Categories
கருத்து சினிமா

திரையில் மட்டும் நல்லவர்?

சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]

Categories
சினிமா

கூலி- வேலை சுத்தமா?

ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளைத் தாண்டி உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி விட்டது.அரங்கங்கள் நிரம்பி வழியும் கூட்டம். திக்குமுக்காடும் திரையரங்குகள்.முதல் நாள் என்பதால் மட்டுமல்ல, மீதி வரும் மூன்று விடுமுறை நாட்களுக்கும் இருக்கைகள் முன்பதிவு முடிந்து விட்டது. சரி இந்தக் கூலி வாங்கிய பணத்திற்கு திருப்தியாக வேலையைச் செய்தாரா என்பதைப் பார்ப்போம். கதை. எதிர்பாராத புதிய கதையெல்லாம் இல்லை. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் சண்டை, அதுல உடைஞ்சது சுருதிஹாசன் மண்டை.அப்புறம் எப்படி ரஜினி ஜெயிச்சாரு? எதுக்காக இந்த சண்டை, […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

உண்மையான சுதந்திரம் எப்போது?

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் என்றால் இரண்டு மாவட்டங்கள் முழுமையாகக் காணாமல் போன கதைதான். சரி அப்படியிருக்க அந்த 65 லட்சம் பேரும் இத்தனை நாளாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தார்கள்? என்ன அடிப்படையில் அது வழங்கப்பட்டது. இதுதான் சரி என்றால், இவ்வளவு பெரிய தவறு இத்தனை ஆண்டு காலமாக இருந்திருக்கிறதா? 65 லட்சம் என்பது சாதாரண […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

மேடம்,கரண்டு எப்போ வரும்?

முன்னாட்களில் பெரும்பாலான உணவகங்களில் இந்தப் பழக்கம் உண்டு என்று சில சினிமாக்களில் கேலியாகப் பார்த்திருக்கிறோம். சிலர் இதை உண்மை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்து விட்டால், சாம்பாரில் கடலை மாவு கலப்பது, நீர் கலப்பது, ரசத்தில் சுடுநீர் கலப்பது போன்ற காரியங்களைச் செய்வார்கள். அதேபோல, வெள்ளை சாதம் வேக வைக்கும் போது சிறிது ஆப்பச் சோடா கலப்பார்கள், ஏனென்றால் அப்படிச் செய்தால் அதிக சாதம் உண்ண முடியாது என்ற காரணம். இது உணவகத்தின் […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

கூலி- டிக்கெட் கிடைச்சிதா?

கூலி படத்திற்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டது. இனி ஒருவாரத்திற்கு சின்ராச கையில பிடிக்க முடியாது என்பது போல, ரஜினி ரசிகர்களைக் கையில் பிடிக்க இயலாது. பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக கூலி வேலை செய்பவர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு செலவு செய்து இந்தப்படத்தை நிச்சயம் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. கட்டாயம் படம் ஓரிரு நாட்களில்100 கோடி வசூலைத் தாண்டும் என்பது இப்போதே தெரிந்து விட்டது. மொத்த வசூல் 400 கோடியா? 600 கோடியா அல்லது ஆயிரம் கோடியா என்பது தான் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பொருளாதார வளர்ச்சி எனும் கானல் நீர்?

பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கணக்கோ அல்லது கானல் நீரோ? என்ற ஒரு சந்தேகம் ஒவ்வொரு சாமானியனுக்கும் வரலாம்.உண்மைதான். சமீபத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட இரண்டு மடங்கு இருப்பதாகவும் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு. ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும்.ஒரு பாமரனுக்கு, ஒரு வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதனுக்கு, ஏன் பொருளாதாரம் ஓரளவு புரிந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சில மனிதர்கள்!

கபடு வாராத நட்பும்,அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர். சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார். இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள். அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை. என்ன ஒரே ஒரு […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்

முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது. நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது. முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட […]