Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அவல நிலை

கல்லூரி, பள்ளி நிர்வாகம், பல்கலைக்கழக குழு, சமுதாயம், கொரோனா, இப்படி பலவும் அடித்து துவம்சம் செய்த ஆசிரியர் ( குறிப்பாக தனியார் பள்ளி, கல்லூரி) சமுதாயத்தை, இன்னும் மாணவர்கள் மட்டும் தான் அடிப்பது பாக்கி. அதுவும் இப்போது ஆங்காங்கே நிகழ்கிறது. ஒரு ஒழுக்கமான, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உழைப்பது தான் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்வில் செய்யும் தவறு போல! ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மூடப்பட்டால் அதன் தொழிலாளர் நலன் கருதி வழக்குத்தொடுக்கும் சங்கங்கள், […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒரு மாதிரியான உலகமிது!

ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்..நல்லவர்களும் இருக்கிறார்கள்.சுழன்றால் என்ன நின்றால் என்ன? நல்லவர்கள் பாதிக்கப்படுவார்களே? எனது கண்முன்னே நடந்த அநியாயம். பழையது என்றாலும் நினைவிலிருந்து நீங்காத ஒன்று. ஒரு சுமாரான அளவிலான காய்கறி கடையில், கல்லாவில் இருந்தது ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்…அவரிடம் வந்து ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை ஆசாமி, ஏதோ ஒரு பொருளை வாங்கிவிட்டு 2000 ரூ தாளை நீட்டினார்.. என்னப்பா இது 60 ரூ பொருளை வாங்கிட்டு 2000 தாளை தருகிறாயே என்று அந்த […]

Categories
கருத்து

கட்டம் எப்படி இருக்கிறது?

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எதற்காக? கணவன் மனைவி சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வதற்கு தான் ஜாதகப் பொருத்தமா? அல்லது வாழ்க்கை முழுதும் அந்த உறவு நிலைக்குமா என்பதை சோதிப்பதற்காகவா? சரி வீட்டில் சேர்ந்து வசிப்பது தான் முக்கியப்பிரச்சினை எனில் சென்னை போன்ற நகரங்களில், வீடுகளில் , விடுதிகளில் தங்கியுள்ள கூட்டங்கள் எந்த ஜாதகம் பொருந்தி வாழ்கிறார்களோ? தெரியவில்லையே!( தெரிந்த முகம், தெரியாத முகம், ஒரே இனம் , வேறு இனம் ஒரே பாலினம், வேறு பாலினம் என்ற […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சேட்டுகளுக்குக் கொண்டாட்டம்?

கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ? இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
கருத்து குட்டி கதை சிறுகதை

ஒவ்வொருவருக்கு ஒரு திறமை

ஒரு கதை ஒன்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு படகில், ஆற்றைக் கடக்க மூன்று மனிதர்கள் படகில் அமர்ந்தனர். மூவரும் நன்கு படித்த அளிவாளிகள்.ஒருவர் பேராசிரியர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் விஞ்ஞானி. படகோட்டி துடுப்புப் போட்டு படகை ஓட்ட, மூவரும் அமைதியாய் ஏன் வருவானென்று உரையாடத் துவங்கினார்கள். உலகின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள். அவர்கள் மூவரும் பேசிக் கொண்டதை வேடிக்கை பார்த்தவனாகப் படகோட்டி துடுப்பைப் போட அவர்கள் இவனிடம் மெல்லப்பேச்சுக் கொடுக்கிறரார்கள். “ஏம்ப்பா […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

சட்டமும் சட்டென்று செயல்படுவதில்லை.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் அதன் பாய்ச்சல் என்பதோ, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சாமானியன் என்றால் உடனடியாகப் பாய்ந்து விடுவதும், பணம் பதவியில் இருந்தால் கொஞ்சம் பக்குவமாகப் பாய்வதும் என்பது பழகி விட்டது. இன்று ஒரு தினசரியில் ,ஒரே பெட்டிக்குள் அடுத்தடுத்து இரண்டு குட்டிச் செய்திகள். இரண்டும் பெண்னை பலவந்தப்படுத்தியதும், பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பற்றிய செய்திகள் தான். இரண்டுமே சென்னையில் நிகழ்ந்த சம்பவம் தான். முதலாவது வடசென்னையிலும், இரண்டாவது துரைப்பாக்கம் பகுதியிலும் […]

Categories
கருத்து

நானும், கருப்பு நாயும்.

தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனிக்கும், மிருகத்திற்கும் , ஏன் உயிரற்ற பொருட்களுக்கும் கூட உண்டு. ஆம். சில பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற தேவை, சில பொருட்களை காற்றோட்டமாக வைக்க வேண்டும் என்ற தேவை. அதுபோல மனிதனுக்கும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தேவை உண்டு. பலருக்கும் பல தேவை. என்ன தேவை ? என்பதை அறிந்து அதை நிறைவேற்றுவது சேவை. அப்படி என்ன தேவை என்பதை அறியாமலே பலரும் பலருடனும் பலவிதமாகப் […]

Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல. எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும். கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் […]

Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]