் நான்தான். சமீபத்திய பிரபல பாடல் “யார்டா அந்தப் பையன், நான்தான் அந்தப் பையன்“ என்பதைப் போல, இன்று எனக்காக ஒரு கட்டுரை. என் கோபத்தின் வெளிப்பாடாக. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் நன்கு படித்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை முடித்து, சரியான […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே […]

Categories
சினிமா தமிழ்

ப்ளடி பெக்கர்- திரை விமர்சனம் .

தீபாவளி பட வரிசை (அமரன், பிரதர்) விமர்சனம் இன்னும் முடிந்த பாடில்லை. அடுத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பைக் கிளறி, முதல் நாள் இணைய வாசிகளால் கிழித்துத் தொங்கவிடப்பட்ட ப்ளடி பெக்கர் திரைப்படம். இணைய விமர்சனங்களையும், ரசிகர்களின் விமர்சனங்களையும் கேட்டு, இந்தப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கும் படம் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். வித்தியாசமான படங்களை விரும்பும் ஆட்களுக்கு இது ஏமாற்றம் அளிக்காத ஒரு நல்ல படம் தான். கதைக்களம் புதியது. திரைக்கதை ஒரு வீட்டினுள்ளே குறிப்பிட்ட சில […]