Categories
கருத்து தகவல்

அறிந்து கொள்வோம்!

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் கிளினிக்கில்தாய் தனது தனையனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார். மகனுக்கு வயது ஆறு முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க எடை 20 கிலோ கிராம் இருந்தான். காலையில் இருந்து காய்ச்சல்மூக்கொழுகல்மூக்கடைப்புஇருமல்தொண்டை வலிஉடல் வலிதலை வலிஉடல் சோர்வுஎனசீசனல் வைரஸ் ஜுரத்திற்கான பொருத்தத்தில் பத்தில் எட்டு பச்சக் என்று அவனிடம் பொருந்தி இருந்தன. “காலையில் இருந்த காய்ச்சல் அடிக்குது சார். பெரியாஸ்பத்திரி ( அரசு மருத்துவமனை) காய்ச்சல் மாத்திரை வீட்ல இருந்துச்சு.காலைல ஒன்னு கொடுத்தேன்.கேக்கல மதியம் பாதி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்று ஓயுமோ இந்தப் போராட்டம்?

உலகின் மோசமான உயிரினம் மனித இனமே என்பது அன்றாடம் நிரூபிக்கப்படுகிறது. ஐந்தறிவு கூட மிருகங்கள் கூட தேவையின்றி இன்னொரு மிருகத்தைத் துன்புறுத்துவது கிடையாது .ஆனால் இந்த மனித இனம் மட்டும் தான் சாதி , மதம், இனம், மொழி, நாடு , கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு காரணங்களைக் காட்டி சக மனிதனைத் துன்புறுத்துவதும், ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொன்று குவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அறிவோம் ஆரோக்கியம்!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. இது பொருட்பாலில் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்.944 ஆவது குறளாக இருக்கும் இதன் பொருள், முன் உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்து , நன்கு பசி எடுத்த பிறகு , நமது உடலுக்கு ஏற்றவாறான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும் என்பது பொருள். உணவே மருந்து என்பது நமது பண்பாடு.அதையே தான் இரண்டாயிரத்து ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார். பசித்தும் உண்ண […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

வாழ்ந்தா இப்படி வாழனும்

அஜித் பற்றி நான் படித்து ரசித்தது! 2025-இல் எனது முதல் பதிவே, “Be Like Ajith” என்பதுதான். அதுபற்றி குறிப்பில் சொல்கிறேன். இப்போது சொல்ல வருவது. நேற்று நடந்த ஒன்றைப்பற்றி. நேற்று நண்பர் குடும்பத்தோடு வெளியே சென்றிருக்கையில், பிரபலங்களின் வாழ்க்கை + தத்துவம் பற்றியா பேச்சு வந்தது. “எல்லா மனுஷனுக்கும் பணம், புகழ்தான் ரொம்ப முக்கியம்..அத நோக்கித்தான் எல்லாருமே ஓடறோம்..!” “இருக்கலாம்…ஆனா அப்படி பணம், புகழ் இதெல்லாம் அடைஞ்சவங்க தங்களோட கடைசி காலத்துல சொன்னது என்ன தெரியுமா..?” […]

Categories
சினிமா

ஆர்யன் (AARYAN) – திரை விமர்சனம்.

பொதுவாக அந்தந்த வாரங்களில் படங்களைப் பார்த்து விட்டு அதைப்பற்றி எழுதிவிடுவது தான் நமது வழக்கம்.ஆனால் இந்த முறை போன வாரம் வெளியான படத்தைப் பற்றி எழுதுகிறோம். இந்தப்படத்தைப் பற்றி பல விமர்சனங்களும் வந்து விட்டன.ஆனாலும் நாம் எழுதக் காரணம், அந்த விமர்சனங்களில் இருந்து சிறிய மாறுபாடு , கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால் தான். விஷ்ணு விஷால் மற்றும் செல்வராகனவனின் நடிப்பில் வெளியான ஆரியன் (AARYAN) திரைப்படம் பற்றிய பதிவு தான் இது.பெரும்பாலான விமர்சனங்களில் இந்தப்படம் நல்லாதான் […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கண்களைத் திறந்து விட்டாயா முருகா?

கடவுள் இருக்கான் குமாரு. என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா? காரணம் இல்லாமல் இல்லை. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பரவட்டுமே நல்லிணக்கம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய மனக்கசப்பு நமக்கும் நமது பங்காளி நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை அழித்தது நமது இந்திய அரசு.அதோடு நில்லாமல் நதிநீரில் பங்கு தர முடியாது என்ற ரீதியில் பாகிஸ்தானில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காகக் கூட இந்தியாவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் […]

Categories
சிறுகதை

துணிந்து செய்!- சிறுகதை

படித்ததில் பிடித்தது தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழிலதிபர் ஒரு காலத்தில் ஒரு பெரிய வைரத்தை வாங்கினார் – ஒரு முட்டையின் மஞ்சள் கரு அளவு. ஆனால் கல்லில் ஒரு விரிசல் ஓடுவதைக் கண்டுபிடித்தபோது அவரது உற்சாகம் விரைவில் ஏமாற்றமாக மாறியது. ஒரு தீர்வை எதிர்பார்த்து, அவர் அதை ஆலோசனைக்காக ஒரு நகைக்கடைக்காரரிடம் சென்றார். நகைக்கடைக்காரர் அந்த வைரத்தை கவனமாகப் ஆராய்ந்து, “இதை இரண்டு சரியான வைரங்களாகப் பிரிக்கலாம், ஒவ்வொன்றும் அசல் கல்லை விட அதிக மதிப்புள்ளவை. ஆனால் ஒரு […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

S.I.R- நமது உரிமை நிலைநாட்டப்படுமா?

SIR – Special Intensive Revision.சிறப்பு தீவிர திருத்தம் இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது? இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க. சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான். ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு? போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வராமல் காத்திடுவோமா?

வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் […]