Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இளம் தலைமுறையின் சீரழிவைத் தடுக்க!

90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு. இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை. பாக்கெட்டில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

மகர ஜோதி மர்ம ஜோதியா?

படித்துப் பகிர்வது! நக்கீரன் இதழில் வந்த கதை. சபரிமலை மகர ஜோதி மர்மம்…. 🟢🔴🟢 சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா? மகர ஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது? மகரஜோதி காண்பதற்காக புல் மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது- விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, மகர விளக்கும் மகர ஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திந்துச் செய்திருக்கலாமே? ( வெண்காரம் சம்பவம்)

சமூக வலைதளங்களின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலைபேசி மற்றும் சமூக வலைதள உபயோகங்கள் இல்லாத நபர்களாக இருப்பது அரிதாகி விட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு அநியாயமான உயிரிழப்பு இந்த சமூக வலைதள காணொளி காரணமாக நிகழ்ந்ததை அறிந்து வருந்தி முடிப்பதற்குள் நேற்று இன்னொரு செய்தி நெஞ்சை உலுக்கியது. உடம்பைக் குறைக்க வேண்டுமெனக் கருதி வெண்காரம் என்ற பொருளை அளவு தெரியாமல் உட்கொண்டு ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இந்த உயிர்த்தியாகம் நமக்கான பாடம்.

பிஞ்சுக் குழந்தைகளைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்தவனும் இருக்கிறான். பல பெண்களை ஏமாற்றி கற்பழித்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கிப் படம் எடுத்தவன் நீதிமன்ற வளாகத்தில் சிரித்தவாறு கையசைத்து விட்டு வாய்தாவுக்கு வருகிறான். இவர்களைப் போன்ற கேடுகெட்டவர்களின் மத்தியில், பல வக்கிர எண்ணங்களைச் சுமந்து கொண்டு வெளியே நல்லவன் போல, நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நாமும் கெட்டவன் தான் என்ற ரீதியில் வாழும் பலரும் நிறைந்த இந்த உலகில், ஒரு மனிதன் தன் […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையை மட்டும் எரிப்போம்.

உண்ண உணவு, உடுக்க இடை, இருக்க இருப்பிடம், இவை மட்டுமல்ல மனிதனின் அடிப்படைத் தேவைகள்.நல்ல குடிநீரும், தூய்மையான காற்றும் நமது வாழ்வாதாரம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமை. அப்படியிருக்கும் பட்சத்தில் தான் தரமான நல்ல குடிநீர் வழங்குவதில் அரசாங்கம் இத்தனை மெனக்கெடுகிறது. சமீபத்தில் இந்தூரில் குடிக்கும் நீரில் கழிவு நீர் கலந்து, சில உயிர்கள் போனது கண்டு நாம் எவ்வளவு வேதனை கொண்டோம்?அது அரசாங்கத்தின் தவறு என்பதால் எளிதாக அதன்மீது பழியும் போட்டு விட்டு துக்கம் அனுசரித்து […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதநேயத்திற்கு தண்டனையா?

மாயமாகப் போகும் மனிதநேயத்தையும் அன்பையும் கேள்வி கேட்டு இன்னும் காணாமல் போக்குகிறது நமது சட்டமைப்பு. சமீபத்தில் தெருநாய்கள் கட்டுப்பாடு சம்பந்தமான வழக்கு வாதம் உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த போது தெருநாய்கள் கட்டுப்பாடுகளைப் பற்றி உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு சில கேள்விகளை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. தெருநாய் கடித்து யாருக்காவது பிரச்சினைகள் வரும்பட்சத்தில், அதாவது ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விடப்பட்ட தெருநாய்களால் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஒரு மாநில […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஏதாவது செஞ்சுவிடு ஐயப்பா!

கார்த்திகை, மார்கழி என்றாலே சபரிமலை மற்றும் ஐயப்பன் சீசன் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. மேலும் இணையங்களிலும் , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் அருள்பாலிக்கத் துவங்கி விடுவார். மற்ற மாதங்களில் ஐயப்பனை மறந்தும் , மறைத்தும் விடுவார்களோ என்ற அளவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனைப் பற்றிய சம்பாஷனைகள் அதிகரிப்பது வழக்கம். இது கேலிக்காக அல்ல. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் எப்படியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்களோ அதே […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?

பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் […]

Categories
அரசியல் கருத்து சினிமா

பராசக்தி- திரை விமர்சனம்!

பொங்கல் படங்களில் எதிர்பார்க்ப்பட்ட படங்களில் ஒன்று வெளிவராமல் போனது.இன்னொரு படம் வெளிவந்து பல நேர்மறை மற்றும் எதர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 2026 பொங்கல் வெளியீடான பராசக்தி பற்றிய பதிவு தான் இது. இதனோடு வந்திருக்க வேண்டிய இன்னொரு படம் வராமல் போனதாலும், எங்கள் தலைவர் படத்துக்கே நீ போட்டியா என்று ஆரம்பத்தில் இருந்தே கூட இந்தப்படத்திற்கு ஒரு கடுமையான எதிர்ப்பும் எதிர்மறை விமர்சனமும் இருந்தது. அந்த எதிர்ப்பும் , எதிர்மறை விமர்சனமும், அதனோடு படம் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பண முதலைகளிடம் உஷார்.

பணம். இன்றைய நிலையில் உலகில் வாழும் அத்தனை ஆறறிவு மிருகங்கள் அனைவருக்கும் அடிப்படை நாதமே பணம் தான்.வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லாத குரங்கு இல்லை என்பதைப்போல, பணம் வேண்டாம், பணம் தேவையில்லை என்று சொல்லும் மனிதர்கள் இங்கு இல்லவே இல்லை என்பது தான் எழுதப்படாத உண்மை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மறதி வியாதி உள்ளவர்களும், 100 ல்0.00001 சதவீத வித்தியாசமான மனிதர்களைத் தவிர்த்து மீதி அனைவருமே பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடக்காரணம், உணவு , உடை […]