Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

உலகின் கேடுகெட்ட உயிரினம்- மனிதன்-1.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. ஔவையின் இந்த வாக்கிற்கு ஏற்ப, இந்த உலகில் இன்றும் மழை பெய்யக் காரணமான சில நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இணையத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்த விஷயம் தான்.சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் ஒரு நகைக்கடைக்குச் சென்றதும், அந்த முதியவர் தனது அறியாமை காரணமாக வெறும் 1120 ரூபாயோடு மனைவிக்குத் தங்க நகை வாங்க வந்ததையும் அறிந்த கடைக்காரர், அந்த […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் நியாயமாகப் பேசலாமே?

வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஒரு சொல்லாடல் உண்டு. அது பிறரை பழித்து, ஏசி, தேவையில்லாமல் பொய் பேசக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட சொல்லாடல். இன்று இணையதளம் இருக்கிறது, பேசுவதற்கு, எழுதுவகற்கு மிகவும் சௌகரியமாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதற்காக பலரும் தாம் நினைப்பதை வகை தொகை இல்லாமல் பேசியோ எழுதிய விடுகிறார்கள். இதில் பல பேர் தங்களுடைய சுய விவரத்தில் இல்லாமல் போலி அடையாளங்களுடன் இணையத்தில் உலா வருகிறார்கள். இதில் சமீபத்தில் பேசு […]

Categories
கருத்து நினைவுகள் மறைவு

அப்பாக்களுக்காக..

If u want to be a role model, be a father or a teacher..அனுபவித்த வாசகம்… மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்.. மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா  வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக. இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு […]

Categories
ஆன்மீகம் கருத்து

வாழ்க்கைக்கான சிந்தனை

நல்லதொரு சிந்தனையோடு முதல் நாளைத் துவங்குவோம். படித்ததில் பிடித்தது. ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

புலியைப் பார்த்து பூனை கோடிடலாமா?

பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை. மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது. காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழித்த ஒழுங்கீனம்

சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வரலாறு

உயரமான செனாப் பாலம் உருவான வரலாறு.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்.செனாப் ஆற்றின் குறுக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆற்றுப் படுக்கையிலிருந்து 359 மீட்டர் அதாவது 1180 அடி உயரத்தில் கம்பீரமாக உலகே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த அந்தப் பாலத்தில் நம் நாட்டின் தற்போதைய பிரதமர் திரு.மோடி அவர்கள் கம்பீரமாக மூவர்ணக்கொடியோடு நடந்து வர, அதை அந்தக் கட்சியினர் தம் கட்சிக்கே உரிய சாதனை போல, சமூக வலைத்தளங்களில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
கருத்து

சாங்கியங்கள் உண்மைதானா?

சொர்க்கத்தில் இருக்கும் அன்பு தந்தைக்கு , அன்புடனும், வணக்கங்களுடனும் அன்பு மகன் எழுதும் கடிதம். நாங்கள் இங்கே தங்கள் பிரிவில் வாடுகிறோம்.நீங்களும் அதுபோல எங்களைப் பிரிந்து வாடுகிறீர்கள் என்பதை அறிகிறோம். தங்களுக்கு கடந்த தை அமாவாசை அன்று காலை எள்ளு பிரசாதத்தை காலை உணவாக ஐயரிடம் மந்திரம் சொல்லி அனுப்பச் செய்தேன்.வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். கொரியர் ஆபிஸில் தருவது போல இவர்கள் ரசீது எதுவும் தருவதில்லை.100 ரூபாய் வாங்கிக் கொண்டு மந்திரத்தை சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார்கள்.அதனால்தான் […]