Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல. எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும். கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் […]

Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம். அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

உண்மை சுடுமெனில்?

உண்மை சுடுமெனில்? பொய் சொல்வது தவறில்லையே? வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். என்ற வள்ளுவனின் வாக்கைக் கருத்தில் கொள்ளலாமே! சில நேரங்களில் உண்மையை விட பொய் சிறப்பு என்பதை விளக்கும் குறள் தானே இது? திருக்குறளையே எத்தனை முறை தான் உதாரணமாகச் சொல்வது என்றால், வேறு சிலவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே! கண்ணு உனக்கென்னடா ராசா? நீ பாக்க ராசா மாதிரி இருக்க என்று தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்லும் பெற்றோர்களின் கூற்று பல இடங்களில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மூட்டைப்பூச்சியைக் கொல்ல வீட்டைக் கொளுத்தலாமா?

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம். அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல. இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு. அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு. சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது. அதில் ஒரு தாயார், எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக் குறிப்பிட்டு, […]

Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

இவர்கள் மட்டுமென்ன கிள்ளுக்கீரையா?

இன்று நான் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாத ஒரு சம்பவம். ஒரு உணவகத்திற்கு சென்று உணவுப் பொட்டலம் வாங்குவதற்காக பட்டியலை விசாரித்த்போது, அங்கே கல்லாவில் நின்றவர் , என்னிடம் சார் சார் என்று பதிலளித்து பணமும் பெற்றுக் கொண்டார். உணவுப் பொட்டலம் தயாராகும் முன்பு,ஒரு தேநீரோ காபியோ பருகலாம் என்று அதற்கும் ரசீதைக் கேட்டேன். காபிக்கு தனியாக ரசீதைத் தராதவர், வெளியே இருந்த அந்த காபி போடும் அம்மாவிடம், அலமேலு சாருக்கு ஒரு காபி போடு என்றார். […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

குழப்பங்களைத் தள்ளிவிடுவோம்.

சிறிது காலத்திற்கு முன்பு வரை வழக்கத்திலிருந்த, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். நம் மக்கள் குடத்தின் வாய் வரை தண்ணீர் பிடித்து விட்டு , அதில் சிறிது தண்ணீரை மொண்டு கீழே சிதறிவிட்டு அதன்பிறகு தூக்கிச் சும்ப்பது.. குடம் நிறையும் முன்பே குழாயை நிறுத்தும் பழக்கம் பெரும்பாலானோர்க்கு இல்லை. குடத்தில் அதிகபட்சமூக நிரப்பப்பட்ட அந்தத் தண்ணீர் போலத்தான் நமக்கு அன்றாடம் ஏற்படும் குழப்பங்களும்.. தேவையே இல்லாதது. சிந்திக்கும் போதெல்லாம், நல்ல யோசனையும் வரும், குழப்பமும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அப்பாவிகளின் பலிக்கு அப்பாவிகளை தண்டிப்பதா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த பாவத்திற்காக, அந்த நாட்டைச் சார்ந்த அப்பாவி மக்களைப் பழிவாங்குவதும் ஒரு விதத்தில் பயங்கரவாதம் தான். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கும் நோயாளிகள் உட்பட அனைவரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நடவடிக்கையும், பெரும்பாலான பாகிஸ்தான் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமும், பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் ஆன சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற நடவடிக்கை எல்லாம் மிக முட்டாள்தனமான மனிதநேயமற்ற செயல். 26 இந்தியர்களைக் கொன்ற […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மதங்களைக் கடந்து அன்பு பரவட்டும்.

இன்று நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சம்பவம், காஷ்மீரில் நடந்த படுகொலைகள் தான்.சுற்றுலா சென்ற பயணிகளை, லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடன்ட் ப்ரெண்ட்ஸ் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் எந்த மதம் என்று கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாய தாக்குதல் என்று பேசி, ஒரு மதத்திற்கு எதிராக இந்த பயங்கரவாத சம்பவத்தை அடிக்கோளிடுவது முறையல்ல. இஸ்லாமிய […]