Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

தியாகி இமானுவேல் சேகரனார்- குறிப்பு.

தியாகி இமானுவேல் சேகரனார்.(9/10/1924 – 11/09/1957). இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து, பிறகு தான் பிறந்த சமூகத்தின் நலனுக்காக சமூகப்பணியில் ஈடுபட்டு, இளம் வயதில் உயிர்துறந்த தியாகி. ஆசிரியர் மற்றும் வழக்கறிஞரான இவர் தந்தையிடமே பாடத்தையும் சமுதாய சிந்தனையையும் கற்றவர். சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமிகுந்தவராகத் திகழ்ந்தவர். தனது 18 ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார். தனது 19 ஆவது வயதில் இரட்டைக்குவளை ஒழிப்பு […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வன்முறை எதற்கும் தீர்வல்ல!

சில நினைவுகள் இனிமையாகவும், சில நினைவுகள் தீராத ரணமும் தரும் விதமாக அமைவது இயற்கை. அப்படி இனிமையாக அல்லாத நினைவுகள் நல்ல பாடத்தை தரும் என்பதில் ஐயமில்லை. சமகால வராலாற்றில் மறக்க முடியாத நாள் செப்டம்பர் 11,2001. உலகத்திற்கே தீவிரவாதத்திற்கு எதிரான பெரிய படிப்பினையைத் தந்த மிகக் கொடுமையான ஏற்றுக்கொள்ளப்படாத அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நாள். அமெரிக்காவிலிருந்த உலக வர்த்தக மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் பென்டகன் கட்டிடம் ஆகியவை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தாக்கப்பட்ட நாள். […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

மில்கா சிங்- பறக்கும் சீக்கியரின் நினைவுகள்

மில்கா சிங். (நவம்பர் 20,1929 – சூன் 18,2021) இந்திய தடகள வீரர். தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். […]

Categories
தமிழ் நினைவுகள்

சென்னையின் கிரீடம்- கத்திப்பாரா பாலம்

க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் . இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கிளி (கிழிந்த) ஜோதிடம் – அனுபவங்கள்

ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

கிராமத்து கசாப்புக் கடையின் நினைவுகள்

ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]

Categories
தமிழ் நினைவுகள்

ஊர் சுற்றலாம் வாங்க – காபி ஹவுஸ் நினைவுகள்

உலகம் விசித்திரமானது. பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு. அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

பணி நிறைவு – வாழ்வின் புதிய துவக்கம்

பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.

Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்

கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

Categories
தமிழ் நினைவுகள்

மனதை கவர்ந்த மாருதி 800

பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம். 1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம் இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார். அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து. […]