Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

Categories
கருத்து

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதற்குத்தானா இந்தப்பாடு?- கிளாம்பாக்கம்   பேருந்து முனையப் பிரச்சினைகள்

எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காணாமல் போன உணவுவிலைப் பட்டியல்- சூட்சமம் என்ன?

உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

தேவையா இந்த அவலம்? – ஏகாதேசி நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு

நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]

Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார்? போதுமா இது? – சிறு குற்றங்களின் தண்டனை விகிதம்

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

நீதி நிலைநாட்டப்பட்டது

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]

Categories
கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

என்று தணியுமோ இந்த மாய மோகம்.

என்று தணியுமோ? இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது. கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான். என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்? ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் […]