Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்

முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது. நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது. முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட […]

Categories
கருத்து நினைவுகள்

இடைவேளை அவசியம்!

இடைவேளை- இடைவெளி அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம். எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா […]

Categories
நினைவுகள்

அன்பான வேண்டுகோள்!

சமூக இணையதளம் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் தான் என்றாலும், எனக்கு அது அப்படி இருந்தது இல்லை. அதிலும் குறிப்பாக முகப்புத்தகம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது. வெறுமனே பொழுதுபோக்கு என்றில்லாமல், எனது மனதிலிருந்த சோகங்களை எழுத்துகளின் மூலமாகப் பகிரத் துவங்கி , பிறகு சினிமா விமர்சனம், அரசியல் துணுக்குகள், தற்கால நிகழ்வுகள் பற்றிய கேலி விமர்சனங்கள், நல்ல கருத்துகள், சிந்தனைகள் என்று எனது எழுத்து மெருகூட்டப்பட்டது என்னவோ இந்த வலைத்தள பக்கத்தின் அறிமுகத்தினால் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
நினைவுகள்

கல்வித் தந்தை, கர்ம வீரர்!

ஜூலை 15, கல்வி நாள். நமது அருமை மாநிலத்திற்குக் கல்விக் கண் திறந்த கர்ம வீரர், கல்வித் தந்தை, படிக்காத மாமேதை ஐயா திரு.காமராஜரின் அவர்கள் பிறந்தநாள். பொற்கால ஆட்சி என்று இன்றுவரை போற்றப்படும் நல்லாட்சியைத் தந்த உத்தமர். கிங் மேக்கர் என்று இன்றளவும் அழைக்கப்படக்காரணம், நேரு அவர்கள் நோயுற்ற தருணத்தில் இருந்த போது இந்தியாவில் ஜனநாயகம் அவ்வளவு தான் என்று வெளிநாட்டினர் நினைத்த போது, காங்கிரஸ் கட்சியை சீராக வழிநடத்தி சாஸ்திரி, இந்திரா காந்தி என […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

கரைந்து போன கனவுகள்

எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வெட்டுவது போல விபத்துகள் நிகழ்ந்து மிகப்பெரிய பாதிப்பையும் துயரத்தையும் உருவாக்கி விட்டுச் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஆனால் சில மனிதர்களின் அலட்சியத்தால் விபத்துகள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சார்ந்த அக்காளும் தம்பியும் துடிதுடித்து இறந்து போவது என்பது மனதைத் துளைத்து விடும் தோட்டாக்கள் போன்றது. கடலூரில் பள்ளி வேனின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது என்பதில் பலரும் பலவிதமான கருத்துகளையும், செய்திகளையும் சொன்னாலும் கூட, நம் யாராலும் அந்த இழப்பை […]

Categories
நினைவுகள் மறைவு

குருவின் பாதங்களுக்குக் கண்ணீர் அஞ்சலி

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு தெய்வம் துணை நிற்காவிட்டாலும், மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒருபோதும் கைவிடுவதில்லை. சொல்லப்போனால் பலரது வாழ்வில் பல நேரங்களில் இந்த மூவரும் தான் தெய்வமாக நின்று வாழ்வைச் சிறப்பிப்பவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பின் போது போதித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தான். அதிலும் பாடம் மட்டும் நடத்தாமல் சற்றுக் கூடுதலாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நெருங்கிப் […]