Categories
கருத்து நினைவுகள்

எச்சரிக்கைகான நேரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது. இது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான கூற்று. உலகில் நாம் பிறந்த தேதிதியிலிருந்து இன்று வரை வியக்கத்தகுந்த பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.அதுவும் 1980-90 களில் பிறந்தவர்கள் காணும் மாற்றம் என்பது அளப்பரியது. கிட்டத்தட்ட மாயாஜாலம் போன்ற பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சாதாரண வானொலியில் துவங்கி இன்று தனித்தனியாக ஒவ்வொருவரும் பாடல் கேட்கும் இயர் பாட்ஸ் வரையிலும், பிலிம் போட்ட கேமராவில் துவங்கி இன்று ஏஐ புகைப்படம் வரையிலும், கருப்பு வெள்ளை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் திருந்தலாமே?

திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளைக் கடந்து வந்திருப்போம் நாம்.இது திருடர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தவறு செய்யும் அனைவருக்கும் தான். மனிதனாகப் பிறந்து ஆறறிவோடு உலகின் மற்ற ஜீவராசிகளை ஒப்பிடும் போது உட்சபட்ச அதிகாரம் படைத்து உலகை ஆட்டிக்கொண்டிருப்பது போதாதா ?சக மனிதர்களையும் சங்கடப்படுத்தி , ஏய்த்து , கஷ்டப்படுத்தி தவறு செய்து வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம்.அப்படி தவறு செய்து வாழ்ந்த சாதிக்க என்ன இருக்கிறது? ஏற்கனவே பூமி பாரம் தாங்காமல் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வேண்டாம் பிரிவினை!

இந்தியா என்பது இறையாண்மை பூண்ட ,சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பது நமது அரசியலமைப்பு நமக்குக் கற்றுக் கொடுத்தது. ஒரு இந்தியக்குடிமகன் சமயசார்பற்று, மொழி , சாதி என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம், தொழில் செய்யலாம் என்பது நமது அரசியலமைப்பு நமக்குத் தந்த அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையானது இந்திய நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது நமது அரசியலமைப்பை உருவாக்கித் தந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் உட்பட்ட குழு […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

இது பண்புமல்ல, நமது பண்பாடுமல்ல!

நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தேவை பரிசோதனை!

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றேவேந்துஅமை வில்லாத நாடு. 74 ஆவது அதிகாரமாக ,பொருட்பால் பிரிவில் ,வரும் நாடு எனும் அதிகாரத்தில் வரும் இந்த்த் திருக்குறளின் விளக்கமானது, நாட்டில் தேவையான வளங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தாலும் அதன் அரசன் சரியில்லாத போது , அந்த வளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதே! இந்தத் திருக்குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அதிமுக கட்சித்தொண்டர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. தலைவனில்லா அணி தலையில்லா முண்டம் போல , […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

இசை அரசன் 👑-50

ராஜாவுக்கு இன்னொரு மணிமகுடம்- இளையராஜா 50. இசையால் வசமாகா இதயம் உண்டோ, இறைவனே இசை வடிவம் எனும்போது, தமிழ் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்ற பாடல் வரிகள் உண்டு. இந்தப் பாடல் வரிகளை ஊர்ஜிதப்படுத்தியது இசைஞானி, இசை அரசன், பெயரிலேயே ராஜாவைக் கொண்ட இளையராஜா என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமா உலகின் சிறந்த பாடல்கள் என்றால் அதில் தவிர்க்க முடியாத, தலைசிறந்த பல பாடல்களில் இவர் பாடலும் இடம்பெற்றிருக்கும் என்பதும், இரண்டு அல்ல மூன்றாவது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்ன சார்? சேம் சைடு கோலா?

தமிழக ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து ஆளுநர் மிகச்சரியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது நேற்று அவர் ஆரோவில்லில் பேசிய உரையாகத்தான் இருக்கும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பல நேரங்களில் இங்கு ஆளும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவராகவும், முட்டுக்கட்டையாகவும் தான் இருந்திருக்கிறாரே ஒழிய ஆதரவாக எப்போதுமே இருந்தததாகத் தெரியவில்லை. பல சமயங்களில் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் அளவிற்குக்கூட இந்த மோதல் நிகழ்ந்திருக்கிறது.இப்போதும் கூட, ஒப்பதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் கடத்துவதாகவும், அது எத்தனை மாத வரைமுறை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எல்லாம் 🍋 எலுமிச்சை பழத்தின் மகிமை

நாம் வழக்கமாக அடிக்கடி பேசும் விஷயம் தான். விஷயமும் பழையது தான். மூடநம்பிக்கை.அதை மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விதத்தில் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சிக்கும் விதத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் கண்களில் படுகிறது அல்லது காதுகளில் கேட்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய பிறகும் இன்னமும் மூடநம்பிக்கை என்பதை நாம் பின்பற்றுவது என்பது நமக்கு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணத்திற்கு, விவேக் அவர்கள் ஒரு நகைச்சுவையில், “என்னடா லாரிக்கு அடியில எலுமிச்சை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

திருடனுக்கே பலே திருடன்

வாய்ப்புக் கிடைக்காத வரை எல்லோரும் நல்லவர்கள் தான் என்றொரு சொல்லாடல் உண்டு. நாம் அடிக்கடி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை வசை பாடுவது உண்டு.அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் அவர்கள் மோசமானவர்கள் என்று. வாங்குற சம்பளம் போதாதா, பதவியில இருக்கிற திமிரு என்று வலுவாக என்னென்ன சொல்லி வசைபாட முடியுமோ அதை அத்தனையையும் மறக்காமல் செய்கிறோம்.ஆனால் அந்த இடத்தில் நாம் இருந்தால் யோக்கியனாக இருப்போமா என்று கேட்டால் பதில் ? இல்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. சந்தர்ப்பம் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வீக் எண்ட் (வீக்) பிரச்சார வியூகம்.

அரசியல் களம் மிக அதிகமாக சூடு பிடிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்போட்டி மும்முனைப் போட்டி என்பது உண்மையா அல்லது மாயையா என்பது ஊர்ஜிதமாகாவிட்டாலும், மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தவெக என்ற அரசியல் கட்சியை மூன்றாவது போட்டியாளராக பதிவிட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கட்சியின் சார்பாக தொடர்ச்சியாக பெரிய செயல்பாடுகள் இல்லாதது அதற்கு மிகுந்த பின்னடைவைத் தான் ஏற்படுத்தி வைக்கிறது. மாநாடு முடிந்து ஓரிரு நாட்கள் தவெக தவெக என்று பேசிய வாய்கள் எதுவும் இப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை..காரணம் அந்த […]