Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

நல்லதைப் பாராட்டு – காட்பரீ விளம்பரம் உணர்த்தும் உண்மை

அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

மும்மொழித் தகராறு- மத்திய மாநில அரசுகளின் தவறு.

இன்று அல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இதுதான் அரசியல் பரபரப்பு. இந்தி மொழியைத் திணிக்காதே! ‘இந்தி மொழியைத் திணிக்காதே’ என்று துவங்கி, ‘இந்தி தெரியாது போடா’ வரை வந்துவிட்டோம்.இப்போது மீண்டும் மத்திய அரசிடமிருந்து இதே மாதிரியான ஒரு போக்கு. இதில் ஆராய வேண்டும் என்றால், கல்வி என்பது மத்திய பட்டியலிலோ, மாநிலப் பட்டியலிலோ இல்லை. அது பொதுப்பட்டியல். அதன் அடிப்படையில் ஒரு தனி மாநிலத்திற்கு அதன் கல்வித்திட்டத்தைக் கட்டமைத்துக் கொள்ள நமது சட்டம் உரிமை அளித்திருக்கிறது. அப்படியிருக்கும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ?

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஒரு குடிமகனின் கருணை மனு.

இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை. ஒரு கிராம மக்கள் எழுதும் மனு. ஐயா, வணக்கம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று. சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

வளர்ச்சி எனும் பேரழிவு – போபால் யூனியன் கார்பைடு பின்விளைவுகள்

நிகழ்ந்த அந்த மறக்க முடியாத பேரழிவும், நிகழும் இப்போதைய விளைவுகளும், வளர்ச்சி என்ற பெயரில் தான் முதலில் துவங்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஏதோ ஒரு பெயரில் தான் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எலிகளின் மீது சோதனை ஓட்டம் போல வளரும், வளராத நாடுகளில் மக்கள் தொகையுள்ள நகரங்களில் செயல்படுத்தப்படுகின்றன. நான் இங்கே பேசுவது போபால் விஷவாயு சம்பவத்தை உருவாக்கிய யுனியன் கார்பைடு நிறுவனத்தைப்பற்றி தான். விவசாய வளர்ச்சி […]

Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மை.

இதை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிப்பதா? கோபம் கொள்வதா? வருத்தப்படுவதா? இல்லை பரிதாபப்படுவதா? இது எல்லாமே இந்த விஷயத்தில் அடக்கம். தமிழ்நாட்டின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே ஒரு இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இது முதல் சம்பவம் அல்ல என்பது. ஒரு பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில், அதுவும் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள், ஒருவன் இந்த மாதிரியான பாலியல் […]