Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
கருத்து சிறுகதை

புத்தகத்தில் இல்லா பாடம்!

அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மௌனம் பேசுமா?

சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்னா குமாரு இதெல்லாம்?

ஓவ்வொரு முறையும் அரசுத் தேர்வுகள் நிகழும் போது, அதுவும் குறிப்பாக Group 4 தேர்வு நிகழும் போது பல சுவாரஸ்யங்கள் நிகழ்வது வழக்கமாகிப் போனது. மணமேடையிலருந்தவாறே, மாலையும் கழுத்துமாக வந்து தேர்வு எழுதுவது, பாட்டிக்கு காரியம் செய்து விட்டு அஸ்தியோடு வந்து தேர்வு எழுதுவது என்று பல வத்தியாசமான வேடிக்கைகளைப் பார்க்க இயலும். 3000 பதவிக்கு, 18 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள். குறிப்பாக இந்த கழுத்தில் மாலையோடு தேர்வு எழுதியவர்கள், அஸ்தியோடு தேர்வு எழுதியவர்கள் எல்லாம் […]

Categories
கருத்து குட்டி கதை

புத்திசாலி நீதிபதி

படித்ததில் பிடித்தது. கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ். “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. ஜட்ஜூக்கு சுருக்கென்றது. பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை

சமீப காலங்களில் மிகப்பெரிய கொள்ளை, பகல் கொள்ளை எது என்றால், அது தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தான். 3-3.5 வயது நிரம்பிய பிள்ளைகள் LKG படிப்பதற்கு சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாகப் பெறுவதும், அதை மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பெற்றோர்கள் கட்டுவதும் வழக்கமாகிப் போனது. சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பள்ளியின் LKG வகுப்பிற்கான கட்டண ரசீதைக் கண்டு மிரண்டு போனேன். அதைப்பற்றி சிறிது விளக்கமாக எழுதி எனது ஆதங்கத்தைத் தீர்த்துக் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அன்பான அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மாதா பிதா குரு தெய்வம். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சிறப்பாக அமைய தெய்வத்தை விட இன்றியமையாதவர்கள் ஆசரியர்கள். குரு என்பவருக்கு அத்தகைய மரியாதையும் இருந்தது என்பது உண்மை தான். குருவுக்காக விரலை வெட்டிக் கொடுத்த கதை, குரு சாபமிட்டு வித்தை மறந்து உயிரிழந்த கதை எல்லாம் படித்தவர்கள் தான் நாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குரு என்பவருக்கு அத்தகைய மரியாதை இருக்கிறதா என்றால் சிறிய கேள்விக்குறி தான். தனியார் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வழக்கொழிந்த ஒழுக்கம்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]