Categories
கருத்து நினைவுகள்

எச்சரிக்கைகான நேரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது. இது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான கூற்று. உலகில் நாம் பிறந்த தேதிதியிலிருந்து இன்று வரை வியக்கத்தகுந்த பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.அதுவும் 1980-90 களில் பிறந்தவர்கள் காணும் மாற்றம் என்பது அளப்பரியது. கிட்டத்தட்ட மாயாஜாலம் போன்ற பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சாதாரண வானொலியில் துவங்கி இன்று தனித்தனியாக ஒவ்வொருவரும் பாடல் கேட்கும் இயர் பாட்ஸ் வரையிலும், பிலிம் போட்ட கேமராவில் துவங்கி இன்று ஏஐ புகைப்படம் வரையிலும், கருப்பு வெள்ளை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தலைவனுக்குப் பிறந்தநாள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. யானையின் தனித்துவம். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பார்கள், ஆனால் சிங்கத்திற்கு இந்தப் பொன்மொழி ஒத்துப்போகாது. இந்தப்பொன்மொழி உலகில் வாழ்ந்து மறைந்த கோடான கோடி மனிதர்களில் ஒருவருக்குத் தான் ஒத்துப் போகும். அப்படி ஒரு உன்னதமான மனிதன், தங்கத்திருமகன், தன்னிகரில்லாத் தமிழ்த்திருமகன், தன்னலமற்ற தலைவன், மக்கள் பற்றாளன், அன்புள்ளம் கொண்ட அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். அண்ணன் நடிகனாக இருந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஆகஸ்ட் 22, சென்னை தினம்!

ஆகஸ்ட் 22, சென்னைக்குப் பிறந்தநாள். சொந்த ஊர் தான் சொர்க்கம், சொந்த ஊரைத்தாண்டி வேறென்ன பந்தம் இருந்துவிடப் போகிறது வாழ்வில் என்ற கதையெல்லாம் சென்னைக்கு எடுபடாது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலுள்ள எல்லா ஊர்களிலும் உள்ள பெரும்பாலான ஆட்களுக்கு சென்னையோடு ஒரு பந்தம் இல்லாமல் இருக்காது. எனக்கும் அப்படித்தான். சிறு வயதில் மெட்ராஸ் என்ற ஊர் இருப்பதும், அந்த ஊருக்கு இரவு பேருந்தில் ஏறினால், காலையில் போய் தான் இறங்கலாம் என்றும், அங்கு சென்று நம்ம தெரு ஆட்கள் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்

முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது. நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது. முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட […]

Categories
கருத்து நினைவுகள்

இடைவேளை அவசியம்!

இடைவேளை- இடைவெளி அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம். எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா […]

Categories
நினைவுகள்

அன்பான வேண்டுகோள்!

சமூக இணையதளம் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் தான் என்றாலும், எனக்கு அது அப்படி இருந்தது இல்லை. அதிலும் குறிப்பாக முகப்புத்தகம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது. வெறுமனே பொழுதுபோக்கு என்றில்லாமல், எனது மனதிலிருந்த சோகங்களை எழுத்துகளின் மூலமாகப் பகிரத் துவங்கி , பிறகு சினிமா விமர்சனம், அரசியல் துணுக்குகள், தற்கால நிகழ்வுகள் பற்றிய கேலி விமர்சனங்கள், நல்ல கருத்துகள், சிந்தனைகள் என்று எனது எழுத்து மெருகூட்டப்பட்டது என்னவோ இந்த வலைத்தள பக்கத்தின் அறிமுகத்தினால் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]