Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அறிவோம் ஆரோக்கியம்!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. இது பொருட்பாலில் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்.944 ஆவது குறளாக இருக்கும் இதன் பொருள், முன் உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்து , நன்கு பசி எடுத்த பிறகு , நமது உடலுக்கு ஏற்றவாறான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும் என்பது பொருள். உணவே மருந்து என்பது நமது பண்பாடு.அதையே தான் இரண்டாயிரத்து ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார். பசித்தும் உண்ண […]

Categories
இலக்கியம் தமிழ்

கபிலர் பேசுகிறார்!

என் அருமைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வணக்கங்கள். என் பெயர் கபிலன்.கபிலர் என்று தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவன். தோராயமாக தமிழ் படித்தவர்கள் திடுக்கென குழம்பலாம், கம்பனா? கபிலனா?நமக்குக் கம்பர் தானே தெரியும்?இவர் யார் கபிலர் என்று. என்னை நினைவுபடுத்ததத்தான் இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன். நான் குறிஞ்சித் திணையில் கவி பாடுவதில் பெயர் பெற்றவன்.குறிஞ்சித் திணை என்பது நினைவிருக்கிறது தானே?மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது. அதென்னப்பா ஓரவஞ்சணை?மற்ற நிலங்களான, முல்லை , மருதம் , நெய்தல் […]

Categories
இலக்கியம் கருத்து

அன்றும், இன்றும் , என்றும் திருக்குறள்!

திருக்குறளில் நாம் எவ்வளவோ நல்ல கருத்துகளைக் கேட்டு கடந்து வந்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நூலை , அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய சூழலில் பயன்படும் கருத்துகளைக் கொண்ட நூலை எப்படி எழுதியிருக்க முடியும் என்று தினம் தினம் நாம் அந்த நூலை நினைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் அதனுள் பொதிந்து கிடக்கிறது. இன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாமா? முதல் விஷயம். ஏய் தாய்க்கெழவி நீளமா பேசாத!அதாவது சொல்ல […]

Categories
இலக்கியம் தகவல்

தினுசு கண்ணா தினுசு!

பெயர் என்பது ஒரு மனிதனின், பொருளின், ஜீவராசிகளின் அடையாளம். மனிதன் மட்டுமல்ல, உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற அத்தனை பொருட்களுக்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு தனிப்பெரும் கூட உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் உண்டு. உதாரணம்: நாற்காலி. நான்கு கால்களை உடைய காரணத்தால் அது நாற்காலி என்று அழைக்கப்பட்டது. சில பெயர்களின் பின்னால் சுவாரஸ்யமான கதைகளும் இருக்கலாம். பழைய காதலன் காதலியின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைப் போல. சில பேர் குரு பக்தியின் காரணமாகவோ அபிமானத்தின் […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
இலக்கியம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கேடு காலத்தில் (கேடுகெட்ட) நண்பர்கள் – திருக்குறள் விளக்கம்

இனிய துவக்கம், முதல் வார்த்தை நல்ல வார்த்தையாக அமைய வேண்டுமென்பதற்கான இணைப்பு வாக்கியம் தான் அந்த இனிய துவக்கம். கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு என்று சில நேரம் நாம் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்திக்கும் போது சொல்வதுண்டு. கெட்டதுல என்ன பெரிய நல்லது நடந்துடப் போகுது? நம்ம உறவுக்காரங்கள்ல யாராவது ஒருவர் தவறும்பட்சத்தில், நீண்ட நாள் பேசாமலிருந்த மற்றொரு உறவுக்காரர் வந்து பழக நேரிடலாம். இது மாதிரியான அனுபவங்கள் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. இதே […]

Categories
இலக்கியம் தமிழ்

கம்பனின் கைவண்ணம்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம். கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல். பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது. அதுவும் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]

Categories
இலக்கியம் தமிழ்

இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரை

புத்தகப் பரிந்துரை. பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம். நிழல் கீழே விழாதா?கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் […]