Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

சாஞ்ஞியமா ? வியாபாரமா?

ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று. முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை. நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது. அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான். நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கிட்னி விற்பனைக்கு!

இங்கு குறைந்த விலையில் கிட்னி விற்பனைக்கு உள்ளது. தேவைக்கு அனுகலாம். இவ்வாறான ஒரு அதிர்ச்சி நிலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நிலவுவதாகத் தகவல். காரணம் வறுமை, தொழில் ரீதியான தாக்கம். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர் இதனைக் கண்டறிந்து புகார் அளித்துள்ளார். அங்கு விசைத்தறி தொழிலாளர்கள், நெசவாளர்கள் பலரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி இந்த தாங்கவியலா அநியாயம் நிகழ்ந்து வருகிறது. ஒரு கிட்னிக்கு 3 லட்சம் வரை […]

Categories
கருத்து சிறுகதை தற்கால நிகழ்வுகள்

எது உண்மையான திறமை?

ஒரு சிறுகதை. ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது. அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார். கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார். நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

DNA – திரை விமர்சனம்

திருமணமான தம்பதிகளை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவது வழக்கம். அந்தப் பதினாறு செல்வங்களுள் மக்கட்பேறு, அதாவது பிள்ளைச் செல்வமும் முக்கியமான ஒன்று. திருமணமான தம்பதிகளுக்கு இப்போதைய காலத்தில் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அதுவே.ஏனென்றால் இந்த வாழ்க்கை முறை நம்மை அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, உடலை வருத்தி, IVF போன்ற மருத்துவ முறைகளை பலரும், அது வேணாம்டா சாமி நாம ஏதாவது குழந்தைய தத்தெடுத்து வளர்க்கலாம் என்று […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

மக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?

சமீத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்றைக் கண்டேன். அவரது அன்றாட உணவுப் பழக்கம் பற்றி அதில் பேசியிருந்தார். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காலை எழுந்தவுடன் ஒரு கப் ப்ளாக் காபியில் (கடுங்காபி) ஒரு கரண்டி நெய் விட்டுக் கலக்கிக் குடிப்பாராம். பிறகு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி. காலை உணவாக 4 முட்டை வெள்ளைக்கரு மட்டும்.11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஒரு ஜூஸ். மதியம் ஓரளவு பெரிய இரண்டு சிக்கன் துண்டுகள் (மசாலா, […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
கருத்து சிறுகதை

புத்தகத்தில் இல்லா பாடம்!

அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]

Categories
நினைவுகள்

கல்வித் தந்தை, கர்ம வீரர்!

ஜூலை 15, கல்வி நாள். நமது அருமை மாநிலத்திற்குக் கல்விக் கண் திறந்த கர்ம வீரர், கல்வித் தந்தை, படிக்காத மாமேதை ஐயா திரு.காமராஜரின் அவர்கள் பிறந்தநாள். பொற்கால ஆட்சி என்று இன்றுவரை போற்றப்படும் நல்லாட்சியைத் தந்த உத்தமர். கிங் மேக்கர் என்று இன்றளவும் அழைக்கப்படக்காரணம், நேரு அவர்கள் நோயுற்ற தருணத்தில் இருந்த போது இந்தியாவில் ஜனநாயகம் அவ்வளவு தான் என்று வெளிநாட்டினர் நினைத்த போது, காங்கிரஸ் கட்சியை சீராக வழிநடத்தி சாஸ்திரி, இந்திரா காந்தி என […]