Categories
கருத்து சிறுகதை தமிழ்

மருந்தை விட்டது போகட்டும், வாழப்பழத்தையும் விட்டுட்டான்!

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப்பணியின் அதிகாரமும், தனித்துவமும்.

அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]

Categories
சினிமா தமிழ்

ஆகச்சிறந்த தமிழ் சினிமா – லப்பர் பந்து – விமர்சனம்

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி சில நேரங்களில் நம் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், ஆழமான கருத்துகளையும் பதிக்கும்.அப்படியொரு மகிழ்ச்சியும், கருத்தும் தந்த மறக்க முடியாத தமிழ் சினிமா பட்டியலில் இணைந்திருக்கிறது போன வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம். போன வாரம் வந்த படங்களில் மட்டுமல்ல, சமீப காலத்தில் வந்த படங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக சிறப்பான திரைப்படம் என்று போற்றக்கூடியது இந்த லப்பர் பந்து. இந்தப்படத்தின் முன்னோட்டம் பார்த்த போது , சென்னை 28 […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]

Categories
சினிமா தமிழ்

ரசிக்கக்கூடிய என்டர்டைனர் – கடைசி உலகப்போர் – சினிமா விமர்சனம்

Lockdown சமயத்தில் வெளியான சிறப்பான கலை படைப்புகளில் ஒன்று “நான் ஒரு ஏலியன்“ என்ற ஹிப்ஹாப் தமிழாவின் இசைதொகுப்பு.  நல்ல நினைவுகளை ஏன் தேடிக்கொள்ள வேண்டும், நட்பு பாராட்டுவத்தின் முக்கியத்துவம், வாழு வாழவிடு, போன்ற தத்துவங்கள் வெளிப்படும் துடிப்பான ஆல்பம் என்று சொல்லலாம். எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தாநினைவு மட்டும்தான் இருக்கும்,அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்கடைசி வரைக்குமே நிலைக்கும்.நல்ல நட்பு, சுற்றி சொந்தம்,கடைசி வரைக்குமே அன்ப தரனும்.ஒரு வேலை மரணம் வந்தாக்கூடநான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்.நான் […]

Categories
சினிமா தமிழ்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்

ஒரு கல்லை எடுத்து அதை சிலையாக வடித்து சில மந்திரங்களை சொன்ன பிறகு அது கடவுளாகி விட்டது என்று நம்பும் பல மனிதர்கள் ஏனோ எத்தனை ஆண்டுகளானாலும் கீழ்சாதிக்காரன் தீட்டுக்காரன், தீண்டத்தகாதவன், அவன் நமக்குக் கீழே தான் என்ற எண்ணத்தை மட்டும் மாற்றுவதே இல்லை. ஒரு கல்லை கடவுளாக்கத் தெரிந்த அந்த மனிதர்களுக்கு சக மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரிவதில்லை என்ற வருத்தமான சமூகநீதிக் கருத்தை எடுத்துச் சொல்லும் சினிமா தான் நந்தன். நமக்குத் தெரிந்த, […]

Categories
சினிமா தமிழ்

மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்

சினிமா என்பதே பொழுதுபோக்குக்காகதான் என்ற வரம்பையும் மீறி சில சினிமாக்கள் நல்ல ஆழமான கருத்துகளையும், சிந்தனைகளையும், சில குறிப்பிட்ட மக்களின் வலியையும் வாழ்க்கை முறையையும் கூட நமக்கு ஆழமாக மனதில் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சில சினிமாக்கள் பிரபலத்துவத்தின் காரணமாக அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. பல சினிமாக்கள் முகம் தெரியாத காரணத்தால் முடங்கி விடுகின்றன. அப்படி முடங்கிப்போன ஒரு சினிமா தான் சமீபத்தில் வெளியான ஜமா என்ற திரைப்படம். இவ்வளவு விமர்சனம் பேசும் நானே கூட அந்த […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பதி லட்டில் கலப்படமா?- புரட்டாசி புத்தர்கள் அதிர்ச்சி!

புரட்டாசி என்றாலே பல புத்தர்கள் உருவாகும் மாதமாகி விட்டது. சிறு வயதில் எனக்கு விவரம் தெரியவில்லையா அல்லது சமீப காலமாகத்தான் இப்படி மக்கள் அதீத பக்தியில் ஆழ்ந்து விட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.புரட்டாசி புத்தர்கள் என்று நான் குறிப்பிடுவது புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று விரதம் இருப்பவர்களைத் தான். எனது நினைவின் படி எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

உலகின் கடைசி அத்தியாயம் – பருவநிலை மாற்றம்

கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர். எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம். தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் […]