Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு. ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர். குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. பசுமரத்தாணி போல என்ற வாக்கியங்கள் குழந்தைப் பருவத்தில், அதாவது இளம் வயதில் கற்றலை போதிப்பதற்கான வாக்கியங்கள். அதாவது இளம் வயதில் நல்ல விஷயங்களை, வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அதன் விளக்கம். எப்படி குழந்தைகள் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பித்துக் கொள்கிறார்களோ, அதேபோல, தன்னைச் சுற்றி இருக்கும் சமூகம் காட்டும் வக்கிரங்களையும், தீயவற்றையும் கூட எளிதாக உட்கிரகித்துக் கொள்கிறார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றத்தில் பேசப்படும் […]

Categories
இலக்கியம் தமிழ்

கம்பனின் கைவண்ணம்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம். கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல். பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது. அதுவும் […]

Categories
நினைவுகள்

பட்டப் பெயர்கள் – ஓர் அலசல்

பட்டப்பெயர்கள் என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான். சிலருக்குக் கடுமையான கோபமும் கூட வரும்.ஒருவர் நம்மைப் பட்டப்பெயர் கொண்டு அழைக்கும் போது அவருக்கு நம் மீது உரிமை உண்டு, நெடுநாள் பழகிய தொடர்புண்டு என்பதை உணர முடியும். பட்டப்பெயர்கள் கேலிக்கு தான் என்றாலும் ஒரு சிலருக்கு அது கடுமையான கோபத்தை வரவழைக்கும். சத்யராஜ் நடித்த மிலிட்டரி திரைப்படத்தில் அவரை மிலிட்டரி என்ற பட்டப் பெயர் கொண்டு அழைத்தால் எப்படி கோபப் படுவாரோ, 16 வயதினிலே படத்தில் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
ஆன்மீகம்

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு ஓடி, ஓடியே தரிசனம் செய்யும் ஒரு பாரம்பரிய முறை. இப்போது நடந்தோ ,ஓடியோ தரிசிக்க முடியாதவர்கள், இருசக்கர வாகனங்களிலோ, பெரிய வாகனங்களிலோ சென்று தரிசிப்பதையும் வழக்கமாக்கி விட்டனர். இந்த சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தைய நாள் துவங்கி, சிவராத்திரி அன்று முடிவடைகிறது.சரியாக 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 110 கிமீ நடந்தோ அல்லது ஓடியோ பயணித்து இந்த பணிரெண்டு சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள். இந்த ஓட்டத்தின் போது […]

Categories
ஆன்மீகம் தற்கால நிகழ்வுகள்

மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்பு

நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான். உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று. அதற்குப் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

குதூகலச் சென்னை- பீச் கிரிக்கெட் ஒளிபரப்பு அனுபவம்

சென்னை, என்று சொன்னாலே நம் மக்களிடமிருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் வரும். என்னப்பா எதுக்கெடுத்தாலும் சென்னை சென்னைனு. மத்த ஊர்ல இருக்கவம்லாம் மனுஷன் இல்லையானு, சென்னைக்கு சம்பந்தமில்லாத சென்னையின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சிலர் பேசுவதுண்டு. இவர்களாவது பரவாயில்லை. இன்னும் ஒரு சிலர் உண்டு, இங்கேயே வந்து வாழ்ந்து அனுபவித்து சம்பாதித்து விட்டு, இந்த ஊரையே, ஊரா இது? என்று கூறும் நன்றி கெட்ட ரகம். நம்ம சென்னை இதுக்கெல்லாம் கவலைப்படாமல் எத்தனை பேர் வந்தாலும் […]

Categories
சினிமா

D Ragavan -> Dragon  – திரை விமர்சனம்.

இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல. மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன். இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]