Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஏமாற்றப்படும் ‘பக்தி’ மான்கள்.

ஔவையே! சுட்டபழம் வேண்டுமா , சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய முருகன் கதை! ஐயா, 30 ரூ தேங்காய் வேணுமா அல்லது 3 லட்ச ரூபாய் தேங்காய் வேணுமா என்பது ட்ரென்டிங் கதை. ஆமாம் ஒரு தேங்காய், 3 லட்சம். அப்படி என்ன விஷேசம் அதில் எத்தனை பேருக்கு சட்னி வைக்கலாம் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். ஆன்மீகம், கடவுள் பக்தி என்பது மனிதனை நல்வழிப்படுத்தினால் சிறப்பு என்று சமீபத்திய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். (நடப்பு அதிசயம்). அதே […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான். தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள். ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது. […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி

பரனுர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த சாவடியின் கட்டண வசூலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தோம். இதே கேள்வியை இன்று MP ஒருவரும் எழுப்பியிருக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து இந்த கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். சுங்கச்சாவடிகளை இயக்குவது யார்?பணம் எந்தமுறையில் வசூலிக்கப்படுகிறது?இதை யார் நிர்ணயிக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பணம் வசூலிக்க உரிமம் இருக்கிறது? இது போன்ற கேள்விக்கான பதில்கள் பலருக்கும் தெரிவதில்லை. நமது முந்தைய […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தவெக மாநில மாநாடு பற்றிய சிறு தொகுப்பு.

தவெக – தமிழக வெற்றிக் கழகம். மிகப் பிரம்மாண்டமான மாநாடு நல்ல விதமாக நிகழ்ந்தது. ஆங்காங்கே சிறு பெரு விபத்துகள் நிகழ்ந்ததை அறிந்தோம். வருத்தங்கள். மற்றபடி எந்தவித குறைபாடுகளும் பெரிதாகத் தோன்றவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாநாட்டுக் கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தகவல். இதெல்லாம் போகப் போக சரி செய்து கொள்ள வேண்டும். சரி. மாநாடு எப்படி இருந்தது என்பதை அலசலாம். கொடி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தவெக வின் கொடி 100 அடி கம்பத்தில் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

த.வெ.க மாநாடு: தமிழுக்கு வந்த சோதனை

மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து- தகராறு வாழ்த்தா?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அதிகார துஷ்பிரயோகம்

நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]