இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு. இந்தி மொழியைத் திணிக்காதே! ‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு. இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது. அப்படியிருக்கும் […]
Category: தமிழ்

ஆம் குழந்தைகள் அழுதுவிட்டன.நாம் என்ன செய்ய? ஒரு குடும்பமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒன்றுகூடும் போது, நமது உறவினர்களை கண்டுகளித்து உறவாடி மகிழும் போது மனதிலிருக்கும் பாரமெல்லாம் காணாமல் போகும். அந்தக்காலங்களில் ஏதாவது சின்ன சின்ன விஷேசமாக இருந்தாலும் மொத்தக் குடும்பத்தையும் கூப்பிட்டு விழாப்போல நடத்திய வழக்கம் உண்டு.விஷேச வீட்டாரின் வசதிக்கு ஏற்றார் போல, விருந்தும் மற்ற உபசரிப்புகளும் இருக்கும். விஷேச வீட்டினர் எத்தகைய வசதியோடிருந்தாலும், மொத்த சொந்தமும் வந்திருந்து விழாவை சிறப்பித்து விட்டுச் சென்ற வழக்கம் […]
காணாமல் போகும் அண்ணாச்சி கடைகள்

மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை. ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது. சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம். உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ […]

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்? சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை. எப்பேர்ப்பட்ட பெரிய […]
விடாமுயற்சி- விமர்சனம்

ஆயிரம் வெற்றிகளைக் கண்டவன் அல்ல நான்.ஆயிரம் தோல்விகளைக் கண்டவன். இது ஆயிரத்து ஒன்று என்று கூட சொல்லலாமோ? விடாமுயற்சி, வினையாக்கியதா ? பெரும்பாலான ரசிகர்களுக்கு இது வீண் முயற்சியாகத்தான் தோன்றுகிறதோ? ஆம்.ஹாலிவுட் தரத்திலான படம் தான். ஆனால் படத்தின் நீளம்? 151 நிமிடங்கள். 151 நிமிடங்கள் இருக்கும் ஹாலிவுட் படங்களில் ரசிகர்களைக் கட்டி வைத்திருக்க வேறு ஏதோ ஒரு மாயம் உள்ளே இருந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில் அந்த மாயம் உள்ளே இருந்தது போலத் தோன்றவில்லை. எல்லாம் கொஞ்சம் […]
சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]
யாரு படம் ஓடினாலும், ஹீரோ நாங்கதான்

தமிழ் சினிமாவில் எப்போதுமே இருபெரும் நடிகர்கள் மிகப்பிரபலமாகக் கோலோச்சுவார்கள். அவர்களின் ரசிகர்களுக்கிடையிலும் வாய்ச் சண்டையில் துவங்கி கைகலப்பு வரையெல்லாம் நிகழும். அப்படி முந்தைய கருப்பு வெள்ளை காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறையில்ரஜினி- கமல். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இடத்தில் தற்போது கோலோச்சும் இரு துருவங்கள் விஜய்- அஜித். முந்தையவர்கள் காலத்தை விட இவர்கள் காலத்தில் இணைய வளர்ச்சி காரணமாக இவர்களது ரசிகர்களுக்கிடையே வாய்க்காதகராறு சிறிதே அதிகம் தான். இவர்கள் படம் நேரடியாக மோதிக்கொண்டாலும் […]