Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கண்களைத் திறந்து விட்டாயா முருகா?

கடவுள் இருக்கான் குமாரு. என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா? காரணம் இல்லாமல் இல்லை. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பரவட்டுமே நல்லிணக்கம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய மனக்கசப்பு நமக்கும் நமது பங்காளி நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை அழித்தது நமது இந்திய அரசு.அதோடு நில்லாமல் நதிநீரில் பங்கு தர முடியாது என்ற ரீதியில் பாகிஸ்தானில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காகக் கூட இந்தியாவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வராமல் காத்திடுவோமா?

வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் […]

Categories
கருத்து சிறுகதை

ஆறறிவுள்ள மனிதராவோமா?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன கதை .தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள். இடம்: கோவில். நல்ல கூட்டமான கோவில். அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர். ஏங்க க்யூல வரக்கூடாதா , […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

டாக்டருக்கே பல்பா? ப்ரௌவ்னியின் மகிமை!

படித்ததில் பிடித்தது! கிளினிக்கில்மூன்றரை வயது பெண் குழந்தைக்குதொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்கூடவே வாந்தி பரிசோதித்ததில்சீசனல் ஜூரம் என்று கண்டறிந்துஅதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன். மறுநாள்குழந்தையின் அம்மா “காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்” காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்துநான்காவது நாள் குணமாகி கூடவேமலம் கருப்பாகச் சென்றால்நம்ம புத்தி நேராகடெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.பாப்பா நன்றாக இருந்தார்.வாந்தி குணமாகி இருந்தது.வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இது மிகவும் தவறு!

சமீபத்தில் ஒரு காணொளி காட்சியைக் காண நேர்ந்தது.ஒரு பெண் அரசு அதிகாரி, தன்னை அணுகி ஏதோ பணி நிமித்தமாக வந்திருந்த ஒரு நடுத்தர மதிப்புள்ள வயது மிக்க ஆறு, அதுவும் அந்தப் பெண்ணை விட வயதில் அதிகமான ஆளை நிற்க வைத்துக் கொண்டே வெகு நேரமாக , தனக்கு என்ன உணவு வேண்டும், தனது பணியாளர்களுக்கு என்ன உணவு வேண்டும், தனது வண்டி ஓட்டுனருக்கு என்ன உணவு வேண்டும் என்று நீளமான பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

அறிவில்லா கத்துக்குட்டி?

ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]