Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்களின் வரிப்பணம் விரயம்.

இடைத்தேர்தல் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது இந்த இடைத்தேர்தல்.சமீபத்தில் கூட திரு.ராகுல் காந்தி அவர்கள் தனது வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழ்ந்தது. இது ராகுல் காந்தி அவர்களின் கதை மட்டுமல்ல. எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதை செய்வது வழக்கம் தான். இந்த இடைத்தேர்தலானது ஒரு உறுப்பினர் உயிரிழந்து, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டாலோ, அல்லது குற்ற வழக்கில் சிறை […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்வில் முன்னேறுவது எப்படி- பதில் கிடைக்காது.

இந்தக் கட்டுரை ஒரு மனிதனின் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.கோர்வையாக இல்லாமல் போகலாம்.ஆனால் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். இத்தனை நம்பிக்கையோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்தக் கோபம் என்னுடையது தான். அந்த மனிதன் நான்தான். சமீபத்திய பிரபல பாடல் “யார்டா அந்தப் பையன், நான்தான் அந்தப் பையன்“ என்பதைப் போல, இன்று எனக்காக ஒரு கட்டுரை. என் கோபத்தின் வெளிப்பாடாக. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் நன்கு படித்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை முடித்து, சரியான […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே […]

Categories
கருத்து தமிழ்

பதிப்பாசிரியர் குறிப்பு : நினைவுகளை பற்றி – 03

நினைவுகள் வலைப்பக்கத்தின் நோக்கம், செயல்பாடு, மற்றும் இதற்கு பின்புறமாக இருக்கும் காரண, காரியங்களை தொடர்ந்து ஆராய இந்த ஆசிரியர் பக்கம். Oct-28-2024 அன்புள்ள வாசகர்களுக்கு, நினைவுகள் வலைத்தளம் துவங்கி நான்கு மாத காலத்தில், சின்ன சின்ன மைல்கற்களை கடந்து பயணித்து கொண்டு இருக்கிறது. ஒரு வார இதழ் அல்லது மாத இதழ் நடந்த வேண்டும் என்பது எனக்கொரு நீண்ட கால கனவு. என்னுடைய இளமையில், அதாவது சிறுவனாக நான் வாசித்தது எல்லாம் நியூஸ் பேப்பர்களும், வார இதழ்களும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
கருத்து தமிழ்

கற்ற வழி நிற்கிறோமா?

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக என்ற குறளை முதல் வகுப்புக்கும் முன்னரே படித்து விடுவதால் இந்தத் தலைமுறை கற்பவற்றைக் கற்ற பிறகு அதற்குத் தகுந்தாற் போல நிற்பதில்லை போல. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கல்வியை படிக்கும் இந்தத் தலைமுறை அதன்படி நடந்து கொள்கிறதா என்பதை நாம் அன்றாட செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளத்தானே செய்கிறோம். மேலும் கல்வி என்பது பொது ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும், அன்பையும் சக […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ்த்தாய் வாழ்த்து- தகராறு வாழ்த்தா?

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]

Categories
கருத்து தமிழ்

நுகர்வோர்வாதம்: விளம்பரங்கள் – விஷமங்கள்?

விளம்பர மோகத்தின் விளைவு நுகர்வுத் தூண்டல். நாம் முந்தைய பகுதியில் நம்மை ரசிக்க வைத்த விளம்பரங்கள் மற்றும் முட்டாள்தனமான விளம்பரங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை நம் மனதில் பதிந்து நமது மூளைக்கு இடும் கட்டளை. அந்த விளம்பரங்கள் உருவாக்கும் நுகர்வுத் தூண்டல். இது நமக்குத் தேவையா, இது நமது தகுதிக்கு ஏற்றதா? இது நமது அன்றாட பழக்கவழக்கத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஒத்துப்போவதா என்பதை எல்லாம் சிந்திக்காமல், குருட்டுத்தனமாக […]

Categories
கருத்து தமிழ்

கடுப்பேத்துகின்றனவா விளம்பரங்கள்

ஒரு குறிப்பிட்ட சலவை சோப்பு விளம்பரத்தின் அநியாயம் தாங்க இயலவில்லை.அதைப் பார்க்கும் முன்பு, நமது நினைவிலிருக்கும் பல விளம்பரங்களையும் ஒருமுறை அலசலாம். நமது சின்ன வயதில் வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பரப் பாடலைப் பாடாத ஆட்களே இருந்திருக்க மாட்டோம். சில விளம்பரங்கள் நமது மனதைக் கவர்ந்தவையாகவும் இருந்தன. Boost is the secret of our energy போல.. இன்றைய சூழலில் வியாபார போட்டிகள் அதிகரித்த காரணத்தால் பல விளம்பரங்களும் மக்களின் […]