Categories
தமிழ் நினைவுகள்

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்?

உறவாக வாழ்ந்தவர்கள் உடலாக மட்டுமே நம்மோடு வாழ்ந்தவர்கள் அல்ல. நமது நினைவுகளிலும், உயிரிலும் கலந்த அவர்கள் மண்ணுலகிலிருந்து பூத உடலை விட்டுப் பிரிந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர அதிக காலம் தேவைப்படுகிறது. ஆறுதலுக்காக மட்டுமே ஆன்மா என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருந்தால் இங்கே பாதி பேர் நடைபிணம் தான். அனுபவத்தில் பிறந்தது தான் ஆன்மா என்ற அந்த சொல். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவு உன்னதமான ஆன்மாவாக என்றென்றும் நம்மோடு வாழ்வதை […]

Categories
தமிழ் நினைவுகள்

எங்கள் தெரு கோவில் கொடை நினைவுகள்

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். 1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும். நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை. அப்படி என்னுடைய மனதிற்கு […]

Categories
ஆன்மீகம் தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க- நாசிக் நகர அழிகியல் – இரண்டாவது பாகம்

அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி. ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம். அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம். ராமாயண காவியத்தோடு மிகுந்த […]

Categories
தமிழ் நினைவுகள் மறைவு

இளைப்பாறுங்கள் சாம்ராட் – ரத்தன் டாடா

மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது. கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் […]

Categories
தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க – நாசிக் நகரம்

நாசிக் நகரம், இந்திய நாட்டின் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு நகரம். கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளஅழகான, சிறப்பான, தெய்வீகமான, பூர்விக வரலாறு கொண்ட நகரம். மேலும் இந்தியாவின் திராட்சை நகரம், மற்றும் ஒயின் எனப்படும் திராட்சை ரசத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிறப்பு உடையது. கிட்டதட்ட 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரத்தில் இருப்பதால் பகுதி மலைப்பிரதேசம் போல இனிய காலநிலை கொண்டது. இது […]

Categories
தமிழ் நினைவுகள்

தொலைக்காட்சி – அதிசய பெட்டியின் நினைவுகள் (பாகம் 2)

அரிதாகக் கிடைத்த ஒன்று அருகிலேயே இருக்க, இருக்க அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் என்பது தொலைக்காட்சிக்கும் பொருந்தும். தொலைக்காட்சி சம்பந்தமான நினைவுகளை முதல் பகுதியில் அளவளாவினோம். தொலைக்காட்சியின் மீது நான் கொண்ட அன்பை, எனது தனிப்பட்ட காதலை, என் குடும்பத்தின் மதிப்புமிக்க சொத்தைப் பற்றிய தனிப்பட்ட நினைவுகளை இந்தப்பகுதியில் பதிகிறேன். எங்கள் வீட்டில் இருந்தது ஒனிடா வகை வண்ணத் தொலைக்காட்சி, அதுவும் 20 இன்ச் அளவில். பெரும்பாலான வீடுகளில் கதவு வைத்த சாலிடர், பிபிஎல் போன்ற […]

Categories
தமிழ் நினைவுகள்

தொலைக்காட்சி – அதிசய பெட்டியின் நினைவுகள்

தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடே இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு தெருவில் ஓரிரு வீடுகளிலோ அல்லது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி அறையிலோ காணப்பட்ட அரிய வகை பொருள் இன்று மிகச்சாதாரண பொருளாகிப் போனது.அதிலும் அதில் ஒளிபரப்பபடும் விஷயங்களும், நேரமும் சிறிது காலத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது இப்போது மிக அபிரிமிதமாகிப் போனதால் அதற்கான மரியாதை குறைந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. முன்பெல்லாம் வாரம் ஒன்றோ அல்லது […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

பழைய பொக்கிஷ சினிமா – அந்த நாள்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதியில் அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டு , அவரது புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதை அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி, பேசவும் நினைக்கவும் ஆயிரமாயிரம் விஷயங்களும், பல சினிமாக்களும் இருந்தால் கூட, இன்று நாம் காணப்போவது சிவாஜி கணேசன் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அந்த நாள் என்ற படம் பற்றி. இன்றைய நவீன காலகட்டத்திலேயே பல […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

விபத்து- சிறுகதை (பலரை சிதைத்த கதை)

அருண், என்ஜினியரிங் முடித்த பட்டதாரி. வீட்டில் அருண் என்று தான் அழைப்பார்கள். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன். படிக்கும் போதே கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தான் படித்த படிப்பிற்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்வதில் அருணுக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனாலும் சரியான பயிற்சி கொடுத்துதான் வேலையில் வைப்பார்கள், சம்பளமும் நல்ல சம்பளம் என்பதால் அவனுடைய அப்பா, இந்த வேலைக்கு சேர சொல்லி தனது […]