Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழிக்கும் சினம்!

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். திருக்குறளில் அறத்துப்பால் பகுதியில் துறவறவியலில் 31 ஆவது அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளின் பொருளை அறியாதோர் எவருமிலர். ஆனால் நமது அன்றாட வாழ்வில் இதைப் பின்பற்றுகிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்பதே 90 சதவீத மக்களின் பதில். ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட சிலர் கோப்பப்படுவதும், அற்ப காரணங்களுக்காக கோபம் கொள்வதும், வந்த கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் செய்வதறியாது சில தவறுகளைச் செய்வதும் பலருக்கு அன்றாட […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஏமாறுவது இன்னும் எத்தனை காலம்?

ஒவ்வொரு அமாவாசையும் நமக்கு ஏதாவது ஒரு புது சங்கதியைத் தந்து கொண்டே இருக்கிறது. சென்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் வாளியில் கொடுக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தோம்.அதாவது தர்ப்பணம் என்பது மனநிறைவுடன் , மரியாதைக்காக பெரியவர்களை நினைத்துக் கொடுக்கப்படாமல், ஒரு பெயரளவிற்கு, நானும் கொடுக்கவில்லையே என்று பிறரைப் பார்த்து குற்ற உணர்ச்சியுடன், பத்தோடு பதினொன்றாக கொடுக்கப்படுவதை உணர்த்தியிருந்தோம். கிட்டத்தட்ட எனது நிலையும் அதுதான்.இந்த தர்ப்பண சமாச்சாரம் எல்லாம் சும்மா , நான் அதை செய்ய முடியாது என்று சொன்னால் […]

Categories
அறிவியல் ஆன்மீகம் கருத்து தகவல்

புரட்டாசி ஸ்பெஷல்!

கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.இது.இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும். லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே? ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

முயலுக்கு மூன்று கால்தானா?

2026 தேர்தலுக்காக பல கட்சிகளும் பலவிதமான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வெற்றிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ எந்தவித கூட்டணியும் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்ற அதே நிலையில் இருப்பதால் இந்தக் கூட்டணிக் கணக்கு குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனநிலையில், கூட்டணி அமைக்காமல் வெல்வது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட, நாங்கள் எங்கள் நிலைப்பாடில் இருந்து மாறுவதில்லை, ஆனால் வெற்றியும் வேண்டும் என்றால், அது […]

Categories
கருத்து நினைவுகள்

எச்சரிக்கைகான நேரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது. இது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான கூற்று. உலகில் நாம் பிறந்த தேதிதியிலிருந்து இன்று வரை வியக்கத்தகுந்த பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.அதுவும் 1980-90 களில் பிறந்தவர்கள் காணும் மாற்றம் என்பது அளப்பரியது. கிட்டத்தட்ட மாயாஜாலம் போன்ற பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சாதாரண வானொலியில் துவங்கி இன்று தனித்தனியாக ஒவ்வொருவரும் பாடல் கேட்கும் இயர் பாட்ஸ் வரையிலும், பிலிம் போட்ட கேமராவில் துவங்கி இன்று ஏஐ புகைப்படம் வரையிலும், கருப்பு வெள்ளை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் திருந்தலாமே?

திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளைக் கடந்து வந்திருப்போம் நாம்.இது திருடர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தவறு செய்யும் அனைவருக்கும் தான். மனிதனாகப் பிறந்து ஆறறிவோடு உலகின் மற்ற ஜீவராசிகளை ஒப்பிடும் போது உட்சபட்ச அதிகாரம் படைத்து உலகை ஆட்டிக்கொண்டிருப்பது போதாதா ?சக மனிதர்களையும் சங்கடப்படுத்தி , ஏய்த்து , கஷ்டப்படுத்தி தவறு செய்து வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம்.அப்படி தவறு செய்து வாழ்ந்த சாதிக்க என்ன இருக்கிறது? ஏற்கனவே பூமி பாரம் தாங்காமல் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வேண்டாம் பிரிவினை!

இந்தியா என்பது இறையாண்மை பூண்ட ,சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பது நமது அரசியலமைப்பு நமக்குக் கற்றுக் கொடுத்தது. ஒரு இந்தியக்குடிமகன் சமயசார்பற்று, மொழி , சாதி என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம், தொழில் செய்யலாம் என்பது நமது அரசியலமைப்பு நமக்குத் தந்த அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையானது இந்திய நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது நமது அரசியலமைப்பை உருவாக்கித் தந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் உட்பட்ட குழு […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

இது பண்புமல்ல, நமது பண்பாடுமல்ல!

நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தேவை பரிசோதனை!

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றேவேந்துஅமை வில்லாத நாடு. 74 ஆவது அதிகாரமாக ,பொருட்பால் பிரிவில் ,வரும் நாடு எனும் அதிகாரத்தில் வரும் இந்த்த் திருக்குறளின் விளக்கமானது, நாட்டில் தேவையான வளங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தாலும் அதன் அரசன் சரியில்லாத போது , அந்த வளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதே! இந்தத் திருக்குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அதிமுக கட்சித்தொண்டர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. தலைவனில்லா அணி தலையில்லா முண்டம் போல , […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்ன சார்? சேம் சைடு கோலா?

தமிழக ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து ஆளுநர் மிகச்சரியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது நேற்று அவர் ஆரோவில்லில் பேசிய உரையாகத்தான் இருக்கும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பல நேரங்களில் இங்கு ஆளும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவராகவும், முட்டுக்கட்டையாகவும் தான் இருந்திருக்கிறாரே ஒழிய ஆதரவாக எப்போதுமே இருந்தததாகத் தெரியவில்லை. பல சமயங்களில் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் அளவிற்குக்கூட இந்த மோதல் நிகழ்ந்திருக்கிறது.இப்போதும் கூட, ஒப்பதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் கடத்துவதாகவும், அது எத்தனை மாத வரைமுறை […]