Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

இது பண்புமல்ல, நமது பண்பாடுமல்ல!

நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தேவை பரிசோதனை!

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றேவேந்துஅமை வில்லாத நாடு. 74 ஆவது அதிகாரமாக ,பொருட்பால் பிரிவில் ,வரும் நாடு எனும் அதிகாரத்தில் வரும் இந்த்த் திருக்குறளின் விளக்கமானது, நாட்டில் தேவையான வளங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தாலும் அதன் அரசன் சரியில்லாத போது , அந்த வளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதே! இந்தத் திருக்குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அதிமுக கட்சித்தொண்டர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. தலைவனில்லா அணி தலையில்லா முண்டம் போல , […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்ன சார்? சேம் சைடு கோலா?

தமிழக ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து ஆளுநர் மிகச்சரியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது நேற்று அவர் ஆரோவில்லில் பேசிய உரையாகத்தான் இருக்கும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பல நேரங்களில் இங்கு ஆளும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவராகவும், முட்டுக்கட்டையாகவும் தான் இருந்திருக்கிறாரே ஒழிய ஆதரவாக எப்போதுமே இருந்தததாகத் தெரியவில்லை. பல சமயங்களில் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் அளவிற்குக்கூட இந்த மோதல் நிகழ்ந்திருக்கிறது.இப்போதும் கூட, ஒப்பதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் கடத்துவதாகவும், அது எத்தனை மாத வரைமுறை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எல்லாம் 🍋 எலுமிச்சை பழத்தின் மகிமை

நாம் வழக்கமாக அடிக்கடி பேசும் விஷயம் தான். விஷயமும் பழையது தான். மூடநம்பிக்கை.அதை மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விதத்தில் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சிக்கும் விதத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் கண்களில் படுகிறது அல்லது காதுகளில் கேட்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய பிறகும் இன்னமும் மூடநம்பிக்கை என்பதை நாம் பின்பற்றுவது என்பது நமக்கு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணத்திற்கு, விவேக் அவர்கள் ஒரு நகைச்சுவையில், “என்னடா லாரிக்கு அடியில எலுமிச்சை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

திருடனுக்கே பலே திருடன்

வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள் தான் என்றொரு சொல்லாடல் உண்டு. நாம் அடிக்கடி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை வசை பாடுவது உண்டு.அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் அவர்கள் மோசமானவர்கள் என்று. வாங்குற சம்பளம் போதாதா, பதவியில இருக்கிற திமிரு என்று வலுவாக என்னென்ன சொல்லி வசைபாட முடியுமோ அதை அத்தனையையும் மறக்காமல் செய்கிறோம்.ஆனால் அந்த இடத்தில் நாம் இருந்தால் யோக்கியனாக இருப்போமா என்று கேட்டால் பதில் ? இல்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. சந்தர்ப்பம் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வீக் எண்ட் (வீக்) பிரச்சார வியூகம்.

அரசியல் களம் மிக அதிகமாக சூடு பிடிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்போட்டி மும்முனைப் போட்டி என்பது உண்மையா அல்லது மாயையா என்பது ஊர்ஜிதமாகாவிட்டாலும், மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தவெக என்ற அரசியல் கட்சியை மூன்றாவது போட்டியாளராக பதிவிட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கட்சியின் சார்பாக தொடர்ச்சியாக பெரிய செயல்பாடுகள் இல்லாதது அதற்கு மிகுந்த பின்னடைவைத் தான் ஏற்படுத்தி வைக்கிறது. மாநாடு முடிந்து ஓரிரு நாட்கள் தவெக தவெக என்று பேசிய வாய்கள் எதுவும் இப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை..காரணம் அந்த […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பூ வச்சிருந்தது குத்தமாடா?

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். நல்ல வாய்ப்புகளைத் தரும், நல்ல தருணங்கள் அமையும், நாட்கள் மகிழ்வானதாக நகரும். அந்த நேரங்கள் அப்படியே நீடித்து விடாதா என்று கூடத் தோன்றும். ஆனால் அது நீடிக்காது. பல நேரங்களில் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் சோதனை? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? என்று வடிவேலு புலம்பும் விதமாகத் தான் வாழ்க்கை நம்மை பாடாய் படுத்தும். சாலை ஓரத்தில் ஓரமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென ஓடி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பாகுபாடு- பைகளுக்கும் உண்டு!

புறக்கணிப்பு, அவமரியாதை , சிறுமைபடுத்துதல், ஒதுக்கி வைத்தல் போன்றவை இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாம் ஆறறிவு கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் மனித இனத்தில் தான் இவையெல்லாம் மிக அதிகமாக நிகழ்கிறதோ என்ற எண்ணம். குழந்தைகளின் மனதில் அது மாதிரியான ஏற்ற தாழ்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளிகளில் சீருடை என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய கால கட்டத்தில் , நாம் பிஞ்சு குழந்தைகளிடமே அந்த பாகுபாடு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை நமக்குத் தெரியாமலே விதைத்துக் கொண்டிருக்கிறோம். உருளைக்கிழங்கு செல்லக்குட்டி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மோசடி கதைகள்- தொடர்ச்சி

இணையதளம். இன்றைய தேதியில் 100 ல் 60க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு தன் கை கால், மூளை போல இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இணையதளம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, பொழுதுபோக்கு ஊடகங்களில் துவங்கி தகவல் ஊடகங்கள் வரை அனைத்தும் தான். இவை அனைத்தும் இந்த அளவிற்கு உபயோகத்தில் இருப்பதற்குக் காரணம், இவை கைபேசயிலேயே கிடைப்பது தான் இரும்புத்திரை படத்தில் அர்ஜூன் அவர்கள் செல்லும் வசனம் போல, முதன் முதலாக ராக்கெட் அனுப்ப உபயோகப்படுத்தப்பட்ட […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஒரு கைதியின் கருத்து.

இன்று ஒரு தினசரியின் வாசகர் கருத்து பக்கத்தில் ஒரு கட்டுரை பிரசுரிகரகப்பட்டிருந்தது. அந்த வாசகரின் பெயர், ரா.செல்வகுமார். முகவரி: தூக்குதண்டனைக் கைதி,மத்திய சிறைச்சாலை,திருநெல்வேலி. அதைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ சிறிய தாக்கம். ஒரு கைதி, அதுவும் தூக்கு தண்டனை கைதி என்றால், தன் வாழ்நாளை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆள். அவர், ஒரு தினசரிக்கு தனது மனதில் பட்ட உண்மையான கருத்தை எழுதி இந்த உலகத்தோடு உறவாட நினைக்கிறார். நினைத்தாலே நெகழ்ச்சியாக உள்ளது. அவர் […]