Categories
கருத்து சினிமா

தலைவன் தலைவி – திரை விமர்சனம்

இரண்டு பறவைகள் காதலிப்பது அழகு தான். ஆனால் அந்தக் காதல் நிலையாக ஒரு மரக்கிளை, ஒரு பறவைக்கூடு, இதெல்லாம் அவசியம். மனிதர்களின் காதலும் அவ்வாறு தான்.நல்ல அன்பான கணவன் மனைவியின் அன்பும் உறவும் நீடித்து நிலைத்திருக்க, அவர்களுக்கு இடையிலான அன்பு மட்டும் போதாது. சுற்றமும், உறவும், நட்பும், குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை ஜாலியான வகையில் எடுத்துரைத்த படம் தலைவன் தலைவி. பார்த்த உடன் காதல், தெய்வீகமான காதல் என்று இழுக்காமல், பெண் பார்க்கும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படி ஒரு சான்றிதழ் பெற முடியுமா?

வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி. மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர். சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார். அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார். தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என் உடலோடு பேசிய தருணம்

நான் என் உடலோடு பேசிக்கொண்ட தருணம்.பொதுவாக வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு, சுமார் 8.5 கிமீ தூரம் எப்போதும் இருசக்கர வாகன பயணம் தான். ஏறி அமர்ந்து டுபு டுபு என்று முறுக்கினால், 30-45 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம். இடையில் ஒன்றிரண்டு மேம்பாலம், சில சிக்னல்கள், என்று பெரிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதை தான். நேற்றைய முன் தினம் அந்த 8.5 கிமீ சைக்கிளில் பயணிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு அமைந்தது. அப்போது அந்தப்பயணத்தில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

சாஞ்ஞியமா ? வியாபாரமா?

ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று. முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை. நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது. அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான். நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கிட்னி விற்பனைக்கு!

இங்கு குறைந்த விலையில் கிட்னி விற்பனைக்கு உள்ளது. தேவைக்கு அனுகலாம். இவ்வாறான ஒரு அதிர்ச்சி நிலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நிலவுவதாகத் தகவல். காரணம் வறுமை, தொழில் ரீதியான தாக்கம். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர் இதனைக் கண்டறிந்து புகார் அளித்துள்ளார். அங்கு விசைத்தறி தொழிலாளர்கள், நெசவாளர்கள் பலரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி இந்த தாங்கவியலா அநியாயம் நிகழ்ந்து வருகிறது. ஒரு கிட்னிக்கு 3 லட்சம் வரை […]

Categories
கருத்து சிறுகதை தற்கால நிகழ்வுகள்

எது உண்மையான திறமை?

ஒரு சிறுகதை. ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது. அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார். கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார். நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

மக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?

சமீத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்றைக் கண்டேன். அவரது அன்றாட உணவுப் பழக்கம் பற்றி அதில் பேசியிருந்தார். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காலை எழுந்தவுடன் ஒரு கப் ப்ளாக் காபியில் (கடுங்காபி) ஒரு கரண்டி நெய் விட்டுக் கலக்கிக் குடிப்பாராம். பிறகு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி. காலை உணவாக 4 முட்டை வெள்ளைக்கரு மட்டும்.11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஒரு ஜூஸ். மதியம் ஓரளவு பெரிய இரண்டு சிக்கன் துண்டுகள் (மசாலா, […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]