Categories
அரசியல் நினைவுகள்

காமராஜர் ஒரு பொக்கிஷம்!

படித்ததில் பிடித்தது ! காமராஜர் ஆட்சி காலத்துகிசு கிசு..! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம்,ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்ததிடீர் அனுமதி ! திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.அதை பரிசீலனையில்வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார். ‘உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

இப்படி இம்சை செய்யலாமா?

ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது. ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் […]

Categories
நினைவுகள்

மனம் ஒரு குழந்தை 👶

வெள்ளிக்கிழமை பேருந்துகள் கனவையும், ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்லும்! யார் எழுதியதோ தெரியவில்லை ஆனால் மிக ஆழமான வார்த்தைகள்.யதார்த்தமாக இந்த வார்த்தைகளைக் கடந்து விட முடியாது. ஆழந்து அனுபவித்து நினைவுகளின் வலியை உணராமல் இப்படி ஒரு பெரிய விஷயத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லி விட இயலாது. எனது சொந்த அனுபவத்தில் , ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு வந்து விட்டுத் திரும்பும் போது மனதில் அந்த நினைவுகளின் வலி இல்லாமல் இல்லை. அதிலும் வயதாக ஆக, […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தகர்க்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் , நினைவுகளும்!

அங்கே இடிக்கப்பட்டது கட்டிடமல்ல, பலரது நினைவகளின் கோட்டை. தரைமட்டமாக்கப்பட்டது தளமல்ல. பலரின் எதிர்பார்ப்புகள். நொறுக்கப்பட்டது செங்கற்கள் மட்டுமல்ல.பலரது இதயங்கள். என்னாங்க இது இவ்வளவு பில்டப்பு என்று யோசிக்கிறீர்களா? சென்னை வடபழனியில் இரண்டு பேமஸ் என்று வடிவேலு சொல்லுவார்.ஆனால் வடபழனி என்றால் இதையும் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது. ஏழைகளின் தோழி, சினிமா ரசிகர்களின் அன்புத்தாய், நடுத்தர மக்களை அன்போடு அரவணைக்கும் தங்கத் தாரகை, ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டிடமே இடித்துத் […]

Categories
கருத்து சினிமா தகவல் நினைவுகள்

மலை மனிதனின் கதை

மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை. அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.மலையைப் புரட்டவில்லை.நொறுக்கியே விட்டார். தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம். இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி. யார் இவர்? எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம். […]

Categories
கருத்து நினைவுகள்

எச்சரிக்கைகான நேரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது. இது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான கூற்று. உலகில் நாம் பிறந்த தேதிதியிலிருந்து இன்று வரை வியக்கத்தகுந்த பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.அதுவும் 1980-90 களில் பிறந்தவர்கள் காணும் மாற்றம் என்பது அளப்பரியது. கிட்டத்தட்ட மாயாஜாலம் போன்ற பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சாதாரண வானொலியில் துவங்கி இன்று தனித்தனியாக ஒவ்வொருவரும் பாடல் கேட்கும் இயர் பாட்ஸ் வரையிலும், பிலிம் போட்ட கேமராவில் துவங்கி இன்று ஏஐ புகைப்படம் வரையிலும், கருப்பு வெள்ளை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தலைவனுக்குப் பிறந்தநாள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. யானையின் தனித்துவம். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பார்கள், ஆனால் சிங்கத்திற்கு இந்தப் பொன்மொழி ஒத்துப்போகாது. இந்தப்பொன்மொழி உலகில் வாழ்ந்து மறைந்த கோடான கோடி மனிதர்களில் ஒருவருக்குத் தான் ஒத்துப் போகும். அப்படி ஒரு உன்னதமான மனிதன், தங்கத்திருமகன், தன்னிகரில்லாத் தமிழ்த்திருமகன், தன்னலமற்ற தலைவன், மக்கள் பற்றாளன், அன்புள்ளம் கொண்ட அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். அண்ணன் நடிகனாக இருந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஆகஸ்ட் 22, சென்னை தினம்!

ஆகஸ்ட் 22, சென்னைக்குப் பிறந்தநாள். சொந்த ஊர் தான் சொர்க்கம், சொந்த ஊரைத்தாண்டி வேறென்ன பந்தம் இருந்துவிடப் போகிறது வாழ்வில் என்ற கதையெல்லாம் சென்னைக்கு எடுபடாது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலுள்ள எல்லா ஊர்களிலும் உள்ள பெரும்பாலான ஆட்களுக்கு சென்னையோடு ஒரு பந்தம் இல்லாமல் இருக்காது. எனக்கும் அப்படித்தான். சிறு வயதில் மெட்ராஸ் என்ற ஊர் இருப்பதும், அந்த ஊருக்கு இரவு பேருந்தில் ஏறினால், காலையில் போய் தான் இறங்கலாம் என்றும், அங்கு சென்று நம்ம தெரு ஆட்கள் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]