Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பயனாளர்களே இது மரியாதையல்ல!

இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது . அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள். சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர். இதை விளம்பரப்படுத்தி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!

அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிப்பதும், அங்கே நம்மால் சமாளிக்க முடியாது, நமக்கெல்லாம் அது சரியா வராது என்றும் இன்றளவிலும் பல மக்கள் மனிதில் ஆணித்தரமாக நம்புகின்றனர். இது உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது.அரசு மருத்துவமனைகளின் கடைநிலை ஊழியரில் துவங்கி ஒரு சில மருத்துவர்கள் வரை இப்படி மக்கள் நினைப்பதற்குக் காரணமாகவும் நடந்து கொள்ளத் தான் செய்கின்றனர். தான் அரசு வேலையில் இருப்பதால் ஒரு திமிரான நடைமுறை, ஓசியல மருத்துவம் பாக்க வந்த உனக்கென்ன மரியாதை என்ற […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஏமாறலாமா?

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன. நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

சினிமாவை அரசியல் ஆக்க வேண்டாமே!

சினிமா . தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி. மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது. ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஓய்வூதிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் பூத்த பொன்னாள். மீண்டும் ஓய்வூதியம் என்ற அறிவிப்பு. அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று அறிவிப்பு. இனிமேல் மண்டும் அரசு ஊழியர்களுக்கு அதே பழைய ஓய்வூதியம்.அதாவது 30 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்களுக்கு அவர்களின் கடைசி மாத வருமானத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும், TAPS, அதாவது Tamilnadu Assure Pension Scheme என்ற பெயரில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உனக்கென்னப்பா கவர்மென்ட் வேலை […]

Categories
கருத்து சினிமா தகவல்

வென்று காட்டுவோம் அல்லது முயன்றே மடிவோம்!

நாம் வாழும் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?இது எல்லோரின் மனதினுள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு பதில் என்னவாக இருக்குமென்றால், சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும், மன நிறைவோடு வாழ வேண்டும், பணம் செல்வாக்குடன் வாழ வேண்டும், ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், பிறருக்கு உபயோகமாக வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும், பிரபலமாக வாழ வேண்டும் என்று பலவிதமான பதில்களும் வரலாம். ஒவ்வொன்றும் வேறு வேறு மனநிலை கொண்ட […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையின் விபரீதம்.

ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

மனிதர்கள் மிருகமாகலாம், ஆனால் ஒருபோதும் மிருகங்கள் மனிதனாக முடியவே முடியாது.ஏனென்றால் அவற்றிற்கு ஆறாம் அறிவு கிடையாது.அவைகளுக்கு நாகரீகம் தெரியாது. விஞ்ஞான வளர்ச்சி புரியாது. அதை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் தெரியாது. மிருகங்கள் தனது சுபாவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது கடினம். ஒரு அழகான மானைப் பார்த்தால் சிங்கம் ரசிக்குமா? அல்லது புசிக்குமா? இயற்கையின் படைப்பு மான்களைப் புசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை சிங்கங்கள் . அப்படியே தான் இன்றளவிலும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவை- அடிப்படை ஒழுக்கம்!

தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும். தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட […]

Categories
கருத்து சிறுகதை தகவல் தற்கால நிகழ்வுகள்

சம வேலைக்கு சம ஊதியம்.

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார். அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு. ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து […]