Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடிகள் பலவிதம்!

மோசடி என்பது இன்று நமது வாழ்க்கையில் யதார்த்தமான ஒன்றாகவே மாறிப்போனது. முன்பெல்லாம் மோசடிகளைக் கண்டு முகம் சுளித்த நாம், இப்போது அதை மிக யதார்த்தமாக, ஓ அப்படியா என்று கடந்து போகத் துவங்கி விட்டோம். போதாக்குறைக்கு மோசடிப் பேர்வழிகளை கதாநாயகர்களாக சித்தரித்துப் பல படங்கள் வருகின்றன. மோசடி செய்பவர்கள் அல்லது திருட்டுத்தொழில் செய்பவர்களைக் கோமாளிகள் போல பாவித்து பல நகைச்சுவை காட்சிகளையும் யதார்த்தமாக ரசித்துப் பழக விட்டோம். அதாவது ஒருவனின் பணத்தை ஒருவன் மோசடி செய்வதை வயிறு […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

இரத்தத்தில் கலந்தது சினிமா!

சினிமா . இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று சினிமா. வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதோடு அல்லாமல், கோடி கோடியாகப் பணம்புரளும் ஒரு பெரிய துறையும் கூட. இந்தத் துறையின் தொழில் வாய்ப்பைய நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளிகள் உண்டு என்பதிலும் மாற்றமில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கதாநாயகன், நாயகி, இயக்குனரில் துவங்கி , தினக்கூலி பெற்றுக் கொண்டு லைட் பிடிக்கும் லைட் மேன் வரை சினிமா என்ற தொழிலை நம்பி இருப்பவர்கள் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டும் மீண்டுமா? சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

சுங்கச் சாவடி கொள்ளை பற்றி நாம் முன்னரே ஒரு கட்டுரை விரிவாக எழுதியிருக்கிறோம். நமது கட்டுரையில் எழுதப்பட்ட பல சாராம்சங்களின் அடிப்படை மாறாமல் இன்று ஒரு தினசரி நாளிதழில் தலையங்கத்தில் சமீபத்திய சுங்கச் சாவடி கட்டண உயர்வு பற்றியும், மற்ற ஒளிவு மறைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. முதல் விஷயம், முக்கியமான விஷயம் என்னவென்றால் சுங்கச்சாவடி என்பது நெடுஞ்சாலைகளில் 60 கிமீ தொலைவிற்கு ஒன்றுதான் இருக்க வேண்டும்.அந்த வகையில் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சுங்கச் சாவடிகள் தான் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வார்த்தைய விடலாமா எடப்பாடி சார்?

இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

ஆத்துக்குள்ளே …..அயிலயிலா!!

காற்றில் பறக்கும் வாக்குறுதிகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், நீ சொல்றத தண்ணியில தான் எழுதனும் னு பேச்சுவாக்கில் கேலி பேசுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது நிஜத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? நிகழ்ந்து தான் விட்டது. உங்களைத் தேடி ஸ்டாலின் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, மருத்துவ காப்பீடு துவங்கி பல வகையான பிரச்சினைகளையும் மனுக்களாகப் பெற்று உடனடியாகத் தீர்வு தருகிறோம் என்று இந்த ஆளும் திமுக அரசு செய்த மாபெரும் வெற்றித் திட்டத்தில், […]

Categories
கருத்து தகவல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

க்யா ச்சையியே?சர்க்கார் உத்யோக்?

க்யா ச்சையியே? என்னாங்க தலைப்பு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி தோணுதா? இல்ல, இருக்காது, நம்மில் பலருக்கும் இது இந்தி என்றும் இதன் அர்த்தம் என்ன வேண்டும் என்பதென்றும் தெரிந்திருக்கும். காரணம், இந்தியை நாம் பழகாவிட்டாலும் இந்தி நம்மோடு பழகி விட்டது. தேவைக்காக நியாயமான முறையிலும், சில மோசடியான முறையிலும். அப்படி மோசடியாக நுழைந்த இந்திக்காரர்கள் கதை தான் இது. ஆம் ஏற்கனவே, நாம் பல அரசு வேலைகளிலும், ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி […]

Categories
கருத்து சிறுதுணுக்கு தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதன் ஏன்தான் இப்படி ஆனானோ?

உலகில் கொரோனா, பூகம்பம் , வெள்ளம், சுனாமி , மேக வெடிப்பு மழை போன்றவை எல்லாம் வந்து மனித இனம் வாடும் போது மனம் வெதும்பத் தான் செய்கிறது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மனித இனத்திற்கு இந்த தண்டனை போதாது என்று தான் தோன்றுகிறது. ஆம், மனித இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தாலென்ன என்ற அளவிற்கான கோபத்தை சில விஷயங்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி இருவேறு துயர செய்திகள் இன்று கேள்விப்பட நேர்ந்தது. முதலாவது, […]

Categories
ஆன்மீகம் கருத்து

கடவுளென்ன கடலை மிட்டாயா?

விநாயகர் சதுர்த்தி ஆனது நேற்றைய தினம் கோலாகலமாக ஊரெங்கிலும் கொண்டாடப்பட்டது. மக்களிடம் பக்தி நன்றாகப் பரவுகிறதே ஒழிய ஒழுக்கம் வளர்கிறதா என்றால் இல்லை. எதிர் விளைவாகத் தான் இருக்கின்றது.மனிதனிடம் கடவுள் பக்தி என்பது எதற்காக வளர்க்கப்பட வேண்டும் என்றால், ஒழுக்கம் வளர்வதற்காகவும், சக ஜீவன்களிடம் அன்பு காட்டுவதற்காகவும் தான். ஆனால் பக்தி வளர்கிறதே ஒழிய ஒழுக்கம் தேய்ந்து கொண்டே தான் போகிறது. பக்தி என்பது போட்டி மனப்பான்மையில் தான் வளர்கிறது. ஒழுக்கம் குறைவது வருத்தம் தான் என்றாலும், […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அகமதாபாத் பரிதாபங்கள்-2

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் பண்பு. ஆனால் அதைப் பின்பற்றி மீள் குடியேற்றம் செய்து சிறப்பாக வாழ்வது பெரும்பாலும், வட இந்தியர்கள் தான். அதாவது தமிழ் பேசாத பிறமொழி இந்தியர்கள்.அவர்கள் இங்கே வந்து நமது ஊர் பாதுகாப்பானது , சுகாதாரமானது, நல்ல வேலை வாய்ப்பு வசதி உடையது என்பதை உணர்ந்துகொண்டு இங்கே தங்கி யாவரும் கேளிர், இதுவும் எனது ஊரே , இங்கேயே நான் குடியேறி, ரேஷன் வாங்கி வாக்களிக்கவும் செய்வேன் என்று இங்கேயே […]