Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

தெரு நாய்கள் தொல்லை!!

சமீபத்தில் மிக அதிக அளவில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் தெரு நாய்கள் பற்றியது தான். 🐶 நாய் என்றால் பிடிக்காத மனிதர்கள் ஒரு சிலரே உண்டு. அந்த ஒரு சிலரைத் தவிர்த்து மீதி மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நாய் என்பது செல்லப் பிராணி தான். செல்லப்பிராணி தானே ஒழிய வீட்டிற்கு வீடு நாய் வளர்க்கிறார்களா என்றால் அது கிடையாது. குறிப்பிட்ட ஆட்கள் அதிலும் குறிப்பாக செல்வந்தர்களே பெரும்பாலும் நாய்களை வளர்க்கிறார்கள். சிலர் கௌரவத்திற்காகவும், பலர் பாசத்திற்காகவும். […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

வேகமாய்ப் பரவும் போலிச் செய்திகள்!

இணையதளத்தில் செய்திகள் எவ்வளவு வேகமாக நம்மை வந்தடைகிறதோ அதேபோல போலிச் செய்திகள் சிலவும் நம்மை எளிதாக வந்தடைவதோடு இல்லாமல் நம்பும் படியாகவும் அமைந்து விடுகின்றன. அதில் நன்மை, உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கம் என்று துவங்கி, மத வழிபாடு வரை, போலி வதந்தி ஆகியவை பரப்பப்படுகின்றன. இதன் ஆரம்பப் புள்ளிஎன்ன? எதற்காக இது நிகழ்கிறது என்பது தான் விளங்குவதில்லை. அந்தக்காலங்களிலாவது ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் 10 பைசா முதல் 1 ரூ வரை கட்டணம் இருந்தது. அப்படியிருக்க […]

Categories
இலக்கியம் தகவல்

தினுசு கண்ணா தினுசு!

பெயர் என்பது ஒரு மனிதனின், பொருளின், ஜீவராசிகளின் அடையாளம். மனிதன் மட்டுமல்ல, உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற அத்தனை பொருட்களுக்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு தனிப்பெரும் கூட உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் உண்டு. உதாரணம்: நாற்காலி. நான்கு கால்களை உடைய காரணத்தால் அது நாற்காலி என்று அழைக்கப்பட்டது. சில பெயர்களின் பின்னால் சுவாரஸ்யமான கதைகளும் இருக்கலாம். பழைய காதலன் காதலியின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைப் போல. சில பேர் குரு பக்தியின் காரணமாகவோ அபிமானத்தின் […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

2026 ஐ எதிர்நோக்கி.

2026 தேர்தலுக்காக எதிர்கட்சிகளும், புதிதாக முளைத்த கட்சிகளும் பல வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், தற்போது ஆளும் கட்சியின் தேவை என்பது, ஆட்சியை முறையாக, நல்ல பல திட்டங்களோடு மக்களின் மனதைக் கவரும் படியாக நிகழ்த்திக் காட்ட வேண்டும்.எந்த வித அவப்பெயரும் ஏற்பட்டு விடக கூடாது. செயல்படுத்தும் திட்டங்களில் பாரபட்சமின்றி தொய்வின்றி மக்களின் பாராட்டுகளைப் பெறும் விதமாக திட்டம் நிகழ வேண்டும். அதை மனதில் கொண்டு, திமுகவும் கன கச்சிதமாக இந்த விஷயத்தை செய்து வருகிறது. ஏற்கனவே […]

Categories
கருத்து சினிமா

திரையில் மட்டும் நல்லவர்?

சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]

Categories
சினிமா

கூலி- வேலை சுத்தமா?

ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளைத் தாண்டி உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி விட்டது.அரங்கங்கள் நிரம்பி வழியும் கூட்டம். திக்குமுக்காடும் திரையரங்குகள்.முதல் நாள் என்பதால் மட்டுமல்ல, மீதி வரும் மூன்று விடுமுறை நாட்களுக்கும் இருக்கைகள் முன்பதிவு முடிந்து விட்டது. சரி இந்தக் கூலி வாங்கிய பணத்திற்கு திருப்தியாக வேலையைச் செய்தாரா என்பதைப் பார்ப்போம். கதை. எதிர்பாராத புதிய கதையெல்லாம் இல்லை. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் சண்டை, அதுல உடைஞ்சது சுருதிஹாசன் மண்டை.அப்புறம் எப்படி ரஜினி ஜெயிச்சாரு? எதுக்காக இந்த சண்டை, […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

உண்மையான சுதந்திரம் எப்போது?

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் என்றால் இரண்டு மாவட்டங்கள் முழுமையாகக் காணாமல் போன கதைதான். சரி அப்படியிருக்க அந்த 65 லட்சம் பேரும் இத்தனை நாளாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தார்கள்? என்ன அடிப்படையில் அது வழங்கப்பட்டது. இதுதான் சரி என்றால், இவ்வளவு பெரிய தவறு இத்தனை ஆண்டு காலமாக இருந்திருக்கிறதா? 65 லட்சம் என்பது சாதாரண […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

மேடம்,கரண்டு எப்போ வரும்?

முன்னாட்களில் பெரும்பாலான உணவகங்களில் இந்தப் பழக்கம் உண்டு என்று சில சினிமாக்களில் கேலியாகப் பார்த்திருக்கிறோம். சிலர் இதை உண்மை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்து விட்டால், சாம்பாரில் கடலை மாவு கலப்பது, நீர் கலப்பது, ரசத்தில் சுடுநீர் கலப்பது போன்ற காரியங்களைச் செய்வார்கள். அதேபோல, வெள்ளை சாதம் வேக வைக்கும் போது சிறிது ஆப்பச் சோடா கலப்பார்கள், ஏனென்றால் அப்படிச் செய்தால் அதிக சாதம் உண்ண முடியாது என்ற காரணம். இது உணவகத்தின் […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]