Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

உலகின் மூத்த குடி – தொல்பொருள் சொல்லும் தமிழக வரலாறு

உலகின் மூத்தகுடி உன்னதமான எமது தமிழ்க்குடி என்று மார்தட்டிப் பெருமை பேச வேண்டிய தருணம் இது. அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி என்ற வரிகளைப் படித்து விட்டு வாய்ச் சவடால் என்று சொல்லும் காலம் மறைந்து விட்டது. சிந்து சமவெளி தான், இல்லை இல்லை, ஐரோப்பியா தான், அட அதுவுமில்லை, எகிப்துதான், அப்ப சீனா என்ன தக்காளியா என்று நாகரீகத்தின் முன்னோடி நாங்கள் தான் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வரலாற்றை எழுதி அதை ஒரு தலைமுறை […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பயணம்- போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு நன்றி

நமது கடந்த பதிவு ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளை. அதன் விளைவு, பண்டிகைகளுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது சற்று சிரரமமான காரியமாகி விட்டது. அரசுப்பேருந்துகளிலும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டீலக்ஸ் ரக சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் கூட, ஒரு சில மக்களுக்கு அந்தக் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டாம் என்ற எண்ணம். மகிழுந்து அதாவது கார் வைத்திருக்கும் மக்கள் ஆம்னிப் பேருந்தின் கட்டணத்தை மனதில் கொண்டு, 4 பேர் காரில் பயணித்தால், ஆம்னிப்பேருந்து கட்டணத்தை […]

Categories
நினைவுகள்

கடைசிப் பேருந்து.

எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும். அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம். இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான். கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நினைவுகள் – 2024 – ஒரு  பார்வை

நினைவுகள் என்பது சாபமா, வரமா? என்றால் அது அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று. எதைப்பற்றிய அல்லது எப்படியான நினைவுகள் என்பதைப் பொறுத்தே அது சாபமா அல்லது வரமா என்பது அமைகிறது. மகிழ்ச்சி தரும் நல்ல நினைவுகளோ அல்லது வருத்தம் தரும் துயர நினைவுகளோ இரண்டும் இரவு பகல் போல ஒன்றில்லாமல், இன்னொன்றில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டும் அதற்கு மாற்றில்லை. நல்ல சுகமான நினைவுகளும் இருந்தது. சில துக்கமான நிகழ்வுகளும் இருந்தது. அப்படி நாம் கடந்த அந்த […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

புத்தாண்டை வரவேற்போம்

புத்தம் புதிதாக பிரிண்டிங் பிரஸ் வாசனை நுகர்ந்து, சரஸ்வதியா, லட்சுமியா, பிள்ளையாரா, பெருமாளா என்று தேடித்தேடி எடுத்து ஆசை ஆசையாகத் தொங்க விட்ட நாட்காட்டி முழுதையும் கிழித்துத் தள்ளியாயிற்று. இன்று அது கலையிழந்து வெறும் எலும்புக்கூடாகத் தெரிகிறது. நாம் கடந்து வந்தது, ஒரு ஆண்டு என்று எளிதாகச் சொல்லிவிட இயலாது. 365 நாட்கள். 8760 மணி நேரங்கள். இன்னும் நிமிடம் மற்றும் நொடிகளில் கணக்கிட்டால் பெரிய வியப்பாகத்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும், பயனுள்ளதாக […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]

Categories
நினைவுகள் மறைவு

அப்பாவுடன் பயணம்- இனிய நினைவுகள்.

பயணம் என்றுமே இன்றியமையாத ஒன்று தானே?ஆறறிவு கொண்ட மனிதர்க்கு மட்டுமல்ல, பறவைகளும் கூட தங்கள் வாழ்நாளில் பயணம் மேற்கொள்வதை அறிவோமே? வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணம் உலக வரைபடத்தில் பல மாற்றங்களை உண்டு செய்தது.அப்படி உலக வரைபடம் மாறாவிடினும் ஒவ்வொரு பயணத்தின் போதும் நம் உள்ளம் குறைந்தபட்சம் மாறுபடுவது உண்மை தானே? என் தந்தையுடன் மேற்கொண்ட சில பயணங்களின் தொகுப்பை கதையாக்கி அசை போடுவதை, முடங்கி கிடக்கும் இந்த சமயத்தில் நான் ஆறுதலாக நினைக்கிறேன். எல்லாக் குழந்தைகளையும் போல […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
சினிமா நினைவுகள்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட சினிமா- சொல்லத்துடிக்குது மனசு

வித்தியாசமான கதை அம்சம் கொண்டதும், கநைகளுக்கு முக்கியத்துவம் தருவதுமான படங்கள் சமீபத்தில் தான் வருவதாகவும், பழைய படங்களில் பெரும்பாலானவை, கதாநாயகர்களுக்கு மாஸ் காட்சிகளும், சண்டையும், காதலும் என காட்சிகளைக் கொண்ட படமாகவே அமைந்ததாகவும் சினிமா ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது மட்டுமல்ல, 80,90 களிலும் அதுமாதிரியான படங்கள் வெளிவரத்தான் செய்தன என்பதை நிரூபிக்கும் படம் தான் 1988 ல் வெளிவந்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த […]