Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வறுமை தந்த அனுபவம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல. இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது. எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது. தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் […]

Categories
நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்!

பள்ளி ஆண்டு விழா! பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா. இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது. ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா. 1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட […]

Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.

வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம். அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன். திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart […]

Categories
கருத்து நினைவுகள்

வாசிப்பையும் நேசிப்போமே! – நினைவுகளைப் பற்றி – ஆசிரியர் குறிப்பு

இரவில் தூங்கும் முன் கதை சொல்லி, அறிவுரை சொல்லி, வியாக்கியானங்கள் பேசி தூங்க வைக்கும் தாத்தா பாட்டிகள் இங்கே இப்போது இல்லை. தாத்தாவும் ஃபேஸ்புக்கில் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார், பாட்டியும் கூட சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ சீரியல் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆங்ரி பேர்டாகவோ, டெம்பிள் ரன்னராகவோ மாறி ஒரு மாதிரியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதையை வாய் வழியாகச் சொல்லி செவி வழியாகக் கேட்ட போது குழந்தைகளிடையே இருந்த சிந்திக்கும், உருவகப்படுத்தும், கவனிக்கும் திறமை இப்போது […]

Categories
நினைவுகள்

கிடைக்குமா ரிவர்ஸ் பட்டன் – நீங்கா நினைவுகள்

சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது. மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான். ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்… புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம். மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம். கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று […]

Categories
நினைவுகள்

கொங்கு நாட்டில் ஓர் குதூகலப் பயணம்

பயணம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும் காரணி. ஒரு நல்ல சிந்தனை வேண்டுமென்றால் நல்ல புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாசித்துக் கிடைக்கும் சிந்தனையோடு, நல்ல பண்புகளும் வேண்டுமென்றால் ஒரு அனுபவஸ்தரிடம் பேசுங்கள். ஒரு அனுபவஸ்தரிடம் பேசும் போது கிடைக்கும் விஷயங்களை நேரடியாகப் பெற விரும்பினால் பயணம் சென்று பாருங்கள். ஒரு பயணம் என்பது உங்களுக்கு, பக்குவத்தையும், பண்புகளையும், முன்யோசனைகளையும், அனுபவத்தையும் தரும். சில நேரங்களில் அது எதிர்பாராத மறக்க முடியாத நல்ல அனுபவங்களாக அமையலாம். மேலும் பயணம் உங்களுக்குப் […]

Categories
நினைவுகள்

ஒலி வழி இன்பம்- ரேடியோ 📻 நினைவுகள்

பாடல்கள். பெரும்பாலான மனிதர்களின் ஆறுதல், இன்பம், துக்க மருந்து, சோகம் தீர்க்கும் நிவாரணி என சர்வரோகிணியாக இருப்பது/ இருந்தது பாடல்கள். இன்றும் பலரும் பாடல்களை மருந்து போல, கிரியா ஊட்டியாக, சோக நிவாரணியாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். வளரும், வருங்கால சந்ததி தான், அதிலிருந்து சற்று விலகிப் போவதாகத் தெரிகிறது. அதாவது பாடல்களை ஒலி வடிவில் கேட்பது ஒரு சுகம். அது ஒரு ரகம். ஆனால் இப்போது ஒரு பாடல் வெளியாகும் போதே அது யூடியூப் பார்வைகளைக் […]