Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையை மட்டும் எரிப்போம்.

உண்ண உணவு, உடுக்க இடை, இருக்க இருப்பிடம், இவை மட்டுமல்ல மனிதனின் அடிப்படைத் தேவைகள்.நல்ல குடிநீரும், தூய்மையான காற்றும் நமது வாழ்வாதாரம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமை. அப்படியிருக்கும் பட்சத்தில் தான் தரமான நல்ல குடிநீர் வழங்குவதில் அரசாங்கம் இத்தனை மெனக்கெடுகிறது. சமீபத்தில் இந்தூரில் குடிக்கும் நீரில் கழிவு நீர் கலந்து, சில உயிர்கள் போனது கண்டு நாம் எவ்வளவு வேதனை கொண்டோம்?அது அரசாங்கத்தின் தவறு என்பதால் எளிதாக அதன்மீது பழியும் போட்டு விட்டு துக்கம் அனுசரித்து […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஏதாவது செஞ்சுவிடு ஐயப்பா!

கார்த்திகை, மார்கழி என்றாலே சபரிமலை மற்றும் ஐயப்பன் சீசன் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. மேலும் இணையங்களிலும் , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் அருள்பாலிக்கத் துவங்கி விடுவார். மற்ற மாதங்களில் ஐயப்பனை மறந்தும் , மறைத்தும் விடுவார்களோ என்ற அளவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனைப் பற்றிய சம்பாஷனைகள் அதிகரிப்பது வழக்கம். இது கேலிக்காக அல்ல. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் எப்படியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்களோ அதே […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையின் விபரீதம்.

ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் கேளு ஐயப்பா!

இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கண்களைத் திறந்து விட்டாயா முருகா?

கடவுள் இருக்கான் குமாரு. என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா? காரணம் இல்லாமல் இல்லை. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சாதிகள் இல்லையாடி பாப்பா?

சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி. மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார். உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார். நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி […]

Categories
ஆன்மீகம் கருத்து

தேவை பூஜை மட்டுமல்ல!

அப்புறம் என்னங்க வண்டியெல்லாம் கழுவி மாலை போட்டு பொட்டு வெச்சு பூஜைக்குத் தாயாரா? ஆமாங்க இன்னைக்கு சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை ஆச்சே? படிக்கிற பிள்ளைங்க புத்தகங்களையும், தொழிலாளிகள் தங்கள் ஆயுதங்களையும், அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சைக்கிள் உட்பட்ட அனைத்து வாகனங்களையும் தெய்வமாக பாவித்து அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம் தானே? ஆனால் ஒரு விஷயம் இங்கு உணரப்பட வேண்டும்.ஒரு குழந்தை சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜை செய்தால் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெற […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஏமாறுவது இன்னும் எத்தனை காலம்?

ஒவ்வொரு அமாவாசையும் நமக்கு ஏதாவது ஒரு புது சங்கதியைத் தந்து கொண்டே இருக்கிறது. சென்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் வாளியில் கொடுக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தோம்.அதாவது தர்ப்பணம் என்பது மனநிறைவுடன் , மரியாதைக்காக பெரியவர்களை நினைத்துக் கொடுக்கப்படாமல், ஒரு பெயரளவிற்கு, நானும் கொடுக்கவில்லையே என்று பிறரைப் பார்த்து குற்ற உணர்ச்சியுடன், பத்தோடு பதினொன்றாக கொடுக்கப்படுவதை உணர்த்தியிருந்தோம். கிட்டத்தட்ட எனது நிலையும் அதுதான்.இந்த தர்ப்பண சமாச்சாரம் எல்லாம் சும்மா , நான் அதை செய்ய முடியாது என்று சொன்னால் […]

Categories
அறிவியல் ஆன்மீகம் கருத்து தகவல்

புரட்டாசி ஸ்பெஷல்!

கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.இது.இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும். லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே? ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் […]

Categories
ஆன்மீகம் கருத்து

கடவுளென்ன கடலை மிட்டாயா?

விநாயகர் சதுர்த்தி ஆனது நேற்றைய தினம் கோலாகலமாக ஊரெங்கிலும் கொண்டாடப்பட்டது. மக்களிடம் பக்தி நன்றாகப் பரவுகிறதே ஒழிய ஒழுக்கம் வளர்கிறதா என்றால் இல்லை. எதிர் விளைவாகத் தான் இருக்கின்றது.மனிதனிடம் கடவுள் பக்தி என்பது எதற்காக வளர்க்கப்பட வேண்டும் என்றால், ஒழுக்கம் வளர்வதற்காகவும், சக ஜீவன்களிடம் அன்பு காட்டுவதற்காகவும் தான். ஆனால் பக்தி வளர்கிறதே ஒழிய ஒழுக்கம் தேய்ந்து கொண்டே தான் போகிறது. பக்தி என்பது போட்டி மனப்பான்மையில் தான் வளர்கிறது. ஒழுக்கம் குறைவது வருத்தம் தான் என்றாலும், […]