திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]
Category: தற்கால நிகழ்வுகள்

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]
மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]
நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]
மழை எச்சரிக்கை கூத்துகள். சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம். இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம். ஆம். இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு. முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. […]

பயணம் மற்றும் சுற்றுலா. இன்றைய தினத்தில் பயணம் மற்றும் சுற்றுலா என்பது மிகவும் யதார்த்தமாகிப்போன ஒரு விஷயமாக உள்ளது. இந்த விதமான மக்கள் தான் பயணிக்கிறார்கள், சுற்றுலா வருகிறார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுமே பயணிக்கத் துவங்கி விட்டார்கள். அதன் விளைவு தான் எங்கு நோக்கினும், கூட்டமும், நெரிசலும், சிக்கல்களும். ஒரு காலத்தில் வெள்ளியங்கிரி மலைப்பயணம் என்பது சீண்டப்படாத மிக அரிதானதாக இருந்தது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தின் காரணமாக கடந்த வருடம் லட்சக்கணக்கான ஆட்கள் […]
ஆசிரியர் பணியில் எனது தனிப்பட்ட அனுபவம் என்பது கசப்பாக இருந்த விதத்தை பகுதி 1 ல் பேசியிருந்தோம். இந்த பகுதியில் மற்ற சில அவலங்களைப் பற்றி பிரச்சினைகள் பற்றி பேசலாம். பொதுவாக எந்தவொரு வேலைக்கு சேரும் போதும், பட்டதாரிகளின் பட்டம் நிர்வாகத்தால் வாங்கி வைக்கப்படுவதில்லை. ஏன் மாவட்ட ஆட்சியாளராகவே பணியாற்றும் நபரிடமும், நேர்காணல் முடிந்த பிறகு, அவரது பட்டங்களை சோதித்து விட்டு அதைத் திருப்பி அளித்து விடுவார்கள். ஆனால் இந்த தனியார் கல்லூரிகளிலோ, அடமானம் போல நாங்கள் […]
ஆசிரியர் பணி – அவலப்பணி
இன்று ஒரு தலையங்கம் பார்த்தேன். அறிவை வளர்க்கும் ஆசிரியர் பணி என்ற தலைப்பில். அது சரிதான். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்றும் சொல்வடை உண்டு. ஏத்திவிடும் ஏணி, நகர்த்திவிடும் தோனி என்று செப்டம்பர் 5 ஆம் தேதி பெரிய பாராட்டுப் பத்திரமே நடக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால், உண்மையிலேயே ஆசிரியர்களின் நிலை என்ன? அதை யாரும் அறிந்து கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதும் இல்லை. நான் சொல்லவருவது தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் […]

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]