Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பரவட்டுமே நல்லிணக்கம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய மனக்கசப்பு நமக்கும் நமது பங்காளி நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை அழித்தது நமது இந்திய அரசு.அதோடு நில்லாமல் நதிநீரில் பங்கு தர முடியாது என்ற ரீதியில் பாகிஸ்தானில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காகக் கூட இந்தியாவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

S.I.R- நமது உரிமை நிலைநாட்டப்படுமா?

SIR – Special Intensive Revision.சிறப்பு தீவிர திருத்தம் இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது? இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க. சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான். ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு? போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வராமல் காத்திடுவோமா?

வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

சாதித்த தங்க மங்கைகள்!

திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்ல!தூக்கிக் கொண்டாடவும் வைத்திருக்கும் இந்திய அணி. சிறிது நட்களுக்கு முன்பு கூட இது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்று தான் நம்மால் குறிப்பிடப்பட்டது.ஏனென்றால் அவ்வளவு பிரபலமாகவில்லை, நம் மனதில் அந்த அளவிற்குப் பதியவில்லை. ஆனால் இன்று ஆண்களுக்குப் பெண்கள் நிகரானவர்கள், ஏன் அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று சாதித்துக் காட்டுவோம் என்று 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

டாக்டருக்கே பல்பா? ப்ரௌவ்னியின் மகிமை!

படித்ததில் பிடித்தது! கிளினிக்கில்மூன்றரை வயது பெண் குழந்தைக்குதொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்கூடவே வாந்தி பரிசோதித்ததில்சீசனல் ஜூரம் என்று கண்டறிந்துஅதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன். மறுநாள்குழந்தையின் அம்மா “காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்” காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்துநான்காவது நாள் குணமாகி கூடவேமலம் கருப்பாகச் சென்றால்நம்ம புத்தி நேராகடெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.பாப்பா நன்றாக இருந்தார்.வாந்தி குணமாகி இருந்தது.வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

புயலில் பொரி சாப்பிடலாமா?

நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன. புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது? நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும். இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல […]

Categories
தகவல்

இந்திய இராணுவ வீரர்களின் உணவுமுறை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்வருட விடுமுறையில் என்னை சந்திப்பார்அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம். இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியதுசாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார். அவர் சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்.பல சமயங்களில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]